தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.
இவர்கள் தற்போது சென்னையில் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இவர்கள் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 25 லட்சத்தை முதலீடு செய்து தொழில் செய்து வருகின்றனர்.
சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகிய இருவரும் இந்த தொகையை பெற்றுக் கொண்டு மாதந்தோறும் 1,80,000 ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் கடந்த 6-7 மாதங்களாக மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.
சினேகா பிரசன்னா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டல் விடுத்து வருகிறார்ளாம்.
எனவே கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா பிரசன்னா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நட்சத்திர ஜோடி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல் துறை.
Sneha and Prasanna file police complaint against two businessmen