தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் ஈபிஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
“மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான்.
இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.
Sridevis stardom was well deserved says KamalHaasan