தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.
பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் 100% மக்கள் வாக்களிக்க வேண்டும் என அரசும் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துக்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
நாளை (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த அறிவிப்பு வந்தும் முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
அதாவது இதுவரை 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
www.tnstc.in.tnstc செயலி மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Special buses arranged on election day in TN