தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒரு சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த போதிலும் சிலர் இதனை ஓபனாக ஒப்புக் கொள்கின்றனர்.
அண்மையில் பல தயாரிப்பாளர்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை அடிக்கினார் நடிகை ஸ்ரீரெட்டி.
இவர் வெளியிட்ட திரை பிரபலங்கள் பட்டியலில் நான் ஈ பட புகழ் நடிகர் நானியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை தற்போது நானி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பட்டியலில் நடிகை ஸ்ரீரெட்டியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஆனால், ஸ்ரீரெட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறியதாகவும், அதனால் இப்போது ஸ்ரீரெட்டியை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் மீண்டும நானி – ஸ்ரீரெட்டி மோதல் மீண்டும் வலுவடைந்துள்ளது.
நானி என்னுடன் உடலுறவு கொண்டார். அவர் படுக்கையை பகிர்ந்து கொண்டது உண்மை.
அப்படி இல்லையென்றால் அவர் தனது குடும்பத்தின் மீதும், சினிமா தொழில் மீதும் சத்தியம் செய்வாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.
மேலும் தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை நானி வர விடாமல் செய்வதாகவும் புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் நான் தலையிடவும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் நானி.
தன் மீது அவதூறு பரப்பிய ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடருவேன் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Sri Reddy accused Nani of sexually abusing her and scuttling her chances of being a part of Bigg Boss Telugu