தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற மே 1ஆம் தேதி முதல் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் ஆரம்பமாகிறது. அது பற்றிய விவரம் வருமாறு…
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தலைவராக வைசாலி சுப்பிரமணியன் பொறுப்பேற்கிறார்.
அவர் கூறியதாவது…
செயலாளர் ஈஸ்வரி V.P, துணை செயலாளர் மீனா மருதரசி .S, பொருளாளர் கீதா .M, துணை தலைவர் ஏஞ்சல் சாம்ராஜ், நாங்கள் ஐந்து பேருதான் செயற்குளுவாக இருக்கிறோம்.
இதனுடைய வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று கொண்டிருந்தது. இதை அதிகாரப்பூர்வமாக மே 1 அன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
இது தொடர்பாக FEFSI தலைவர் R.K.செல்வமணி சார் கிட்ட பேசினோம், அவர் நல்ல விஷயம் நீங்க பண்ணுங்க என்றார்.
இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் சார் எங்களை வாழ்த்தினார் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் P.C.ஸ்ரீராம் சார் வாழ்த்துக்கள் சொன்னார் .இந்த விழாவிற்கு P.C.ஸ்ரீராம், வெற்றிமாறன், சத்யராஜ், ரோகினி, ரேவதி, சச்சு அம்மா, புஷ்கர் காயத்ரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கீதா குருவப்பன் (sound engineer) இவர்களெல்லாம் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். விழாவில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பாக ஒரு காலாண்டு மாத இதழ் வெளியிடுகிறோம்.
இந்த் பத்திரிக்கையின் ஆசிரியர் ஈஸ்வரி V.P (மிஸ்கின் அசோசியேட்).
இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்திற்கு நிறைய பெண்கள் வரவேண்டும்.
100 வருட தமிழ் திரைப்பட வரலாற்றில் இது ஒரு வரலாறாக இருக்கும்.
அடுத்த தலைமுறைகள் இதில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடித்தளம் இது. இதுக்கு உங்களுடைய ஆதரவும் வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை,நன்றி.” என்றார்.
South Indian Film Womens association to be launched on 1st May 2018