தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.
தற்போது சவுந்தர்யா, தொழில் அதிபரும், நடிகருமான விசாகனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார்.
வருகிற பிப்ரவரி 11ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.
இந்தநிலையில் சவுந்தர்யா கன்னியாகுமரி சென்றுள்ளார். அதிகாலை சூரிய உதயம் தரிசனம் முடித்துக் கொண்டு, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
தனது திருமண அழைப்பிதழை, அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.