சௌந்தர்யா ரஜினி வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் வாழ்க்கையில் 3 முக்கியமான ஆண்கள் என 3 பேரை குறிப்பிட்டுள்ளார் செளந்தர்யா ரஜினி.

அவரது ட்விட்டர் பதிவில்…

”வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 3 ஆண்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினி திருமணம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் படித்த விசாகன், தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

துப்பாக்கி முனையில் நிஜ ஆக்‌ஷன்; அலட்டிக்காத ஹீரோ தினேஷ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தினேஷ் நடிக்கும் “இரண்டாம் உலக்ப்போரின் கடைசி குண்டு “படத்தின் படப்பிடிப்பு சென்னை,மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்துவருகிறார்கள்.

நீலம் புரொடக்சன் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம் , மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தன்ர்.

நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தனர் குழுவினர்.

கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது.

அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே ஹேவேஸில் லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுத்தி வளைத்துப் பிடித்தனர்.

இதை அறிந்திராத நாயகன் ‘ நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே’ இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு ? என்று கேட்க …. நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்க்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார்.

நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

இதனால் சாலையில் லேசாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிளம்பும்போது நிஜமாக இருக்கிறது படப்பிடிப்பு வாழ்த்துக்கள் தினேஷ் என்று பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் கமாண்டோ படைவீரர்கள்.

கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கதிர் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் இது தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “

இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி

இசை – அம்ரிஷ்

பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ

எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே

கலை – ராஜா மோகன்

ஸ்டன்ட் – விக்கி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்

இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்

தான் இந்த படம். விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படம்…ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த படம். இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான படங்களான வெற்றி படங்களான மரகத நாணயம் ராட்சசன் என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு சத்ரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக. யார் கண்ணுக்கும் தெறியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முந் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு. 24 மணி நேரத்தில் நடக்கும் திரில்லர் ஆக்‌ஷன் படம். படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.

Breaking படைப்பு சுதந்திரம் கருதி வர்மா-விலிருந்து விலகல்; பாலா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வர்மா படம் குறித்து சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் டைரக்டர் பாலா. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது….

பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு:

வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…

துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளார் பாலா.

Director Bala statement regarding Varmaa movie dropped issue

பைரசியை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மோடிக்கு விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரஸியால் அழிந்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவையும், பிராந்திய மொழிகளில் வர்த்தக ரீதியிலும், தரமான கலை படைப்பிலும் முதன்மையாக திகழும் தமிழ் திரைப்பட துறையையும் காப்பாற்ற ஆளும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள Section 6A of the cinemotograph act சட்டத்தை ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட துறை சார்பாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்

மேலும் single winow systemமாக திரைத்துறைக்கு சாதகமான ஒரு பிரிவை ஏற்படுத்தி திரைத் துறை பலன் அடைவதற்கான வழி அமைத்ததற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

28% ஆக இருந்த திரைத்துறையினருக்கான ஜிஎஸ்டி வரியை 18% சதவிகிதமாக குறைக்க உதவி செய்த, மத்திய நிதித்துறை இணையமைச்சர் மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்களது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Vishal thanks Modi Govt for Section 6A of the cinematograph act

நிதிநிலை அறிக்கைகள் வயிற்று வங்கிக்காக தயாரிக்கப்படனும் : வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 22ஆம் ஆளுமையாக அவ்வையார் குறித்த கட்டுரையை நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகைசால் பேராசிரியர் இரா.மோகன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். கவிஞர் கபிலன் வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

தமிழ் இலக்கிய நெடுங்கணக்கில் அவ்வையார் என்பவர் ஒருவரல்லர். ஒன்றுக்கு மேற்பட்ட சிலர் அல்லது பலர் அவ்வையார் என்ற பெயரில் இயங்கியிருக்கலாம். சங்ககால அவ்வையார் என்றும் நீதிநூல் அவ்வையார் என்றும் அவ்வை இலக்கியத்தை நான் இரண்டாகப் பிரிக்கிறேன்.

ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கான ஒழுக்க விதிகளையும் ஆண்களே தீர்மானித்த காலத்தில், ஆண்களுக்கான ஒழுக்க விதிகளையும் எழுதிய பெண்ணியப் பெரும்புலவர் என்று சங்ககால அவ்வையைக் கொண்டாடலாம். நாடோ காடோ, பள்ளமோ மேடோ ஆடவர்கள் நல்வழியில் வாழ்ந்தால்தான் அந்த நிலம் நலம் பெறும் என்று சட்டம் வகுத்தவர் சங்ககால அவ்வை.

பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் பிற்கால அவ்வை அறம்பாடிச்சென்ற திறம்மிக்க பெருமாட்டி. சங்ககால அவ்வை பாடியது கற்றவரைச் சென்றடைந்த இலக்கியமானது. பிற்கால அவ்வையின் பாடல்களோ கல்லாதவர் வாயிலும் புழங்கிய பழமொழி போன்றது.

அவ்வையார் யாருக்கும் அஞ்சாத பெண்மணி. வள்ளுவரும் இளங்கோவும் கம்பனும்கூட வரையறுக்காத ஒரு கருத்தை அவ்வையார் சொல்லியிருக்கிறார். கற்பு என்றால் என்ன என்று எந்தப் புலவனும் வரையறுக்கவில்லை. அது பெண்ணின் உடலோடும் மனதோடும் சம்பந்தப்பட்டது என்று மட்டுமே கருதப்பட்டது.

அது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று ஓரவஞ்சனையுடன் உணர்த்தப்பட்டது. அவ்வையார் ஒருவர்தான் கற்புக்கு இலக்கணம் சொன்னார். “சொன்ன சொல் மாறாத தன்மைதான் கற்பு” என்ற பொருளில் “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” என்று ஓங்கி அடித்தார். ஆண் பெண் என்ற உடல்களைத் தாண்டி வாக்குத் தவறாத நேர்மைதான் கற்பு என்று மனிதகுலத்துக்கே பொதுவான அறமாக்கினார்.

அப்படிப் பார்த்தால் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் அனைவரும் கற்புடையவர்களே, தவறினால் அனைவரும் கற்பிழந்தவர்களே என்பது அவ்வையின் அளவுகோல்.

அவ்வையார் போன்ற அறிவுஜீவிகளையும் கூழுக்கு அலையவிட்டதுதான் தமிழ் உலகம் செய்த தவறு. பாண்டிய மன்னனின் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அவ்வையார் பந்தியில் இடம்பிடிக்கமுடியாமல் பட்டினி கிடந்திருக்கிறார். “நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே சுருக்குண்டேன் சோறுண்டிலேன்” என்று பாடியிருக்கிறார்.

அவ்வையார் காலத்திலிருந்து ஆண்ட்ராய்டு காலம் வரை நம்மால் பசியை ஒழிக்க முடியவில்லை. இன்னும் இந்தியாவில் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்கிறார்களாம்.

ஊட்டச்சத்து இல்லாமல் இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு உயரத்திற்கேற்ற எடை இல்லையாம். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குப் பிறகு ஆசியாவின் பட்டினிப் பட்டியலில் உள்ள மூன்றாம் நாடு இந்தியாதானாம்.

பசியை ஒழிக்க வேண்டும்; இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “ஐயமிட்டு உண்” என்று பாடினார் அவ்வையார். நமது நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக இல்லாமல் வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் பசி ஒழியும்.

வருமானத்தை விடத் தன்மானமே பெரிது என்பார்கள் புலவர்கள். அதுதான் அவர்களுக்கு அறச்சீற்றம் தந்திருக்கிறது. அவ்வையார் அரசையும் கண்டித்திருக்கிறார்; ஆண்டவனையும் கண்டித்திருக்கிறார். கொடிய கணவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள் ஒரு நல்ல மனைவி.

இந்த இழிந்தவனுக்காக இவளைப் படைத்தாயே பிரம்மனே. உனக்கு நான்கு தலை; ஒருதலை ஏற்கனவே அற்றுப்போனது. இப்படித் தவறு செய்த உன்னைப் பார்த்தால் மிச்சமுள்ள மூன்று தலைகளையும் நானே கிள்ளி எறிந்திருப்பேன் என்று உரிமையோடும் உணர்வோடும் கடவுளையே கண்டித்தவள் அவ்வை.

இன்றைய காலத்திற்குப் பொருந்தாத அவ்வையின் கருத்துகளைப் புறந்தள்ளுவோம்; பொருந்தும் கருத்துகளைப் போற்றுவோம்; அவற்றை வாழ்க்கை படுத்துவோம். அவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை; தமிழர்களின் தனிஉரிமை.

Lyricist Vairamuthu speech at Public event

More Articles
Follows