டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரின் சிகிச்சைக்கு தனுஷ் சோனுசூட் சிரஞ்சீவி உதவி

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரின் சிகிச்சைக்கு தனுஷ் சோனுசூட் சிரஞ்சீவி உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

800 திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரலில் 75% வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவரும் இவரது மனைவி மகன் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்கு அவரது இளைய மகன் அஜய் உதவி கேட்டு இருந்தார் என்ற செய்திளை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனையடுத்து தனுஷ், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்டவர்கள் உடனடியாக மருத்துவ உதவி அளித்தனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உதவியுள்ளார்.

Sonu Sood Dhanush Chiranjeevi help To Choreographer Sivasankar Who is affected due To COVID

பலம் பெற்றோம்.. நடிப்புக்கு விருது கிடைச்சுட்டு.; ரஜினிக்கு ‘மாநாடு’ படக்குழு நன்றி

பலம் பெற்றோம்.. நடிப்புக்கு விருது கிடைச்சுட்டு.; ரஜினிக்கு ‘மாநாடு’ படக்குழு நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படம் நேற்றுமுன் தினம் நவம்பர் 25ல் தியேட்டர்களில் ரிலீசானது.

யுவன் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் சிம்பு உடன் எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏசந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மகத், கருணாகரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரும்ப திரும்ப ரீபீட் செய்தாலும் ‘டைம் லூப்’ கதையை மிக விறுவிறுப்பாக படமாக்கி இருந்தார் வெங்கட்பிரபு.

இதுவரை அனைத்து தரப்பிலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

இவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பாராட்டியுள்ளார்.

நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு உள்ளிட்டோரை போனில் அழைத்து ஒவ்வொருவரையும் பாராட்டிள்ளார்.

இந்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு, எஸ்ஜேசூர்யா ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு தரப்பில் இருந்து எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில்…

இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள்.

சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது…

நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது.

மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…
மிக்க நன்றி சார்..

எஸ்ஜேசூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில்…

“இன்று எனது நடிப்புத் திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். உங்கள் அன்பான பாராட்டு எனக்கு எனது சினிமா பயணத்தை மேலும் பலமாக்கியுள்ளது.

ரஜினியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (இவர்களின் பாராட்டு இன்று மாலை வந்தது. அதனை அப்டேட் செய்துள்ளோம்.)

Simbus Maanaadu team on cloud nine by Rajinis Wishes

ரஜினி-தனுஷை தொடர்ந்து போயஸ் கார்டனில் குடியேறும் நயன்தாரா

ரஜினி-தனுஷை தொடர்ந்து போயஸ் கார்டனில் குடியேறும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் சிறப்புகளாக பல கட்டிடங்களை பல பகுதிகளை வரலாறு சொல்வதுண்டு.

அதுபோல சென்னையின் பிரபலமான பகுதிகளில் போயஸ் கார்டனுக்கும் நல்ல பெயருண்டு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இங்குதான் வசித்தார். அதுபோல் நடிகர் ரஜினிகாந்த் இங்குதான் வசித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷும் இந்த பகுதியில் ஓர் இடம் வாங்கி தனி வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் இந்தப் பகுதியில் 4 BHK வீடுகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தனது நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு போயஸ் கார்டனில் நயன்தாரா செட்டில் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Nayanthara Buys luxury 4 BHK Apartments in Poes Garden

கமலுக்கு பதிலாக கமல் பட நாயகியே பிக்பாஸ் 5 தொகுப்பாளர் ஆகிறாரா..?

கமலுக்கு பதிலாக கமல் பட நாயகியே பிக்பாஸ் 5 தொகுப்பாளர் ஆகிறாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக இன்று மதியம் 2 மணியளவில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்.? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கமல்ஹாசனே வீடியோ வழியாக virtual முறையில் தொகுத்து வழங்க இருக்கிறார் எனவும் கூறப்பட்டது.

சிம்பு, விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என சில யூகங்கள் பறந்தன.

தற்போது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் ரம்யா கிருஷ்ணன்.

மேலும் கடந்த 2019ல் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜூனாவுக்கு பதிலாக சில வாரங்களுக்கு தொகுத்து வழங்கியும் உள்ளார் ரம்யா.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் மேகி என்ற கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal film actress to host Bigg Boss 5 Tamil?

தடாலடி வியாபாரத்தில் ‘தளபதி 66’.. வியப்பில் விஜய் ரசிகர்கள்..; வெல்லுமா ஜீ.?

தடாலடி வியாபாரத்தில் ‘தளபதி 66’.. வியப்பில் விஜய் ரசிகர்கள்..; வெல்லுமா ஜீ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெறவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தில்ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ள தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. சூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த பட சேட்டிலைட் உரிமையை வாங்க ஜீ நெட்வொர்க் என்ற நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நடித்து ஷங்கர் இயக்கவுள்ள படத்தின் சேட்டிலைட் உரிமையை இதே ஜீ நெட்வொர்க் நிறுவனம் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதி 66’ சூட்டிங் தொடங்கப்படாத நிலையில் விஜய் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது விஜய் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.

Zee Network to Acquire Vijay-Starrer Thalapathy 66’s Satellite Rights?

MGRக்கு கிட்னி வழங்கி ஒரே கிட்னியோடு வாழ்ந்த லீலாவதி மரணம்.; ஓபிஎஸ் ஈபிஎஸ் டிடிவி இரங்கல்

MGRக்கு கிட்னி வழங்கி ஒரே கிட்னியோடு வாழ்ந்த லீலாவதி மரணம்.; ஓபிஎஸ் ஈபிஎஸ் டிடிவி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1984ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எம்ஜிஆரை வாழ வைப்பதற்காக தன்னுடைய ஒரு (கிட்னி) சிறுநீரகத்தை தானமாக கொடுத்தவர் லீலாவதி.

இவர் எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் ஆவார்.

(எம்ஜிஆர் 1987 டிசம்பர் 24ல் காலமானார்.)

அதன்பிறகு ஒரே கிட்னியோடு கிட்டத்தட்ட 36 வருடங்கள் வாழ்ந்து வந்தவர் லீலாவதி.

இவர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

லீலாவதியின் மரணம் எம்ஜிஆர் விசுவாசிகளிடையே ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leelavathi, who donated kidney to MGR, is no more

More Articles
Follows