தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்னர்.
இதனால் வேலையிழந்து ஏழை மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு மாதமாக வீட்டில் இருப்பதால் தங்களின் அன்றாட வாழ்க்கையே இவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் தங்களால் இயன்றளவில் ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களும் நிவாரண பொருட்களை வழங்யும் உணவளித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் சூர்யா கார்த்தியின் உறவினரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு இது குறித்து கூறியுள்ளதாவது…
சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஓய்வின்றி ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மாஸ்குகள் கொடுத்து வருகின்றனர். அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்.
ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மக்களுக்கு உதவி செய்யும் போது மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள், சமூக விலகலையும் கடைபிடியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
SR Prabu advice to Suriya and Karthi fans during Social Service