தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…
“மே 2014-ல் எங்கள் ‘கோச்சடையான்’ வெளியானது. மே 2015-ல் என் மகன் வேத் கிருஷ்ணா பிறந்தான்.
கோச்சடையான் படத்தையும் என் குழந்தையாகவே பார்த்தேன். எப்போதும் அப்படத்தை பற்றிதான் யோசித்துக் கொண்டு இருப்பேன்.
அப்படத்திற்கு பிறகு தற்போது முழுமையான தாய்மையை அனுபவித்து வருகிறேன்.
அதே சமயம் அடுத்த பட வேலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இம்முறை அனிமேஷன் கிடையாது.
ரொமான்டி காமெடி படமாக இருக்கும். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பணிபுரிகிறேன்.
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அப்பாவை வைத்து படம் இயக்குவேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.