ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கும் சௌந்தர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? என பெயரிடப்படலாம் எனவும் தகவல்கள் வந்தன.

இப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையில், மோகன்லால் மகன் பிரணவ்வை நடிக்க நாடியிருக்கிறார்களாம்.

அவர் மறுக்கவே பின்னர் நாகார்ஜூனா அமலா தம்பதியரின் மகனான அகிலை நாட முற்பட்டார்களாம்.

ஆனால் இக்கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியே சொன்னதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு டபுள் ஒ.கே சொல்லி விட்டாராம் தனுஷ்.

எனவே, ‘கபாலி’ படத்தின் 100வது நாளில் செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தகவலை தாணு அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தொடர்ந்து சௌந்தர்யா இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் வேற லெவலை சொல்வார் ‘பைரவா’ – சுகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் பைரவா சூட்டிங்கில் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய்.

சில பாடல் காட்சிகளின் சூட்டிங்கை இன்று முதல் தொடங்க விருக்கிறார்களாம்.

படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நவம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையில் விஜய், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட ரொமான்ஸை வெளிநாடுகளில் படமாக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரியம் சுகுமார், இப்படம் விஜய்க்கு வேற லெவல் படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

பாட்டு, டான்ஸ், பைட் ஆகிய மூன்றும் விஜய்யின் படங்களின் ஸ்பெஷல். இவை மூன்றும் பைரவா படத்தில் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் இவர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷுக்காக இத்தனை ஹீரோஸ் வெயிட்டிங்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸ் கீர்த்தி சுரேஷ்தான்.

ஒருவேளை இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால்தான் மற்ற ஹீரோயின்களை தேடுகிறார்களாம் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள்.

இவரது நடிப்பில் ரெமோ, பைரவா, பாம்பு சட்டை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருக்கிறதாம்.

இதனையடுத்து, லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜீனுடன் ஒரு படம், மற்றும் விஷாலுடன் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

இவை தவிர்த்து, ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கும் விஜய் சேதுபதி படத்திலும் கீர்த்தி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விட்டா கீர்த்தியை புக் பண்ணிட்டுதான் ஹீரோவை புக் பன்னுவாங்க போலவே…!??!

பார்த்திபனுக்காக கோடிட்ட இடங்களை நிரப்ப வந்த சிம்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்நிலையில் கெளரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து சிம்ரன் கூறும்போது… “எனக்கு பிடித்த கேரக்டராக இருக்கும்போது ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மற்றபடி என்னை நடிக்கும்படி யாரும் வற்புறுத்த முடியாது” என்றார்.

‘அவார்ட் வாங்கத்தான் கெட்டப் சேஞ்ச்…’ சதீஷ் சரவெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வளரும் காமெடி நடிகர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் சதீஷ்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய்சேதுபதியின் றெக்க, பிரபுதேவாவின் தேவி ஆகிய இந்த மூன்று படங்களும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

பெரும்பாலும் சதீஷ், ஒரே மாதிரியான தோற்றத்துடனே எல்லாம் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆனால் முதன்முறையாக தலையே சீவாமல், காரக்குழம்பு கலரில் தலை முடிக்கு கலர் அடித்து, தேவி படத்தில் கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது..

ஆமா. நான் கெட்டப் சேஞ்ச் பண்ணிட்டேன். இனிமே அவார்ட்டு வாங்க தயாராகனும். அப்போ என்ன பேசனும் என்பதை வேற ரெடி செய்யனும்.

அதுக்கு மேடையில ரிசக்ஷன் வேற குடுக்கனும். (அது நமக்கு வராது) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Sathish ‏@actorsathish 1m21 minutes ago
Yes of course my maximum getup change. (Awards ku Vera speech lam ready pannanum, reactions Vera kudukkanum (oh Namakku dhan adhu varadhe)

நம்ம டாப் ஹீரோஸ் செஞ்சதை இப்போதான் மோகன்லால் பண்றாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு மவுசு இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வந்தால் எளிதாக ஜெயிப்பதில்லை.

அதற்கு காரணம் அங்குள்ள ரசிகர்கள், சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கின்றனர்.

ஆனால் நம்ம தமிழ்நாட்டுல சினிமா ஸ்டார்ஸ்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் மதிப்பு இந்திய சினிமாவுக்கே தெரியும்.

இதனால் இங்குள்ள மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாளன்று கிட்டதட்ட 7 முதல் 8 காட்சிகள் வரை திரையிடப்படும்.

லிங்கா, கபாலி படக்காட்சிகள் எல்லாம் நள்ளிரவு 2 மணிக்கே தொடங்கியது.

இதனையடுத்து, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களும் அதிகாலையில் தொடங்கியது.

ஆனால் இந்த அதிகாலை ஸ்டார் தரிசன வழக்கம் என்றைக்கும் கேரளாவில் இருந்தது இல்லை.

இந்நிலையில் முதன்முறையாக இந்த மரபுகளை மோகன்லால் உடைத்தெறிகிறார்.

இவர் நடிப்பில் மிகப்பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘புலி முருகன்’ அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் கேரளாவில் சுமார் 220 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகவுள்ளது.

இதில் 150 தியேட்டர்களில் சிறப்புக்காட்சி வேண்டுமென்று அடம்பிடித்து அனுமதி வாங்கிவிட்டார்களாம் ரசிகர்கள்.

இதனால் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகி விட்டதாம்.

இதன் மூலம் மலையாள சினிமாவில் ‘புலி முருகன்’ மோகன்லால் ஒரு புதிய ட்ரெண்டை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows