மோடியை மோசமாக கண்டித்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைமோசா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக நாயகன் கோகுல், ப்ரியா, நீனு, அப்புகுட்டி, மன்சூர்அலிகான், மதுமிதா, டாப்பா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கொஞ்சம் கொஞ்சம்’.

விருந்தாளி படத்தை தொடர்ந்து உதயசங்கரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வல்லவன் இசையமைக்க, பெட்டி சி.கே.பி.ஆர். மோகன் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சற்றுமுன் இன்று சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனர்கள் எஸ்பி. முத்துராமன், சீனுராமசாமி, விசி. குகநாதன், நடிகர் ரகுமான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் மன்சூர் அலிகான் பேசியதாவது….

“இந்த படத்தில் என்னை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி.

பிரதமர் மோடி அறிவித்துள்ள கறுப்பு பணத்தை ஒழிப்பு திட்டத்தை அனைவரும் வரவேற்கிறார்கள்.

ஆனால் திடீரென ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து மக்கள் அனைவரையும் ஒரே நாளில் ராப் பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார்.

பழைய ரூ. 500 நோட்டுக்கள் நன்றாக உள்ளது. ஆனால் தற்போது வந்துள்ள ரூ. 2000 நோட்டுக்களை நம் ஆர்ட் டைரக்டர்களிடம் கொடுத்தால் நன்றாக டிசைன் செய்து இருப்பார்கள்.

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பெரிய வரிசையில் மக்கள் கால்கடுக்க காத்துக்கிடக்கிறார்கள்.

மக்களிடம் செலவுக்கு பணம் இல்லை. 5 நாட்களாக தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. சினிமா துறையே முடங்கி விட்டது.

மோடி இதற்கு பதில் சொல்ல வேண்டும். திரையுலகினர் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.” என்று பேசினார் மன்சூர் அலிகான்.

‘காற்று வெளியிடை’ ரிலீஸை கன்பார்ம் செய்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கி தயாரிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்ப கவனித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தெலுங்கில் இப்படத்திற்கு டூயட் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை தன் ட்விட்டரில் வெளியிட்டு அதில் அடுத்த வருடம் 2017 மார்ச் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார் கார்த்தி.

டிசம்பர் 2-ல் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் ராமு செல்லப்பா உருவாக்கியுள்ள படம் எங்கிட்ட மோதாதே.

இதில், நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவன சரவணன் பெற்றுள்ளார்.

இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராகவும் ராஜாஜி கமலின் தீவிர ரசிகராகவும் நடித்துள்ளனர்.

இப்படம் டிசம்பர் 2இல் வெளியாகவுள்ளது. எனவே அன்றைய தினம் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

அச்சம் என்பது மடமையடா படத்தின் முதல்நாள் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நேற்று உலகளவில் வெளியானது.

இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்துள்ளன.

க்ளைமாக்ஸ் இன்னும் பெட்டராக இருந்து இருக்கலாம் எனவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை வசூல் மட்டும், ரூ. 65 லட்சத்தை கடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என கூறப்பட்டுள்ள நிலையில், இதன் வசூல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சினிமா ஸ்டார்ஸ் இல்லாத வடிவேலு மகள் திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலுவின் மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று மதுரையில் உள்ள விரகனூர் சி.ஆர்.திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கார்த்திகா சி.ஏ படித்துள்ளார். இவர் ஐ.பி.எம்மில் வேலை பார்த்துவரும் கணேஷ்குமாரை மணம் முடித்துள்ளார்.

இதில் எந்த சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளவில்லை.

மிக நெருக்கமான உறவினர்களுக்கு மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டதாம்.

தீராத சிக்கலில் சிவகார்த்திகேயன்; சவாலை வெல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்கிய பேச்சு திரையுலகில் பெரும் பஞ்சாயத்தை உருவாக்கிவிட்டது.

இதனிடையில் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் உள்ளிட்ட மூன்று தயாரிப்பாளர்களுக்கு ஒப்புக் கொண்டபடி கால்ஷீட் தர மறுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் ஞானவேல்ராஜாவிடம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் சிவகார்த்திகேயன் தரப்பு ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் மீண்டும் 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சிவா

இதற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் ஃபெப்சி அமைப்பைக் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் பல சிக்கல்களை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

More Articles
Follows