மீண்டும் படம் இயக்குவேன்; புது டைரக்டர்களுக்கு SP.முத்துராமன் சவால்?

மீண்டும் படம் இயக்குவேன்; புது டைரக்டர்களுக்கு SP.முத்துராமன் சவால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soon I will direct movies says SP Muthuraman at Gnana Cheruku eventதரணி ராசேந்திரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஞானச் செருக்கு. ஞானச் செருக்கு என்றால் அறிவுத் திமிர் என்று பொருள்படும்.

ஓவியர் வீரசந்தானம், ஜெயபாலன், வீர எய்னன், பரதமிழ்மாறன் (புது முகங்கள்) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

இசை: சக்கரவர்த்தி, படத்தொகுப்பு : மகேந்திரன், ஒளிப்பதிவு: கோபி துரைசாமி, இணைத் தயாரிப்பு : ஜெகத்ரட்சகன்
உலக அளவில் மொத்தம் 40 சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் ஏழு சர்வதேச விருதுகளைக் குவித்து இருக்கிறது.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சீனியர் இயக்குனர் எஸ்பி முத்துராமன் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

இந்த ஞானச் செருக்கு படத்தை பார்க்கும்போது படம் இயக்க வயது முக்கியமில்லை என தோன்றுகிறது. இந்த காலத்தில் சினிமாவில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்படுகிறது.

ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் நடிகர்களுடன் பொம்மைகளை நடிக்க வைத்தேன். அப்போது கிராபிக்ஸ் என்றால் எதுவுமில்லை.

கிராபிக்ஸ் இல்லாத சமயத்திலேயே அப்படி செய்திருக்கிறேன். இப்போது கிராபிக்ஸ் உள்ளது. அப்படி என்றால் கேட்க வேண்டுமா?

சினிமா இயக்காமல் சும்மா இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது ஞானச் செருக்கு படம் இயக்கும் ஆசையை சீண்டியுள்ளது.

எனவே விரைவில் படம் இயக்குவேன்” என பேசினார் எஸ்பி முத்துராமன்.

Soon I will direct movies says SP Muthuraman at Gnana Cheruku event

Thirumavalavan talks about MGR and Rajini in Gnana cheruku event

எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு

எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thirumavalavan talks about MGR and Rajini in Gnana cheruku eventதரணி ராசேந்திரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஞானச் செருக்கு. ஞானச் செருக்கு என்றால் அறிவுத் திமிர் என்று பொருள்படும்.

இதில் ஓவியர் வீரசந்தானத்தின் கதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

ஓவியர் வீரசந்தானம், ஜெயபாலன், வீர எய்னன், பரதமிழ்மாறன் (புது முகங்கள்) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

இசை: சக்கரவர்த்தி, படத்தொகுப்பு : மகேந்திரன், ஒளிப்பதிவு: கோபி துரைசாமி, இணைத் தயாரிப்பு : ஜெகத்ரட்சகன்

உலக அளவில் மொத்தம் 40 சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் ஏழு சர்வதேச விருதுகளைக் குவித்து இருக்கிறது.

MAN Vs WILD நிகழ்ச்சியில் பங்கேற்க காட்டுக்கு சென்ற ரஜினி

இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துக் கொண்டு பாடல்களை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

சினிமாவை யதார்த்தம் மாறாமல் கொடுத்தால் அதுவும் வெற்றி பெறும்.

ஆள் கலரும் இல்லை, எம்.ஜி.ஆர் போல் பளபளப்பாகவும் இல்லை, ஆனால் ரஜினி நடித்த படங்கள் எப்படி ஓடுகிறது?’’ என்ற கேள்விகளை ரஜினி சினிமாவில் அறிமுகமான ரஜினி சாதித்தார்.

சினிமாவில் நாயகன், நாயகி மினுமினுப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையைரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் உடைத்தெறிந்தனர்.

அவர்கள் சினிமா யதார்த்தம் கலந்து இருந்தது. தினம் பார்க்கும் நபர்களை போல் இருந்தனர்.

அதுபோல் இந்த ஞானச் செருக்கு படமும் யதார்த்தம் நிறைந்து இருக்கும். நிச்சயம் இந்த படம் மாபெரும் வெற்றி பெறும்” என பேசினார் திருமாவளவன்.

Thirumavalavan talks about MGR and Rajini in Gnana cheruku event

Thirumavalavan talks about MGR and Rajini in Gnana cheruku event

பாடகி ஸ்ரேயா கோஷல் பாட்டை கேட்டு காலில் விழுந்த பாட்டி

பாடகி ஸ்ரேயா கோஷல் பாட்டை கேட்டு காலில் விழுந்த பாட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shreya ghosalதமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பாடி இந்திய ரசிகர்களை தன் குரலால் மயக்கி வைத்திருப்பவர் ஸ்ரேயா கோஷல்.

சில்லுன்னு ஒரு காதல்’, ‘நான் கடவுள்’, ‘வெயில்’, ’வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, ’எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் பாடி தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார்.

இமான் இசையமைக்கும் படங்களில் இவரது குரல் ஒலிக்காமல் இருக்காது.

இந்த நிலையில் இவரது மேடை நிகழ்ச்சி பாடலுக்கு பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.

ஸ்ரேயா கோஷலின் பாடலை கேட்ட ஒரு பாட்டி அவரது கால்களில் விழுந்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ரேயா பின்னர் சுதாரித்து அவரை கட்டியணைத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/nimasha4sg/status/1221730695250235392

ஹீரோவானார் ராஜேந்திரன்; மக்கள் செல்வன் மகத்தான ஆதரவு

ஹீரோவானார் ராஜேந்திரன்; மக்கள் செல்வன் மகத்தான ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

motta rajendran vijay sethupathiபாலா இயக்கிய ’நான் கடவுள்’ படத்தில் கொடூரமான வில்லன் நடித்தவர் ராஜேந்திரன்.

அதன்பின்னர் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்து தற்போது முழு நேர காமெடி நடிகராகிவிட்டார்.

பாஸ் என்ற பாஸ்கரன், ‘ராஜா ராணி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹரஹர மகாதேவகி’ ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

தற்போது ’ராபின்ஹுட்’ படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் பழனியப்பன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீநாத் என்பவர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்பட மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு ஆதரவு அளித்துள்ளார்.

என் மகளுக்கு உன்ன மாதிரி ஆண் வேண்டும்; பிரியாவின் புதிய காதல்

என் மகளுக்கு உன்ன மாதிரி ஆண் வேண்டும்; பிரியாவின் புதிய காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya bhavani shankar with boy friendபுதிய தலைமுறை டிவியில் செய்தி தொகுப்பாளராக தன் ஊடக வெளிச்சத்தை தொடங்கியவர் பிரியா பவானி ஷங்கர்

பின்னர் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கி அதன் வழியாக சினிமாவில் காலடி வைத்தார்.

’மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறர்.

இந்த நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாய் புரெண்டுக்கு வித்தியாசமாக காதலை சொல்லி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ராஜ்வேல் ராஜ் என்பவருக்கு..’பத்து ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் என்னுடன் காதலில் விழுந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை.

ஆனால், இந்த ’புதிய என்னுடன்’ இருக்க முடிவு செய்தது தான் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. காயங்களை மறக்க சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருப்பதே பேராண்மை.

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

MAN vs WILD நிகழ்ச்சியில் பங்கேற்க காட்டுக்கு சென்ற ரஜினி

MAN vs WILD நிகழ்ச்சியில் பங்கேற்க காட்டுக்கு சென்ற ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajini participate in Bear Grylls Man vs Wild showமேன் vs வைல்ட் என்ற நிகழ்ச்சி சில மாதங்களுக்கு இந்தியா முழுவதும் பிரபலமானது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிதான்.

இந்த நிகழ்ச்சி பியர் கிரில்ஸ் எனப்படும் முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இதில் கலந்துக் கொண்டுள்ளார்.

இதற்காக கர்நாடகா – கேரளாவை இணைக்கும் பந்திபூர் காடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கே மான்கள், புலிகள், யானைகள் அதிக அளவில் காணப்படுகிறது.

காடுகளில் எப்படி வாழ்வது? அங்கு மனிதர்கள் வாழ்வதற்காக வழிகள் உள்ளதா? உள்ளிட்டவைகளை பியர் கிரில்ஸ் கற்றுத்தருவதாக கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு சாதனங்கள், உணவுகள், மருத்துவ சாதனங்களுடன் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரஜினி உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு அளிக்க ரசிகர்கள் வேண்டுகோள்

இந்த சூட்டிங்கில் ரஜினியுடன் அவரின் 2வது மகள் சவுந்தர்யாவும் பங்கேற்றுள்ளார்.

ரஜினியின் தனிப்பட்ட பாதுகாவலர்களும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.

இது கர்நாடக காட்டுப் பகுதி என்பதால் ஏன் தமிழக காடுகளை ரஜினி தேர்ந்தெடுக்கவில்லை? என சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் காட்டின் அடர்த்தி, உயிர் பாதுகாப்பு, ஷூட்டிங் வசதி அனைத்தையும் பரிசோதித்த பின்னர்தான் ஏற்பாட்டாளர்கள் இடத்தை தேர்வு செய்வார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

Actor Rajini participate in Bear Grylls Man vs Wild show

https://twitter.com/filmistreet/status/1222058747586998272

More Articles
Follows