கன்னியாகுமரி அம்மனை தரிசனம் செய்த சௌந்தர்யா ரஜினி

கன்னியாகுமரி அம்மனை தரிசனம் செய்த சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.

தற்போது சவுந்தர்யா, தொழில் அதிபரும், நடிகருமான விசாகனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார்.

வருகிற பிப்ரவரி 11ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

இந்தநிலையில் சவுந்தர்யா கன்னியாகுமரி சென்றுள்ளார். அதிகாலை சூரிய உதயம் தரிசனம் முடித்துக் கொண்டு, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.

தனது திருமண அழைப்பிதழை, அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தலைப்பு இதானா?

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தலைப்பு இதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and nayantharaசீமராஜா மற்றும் கனா படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.

இது அவரின் 13வது படமாக உருவாகுகிறது. ராஜேஷ்.எம் இயக்க, நயன்தாரா ஹீரோயின் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம் ‘படக்குழுவின் புதுமை அறிவிப்பு!

வாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம் ‘படக்குழுவின் புதுமை அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

krishnamசினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.

கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ,இப்படத்தின் தயாரிப்பாளர்தான்.

தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ,தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர் இப்படத்தை எடுத்துள்ளார். ‘கிரிஷ்ணம் ‘ என்கிற இப் படம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ளது.

அதே போல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார்.

அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக் , ஷேர் சாட் டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் தங்கக்காசு ஐந்து நாளைக்கு ஒருமுறை வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும்.
இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன், நாயகனாக நடிக்க . நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச புனே திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

சர்வதேச புனே திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vasanth new filmஇயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 23வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் திரைடப்பட்டு தற்போது சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது

இதற்கிடையில் கடந்தவாரம் சர்வதேச புனே திரைப்பட விழாவில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது

வீடியோவை பார்க்க – https://youtu.be/SheNN0UUQTI

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இளையராஜா 75 பட்ஜெட் எவ்வளவு? உடனே நடத்தனுமா? ஐகோர்ட் கேள்வி

இளையராஜா 75 பட்ஜெட் எவ்வளவு? உடனே நடத்தனுமா? ஐகோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Highcourt question Producer Council about Ilayaraja 75 event filed caseதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைஞானி இளையராஜாவுக்கு வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

இதை பிரம்மாண்டமாக நடத்தபோவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியானது பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி நடைபெறுவதாகவும், சங்கத்தில் இருந்த வைப்பு நிதி ரூ.7.5 கோடியை விஷால் முறைகேடு செய்திருப்பதாகவும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரி, தயாரிப்பாளர் சதீஷ் குமார், என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சங்கத்தில் இருந்த வைப்பு நிதி என்ன ஆச்சு? விஷால் ஏன் ஆவணங்களை கொடுக்கவில்லை?

இளையராஜாவுக்கு ஏன் மூன்றரைக் கோடி ரூபாய் வழங்க வேண்டும்? நிகழ்ச்சியை ஏன் தள்ளி வைக்க கூடாது?

அந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு? உள்ளிட்ட பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் எவ்வளவு வருமானம்? தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கிடைக்கும் என நாளை ஜனவரி 30 அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Highcourt question Producer Council about Ilayaraja 75 event filed case

மக்களுக்காக போராடும் வரலட்சுமி-ஆஷ்னா-சுபிக்ஷா-ஐஸ்வர்யா தத்தா

மக்களுக்காக போராடும் வரலட்சுமி-ஆஷ்னா-சுபிக்ஷா-ஐஸ்வர்யா தத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanni Theevu heroines fight for Peoples welfareத்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர் அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம்.

அதோடு படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.

கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.

வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது.

சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்சா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ள பெண்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் ஏரியாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

அந்த ஏரியாவில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்தப்பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்தப்பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.

வழக்கமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில், சண்டைக்காட்சிகளுக்காக பெரிய அளவில் பொருட்செலவு செய்வார்கள். அதே அளவுக்கு பெரிய பொருட்செலவில் இப்படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இடம் பெறுகிறது.

அதில், இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு சண்டைக் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்படவுள்ளது. “ஸ்டன் சிவா” மாஸ்டர் மிக பிரமாண்டமாக இந்த சண்டைக்காட்சிகளை அமைத்து தந்திருக்கிறார்.

அதைப்போல வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்சா நான்கு பேருமே சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்கள். இதற்காக கலை இயக்குனர் பத்மநாபன் பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்து தந்திருக்கிறார்.

நிச்சயமாக இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கும். என்கிறார், இயக்குநர் சுந்தர்பாலு.

Kanni Theevu heroines fight for Peoples welfare

Kanni Theevu team

More Articles
Follows