தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துபாய் நாட்டில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு அம்பானி அனுப்பிய தனிவிமானம் மூலம் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.
இதையறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர், இறுதியஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.
அவரது உடல் போனி கபூருக்குச் சொந்தமான செலிபிரேஷன் கிளப் வளாகத்தில் காலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
பொது மக்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் இரவு பகலாக வந்து காத்திருந்தர்.
பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் விஐபிக்களும் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மதியம் 3 மணியளவில் செலப்ரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.
கபூர் குடும்ப வழக்கத்தின்படி சேலை, பாரம்பரிய தங்க ஆபரணங்கள் மாலை அலங்காரத்துடன் ஸ்ரீதேவியின் பூத உடலை தாங்கி செல்லும் வாகனத்தை காண சாலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பிற்பகல் 4.30 மணியளவில் வைல் பார்லே சேவா சமாஜ் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.