தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி.
இவர்கள் எல்லாம் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து ஏமாற்றிவிட்டனர் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு திரைப்படமாக எடுக்கவுள்ளாராம் ஸ்ரீரெட்டி.
இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.
அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தை 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்குகின்றனர்.
இதில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்த பிரபலங்கள் பலரும் இடம் பெறுவார்கள் என்றும் அந்த நிஜ காட்சிகளை இதில் காட்சிகளாக வைக்க திட்டமிட்டுள்ளதாக இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் ஸ்ரீரெட்டி.