தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கோரினார்.
எனவே இந்த விவகாரத்தில் இளையராஜா, எஸ்பி.பாலசுப்ரமணியம் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரச்சினை ஆனது.
இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என அறிவித்திருந்தார் எஸ்பிபி.,
இதனால் ரசிகர்கள் கலங்கினர். இளையராஜாவுக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை கூறினர்.
நாங்கள் கொடுத்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு இளையராஜா ராயல்ட் கேட்பது சரியல்ல என தயாரிப்பாளர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு, இசை கலைஞர்களுக்கு உதவும் விதமாக வருகிற ஜூன் 2ம் தேதி, சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கலந்து கொண்டு பாடுகிறார். மேலும் கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ, உஷா உதூப் உள்ளிட்ட பலரும் பாட உள்ளனர்.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பங்கேற்றார்.
அப்போது இளையராஜா எஸ்பிபி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி நட்பை பறிமாறிக் கொண்டனர்.