சமூக ஊடகங்களில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்ற வரும் ‘ஏன் இந்த மயக்கம்’

சமூக ஊடகங்களில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்ற வரும் ‘ஏன் இந்த மயக்கம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Social media awareness movie En Indha Mayakkamபெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக ‘ஏன் இந்த மயக்கம் ‘ உருவாகியிருக்கிறது.

இப்படத்தை ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் எம். அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார்.

ஷக்தி வசந்த பிரபு இயக்கியுள்ளார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

முற்றிலும் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இப்படம் எடுக்கப் பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஷக்தி வசந்த பிரபு பேசும் போது…

“இன்று உலகம் சுருங்கி விட்டது. உள்ளங்கையில் உலகத் தொடர்பு சாத்தியமாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் மட்டுமல்ல தீமைகளும் விளைகின்றன.

படிக்கிற வயதில் பிள்ளைகள் சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கி தங்கள் நேரத்தை விரயமாக்குவதுடன் தகாத செயல்களில் இறங்கி தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிற விபரீதமும் நடக்கிறது.

அப்படிப்பட்ட விபரீதங்கள் பற்றி எடுத்துச் சொல்லி பெற்றோர்களை எச்சரிக்கிற ஒரு படமாகத்தான் இந்த ‘ஏன் இந்த மயக்கம்’ படம் உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குநர்.

” வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன தப்பு செய்தாலும் வெளியே தெரியாது என்கிற எண்ணம் உள்ளது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்று எச்சரிக்கிற படம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன செயல்பாடுகளில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வோடு எச்சரிக்கை உணர்வும் பெற வேண்டும் என்கிற நோக்கில் படம் உருவாகியுள்ளது.” என்கிறார் இயக்குநர்.

சென்னை, பாண்டிச்சேரி, ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழு நீள பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

நாயகி டெல்லா, “மானாட மயிலாட” வின்னர் சொர்ணா, கிருஷ்ணா என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு கே. பி. வேல், இசை சித்தார்த் பாபு, பாடல்கள் – ஏகாதசி, கருணா, த்ரேதா ரோஹினி, எடிட்டிங் _ பீட்டர் பாபியா, ஆர்ட்- ராகுல், நடனம் விமல், ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் என உற்சாகமான திறமைக் கரங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இப்படம் ஜூலை 21-ல் வெளியாகவுள்ளது.

அறிவியலின் அற்புதமாக வந்துள்ள சக்தி வாய்ந்த சமூக ஊடகங்கள் பற்றி போதிய விழிப்பின்றி சிலர் செய்யும் சமூக விரோதச் செயல்களை விமர்சிக்கும் இப்படம் சமூக ஊடகங்களின் ஆதரவை மட்டுமே நம்பி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Social media awareness movie En Indha Mayakkam

Social media awareness movie En Indha Mayakkam

பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் கேரக்டரில் ஸ்ரீபிரியங்கா

பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் கேரக்டரில் ஸ்ரீபிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miga-Miga-Avasaram posterமெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் /பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள்.

அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்!

மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.

அதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண்/பெண் போலீஸ் அடித்து விரட்டியது.

அடிவாங்கிய தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.

இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு. பார்க்கும் வேலையைத் தக்கவைக்க துரத்தி அடித்துவிட்டு, என் உறவை அடிக்கவா காக்கிச் சட்டை போட்டேன்?? என்று அன்றைய இரவு உறக்கம் தொலைத்த காவலர்களும் உண்டு.

காக்கிச் சட்டையைக் கழட்டும் போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான்.

அவர்களை அடையாளம் காண காக்கிச் சட்டை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை! உறவுகளை நேசிக்கத் தெரிந்த மனிதனாக இருந்தால் மட்டும் போதும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளார்.

காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.

அதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள்.

காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் E. ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த்,

‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், காவேரி மாணிக்கம், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, வசனத்தை இயக்குநர் கே. பி ஜெகன் எழுத முதல் முறையாக இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. பாலபரணி ஒளிப்பதிவு., பாலமுருகன் ஆர்ட் டைரக்ஷன். மிக மிக அவசரம் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

இதன் டீசர் ஒரு இலட்சத்தை தாண்டி பார்க்கப்பட்டு வருகிறது.

Sri Priyanka as Cop in Miga Miga Avasaram

MMA sri priyanka

 

அரவிந்த்சாமி-அமலாபால்-நைனிகா நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தகவல்கள்

அரவிந்த்சாமி-அமலாபால்-நைனிகா நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baskar Oru Rascal shooting news updatesதனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.

`சதுரங்க வேட்டை 2′, `வணங்கா முடி’, நரகாசூரன், மற்றும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம். ஹர்சினி தயாரிக்கிறார்.

சித்திக் இயக்கும் இப்படத்தில் அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் `தெறி’ படத்தில் அறிமுகமான மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி என்பவரும் நடிக்கிறார்.

ரமேஷ் கண்ணா வசனம் எழுத, பா.விஜய், விவேகா பாடல்களை எழுத, அம்ரேஷ் இசையமைத்து வருகிறார்.

கொச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங்கை விறுப்பாக நடத்தி செப்டம்பர் மாதத்தில் இதனை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Baskar Oru Rascal shooting news updates

nainika

தனுஷின் மாரி2 படத்தை ஆரம்பித்தார் பாலாஜி மோகன்

தனுஷின் மாரி2 படத்தை ஆரம்பித்தார் பாலாஜி மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maari shooting spotதனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் மாரி.

பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெற்றிப் பெறவே, இதன் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என தெரிவித்து இருந்தார் இயக்குனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் இதர பணிகளை தொடங்கி விட்டதாக வுண்டர் பார் நிறுவனமும், இயக்குனர் தரப்பும் உறுதிசெய்துள்ளனர்.

Wunderbar Films‏ @WunderbarFilms_
For all the love and support for #Maari starting work on #Maari2, looking forward for your continued support

maari 2 pooja

அமிதாப்புடன் இணையும் ரஜினி பட வில்லன்-ஹீரோயின்

அமிதாப்புடன் இணையும் ரஜினி பட வில்லன்-ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amitabh Bachchan AkshayKumar Radhika Apte teams up for Padman Directed by Balkiபிரபல இயக்குனர் பால்கி அவர்கள் பத்மன் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படமானது உலகிலேயே குறைந்த விலையில் பெண்களுக்கு நாப்கின் தயாரிக்கும் மெஷினை கண்டுபிடித்த தமிழரான அருணாசலம் முருகானந்தம் பற்றிய கதையாம்.

இப்படத்தில் நாயகன் நாயகியாக அக்ஷய்குமார் மற்றும் ராதிகா ஆப்தே நடிக்கின்றனர்.

2.0 படத்தில் ரஜினியின் வில்லனாக அக்ஷய்குமார் நடித்துவருவதும், கபாலி படத்தில் ரஜினியின் நாயகியாக ராதிகா ஆப்தே நடித்ததும் நாம் அறிந்ததே.

இப்படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் சோனம் கபூர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அக்ஷய்குமாரின் மனைவி டிங்கிள் கண்ணா இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Amitabh Bachchan AkshayKumar Radhika Apte teams up for Padman Directed by Balki

akshay kumar radhika apte padman

ஜெயலலிதா-ரஜினியுடன் இணைந்த பிக்பாஸ் ஓவியா

ஜெயலலிதா-ரஜினியுடன் இணைந்த பிக்பாஸ் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss oviyaகமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்றாலும் தற்போது அதிக ஓட்டுக்கள் பெற்று ஓவியா முன்னிலையில் உள்ளார்.

இதில் ஓவியா மட்டுமே மிகவும் ஓபனாக உள்ளதாகவும், பிரச்சினைகள் வந்தால் அதிலிருந்து ஒதுங்கிவிடுவதாகவும் அவருக்கு ஓட்டுப் போட்டவர்கள் சொல்கின்றனர்.

மேலும், அவரது உடை, லுக் ஆகியவையும் தங்களை மிகவும் கவர்ந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பல மீம்ஸ்கள் அவரை புகழ் பாடி வலம் வர ஆரம்பித்துவிட்டன.

சிலர் அவரை புரட்சித்தலைவி ரேஞ்சுக்கு டிசைன் செய்து, அருகில் ரஜினி கமல் படங்களை வைத்து படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் செட்டை விஜய் டிவி பிரிக்கும் வரை ஓவியா அங்கிருப்பார் என காமெடி நடிகர் சதீஷ் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்தவுடன் ஓவியாவுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கும் என்பது இப்போதே நிரூபணமாகி விட்டது.

Oviya got good response among audience in Big Boss Tamil show

More Articles
Follows