JUST IN முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சிவகுமார்-சூர்யா-கார்த்தி ரூ.1 கோடி நிதியுதவி

JUST IN முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சிவகுமார்-சூர்யா-கார்த்தி ரூ.1 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar familyநடிகர் சிவகுமார் மற்றும் மகன்கள் சூர்யா, கார்த்தி இணைந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கினர்.

அதன்பின்னர் சிவகுமார் பேசியதாவது..

முதலமைச்சர் நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதியளிப்பு.

தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். – அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி”

என பேசினார் நடிகர் சிவக்குமார்.

SivaKumar family donated 1 crore to cm corona relief fund

‘அண்ணாத்த’ சூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய ரஜினிக்கு லதா ஆராத்தி.. (VIDEO); முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்.?

‘அண்ணாத்த’ சூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய ரஜினிக்கு லதா ஆராத்தி.. (VIDEO); முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்திருக்கும் தனி விமானம் மூலம் இன்று மாலை ஐதராபாத்தில் இருந்து அவர் சென்னை திரும்புகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’.

100 படங்களுக்கு இசையமைத்து விட்ட இமான் முதன்முறையாக ரஜினியின் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

கொரோனா லாக் டவுன் பிரச்னை மற்றும் ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிப்பால் (அரசியலுக்கு வராமலே அரசியலுக்கு முழுக்கு தனிக்கதை) படப்பிடிப்பு நின்றது.

இதனால் படக்குழு செய்வதறியாமல் தவித்து வந்தது.

தாம் அறிவித்தபடி 2021 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டினாலும் ரஜினியின் உடல்நலனே முக்கியம் என்பதையும் நினைவில் கொண்டது.

தேர்தலுக்கு பிறகு (முடிவுகளுக்கு முன்பு) கொரோனா காலத்திலும் பலத்த பாதுகாப்புடன் ஐதராபாத்தில் கடந்த 35 நாட்களாக படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

ரஜினி & நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

முக்கியமாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக எடுத்து முடித்துள்ளார் சிவா.

இன்னும் சில நாடுகளுக்கு மற்ற நடிகர்களின் காட்சிகளை எடுக்கவுள்ளார் சிவா.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பி வீட்டிற்கும் அவர்கள் ஏற்பாடு செய்த காரில் வந்துள்ளார் ரஜினி.

வழக்கம்போல ரஜினியை அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

இன்று அல்லது நாளை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இதன்பின்னர் ‘அண்ணாத்த’ பட டப்பிங்கை முடித்துவிட்டு கொரோனா ஊரடங்கிற்கு பின் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் சூப்பர் ஸ்டார்.

Superstar Rajinikanth has wrapped up the shoot of Annaatthe at Hyderabad

JUST IN ‘டாக்டர்’ ரிலீஸ் கேட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் லவ் டார்ச்சர்..; படக்குழு தந்த அதிர்ச்சி அப்டேட்

JUST IN ‘டாக்டர்’ ரிலீஸ் கேட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் லவ் டார்ச்சர்..; படக்குழு தந்த அதிர்ச்சி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

doctor sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

சிவாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்க வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் ‘டாக்டர்’ பட ஷுட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது.

இதனையடுத்து ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவித்தனர்.

அதன்பின் தமிழக தேர்தல் தேதி ஏப்ரல் 6 என அறிவிக்கப்பட்டதால் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி மே 14 ரம்ஜான் விருந்தாக படம் ரிலீஸ் என அறிவித்தனர்.

ஆனால் மே 10 முதல் 24 வரை கொரோனா முழு ஊரடங்கு என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனால் ‘டாக்டர்’ படக்குழு கன்ப்யூசன் ஆகினர்.

ஒருவேளை டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடுமா? தியேட்டரில் பார்த்து ரசிக்க முடியாதா? என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குழம்பியதால் அடிக்கடி ‘டாக்டர்’ ரிலீஸ் அப்டேட் கேட்டனர்.

இந்த நிலையில் கேஜேஆர் நிறுவனம் டாக்டர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளனர்.

அதில்… “கொரோனா காலத்தில் நிறைய உயிர்களை இழந்து வருகிறோம். நிலைமையை புரிந்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். ரிலீஸ் தேதி பின்னர் அறிவிப்போம்” என அறிவித்துள்ளனர்.

Official update regarding Doctor from KJR Studios

JUST IN விஜய் & ஜீவா படங்களில் நடித்த மாறன் கொரோனா தொற்றால் மரணம்

JUST IN விஜய் & ஜீவா படங்களில் நடித்த மாறன் கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Maaranதரணி இயக்கிய விஜய்யின் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்தவர் மாறன்.

டிஷ்யூம், சார்பட்டா பரம்பரை, குருவி, வேட்டைக்காரன், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

மேடை நாடக கலைஞரும், ஸ்டண்ட் கலைஞருமான மாறன் (எ) மணிமாறன் கொரோனா தொற்று காரணமாக இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். (வயது 48).

#RIP #ActorMaran #Covid

Ghilli fame Actor Maran passed away due to Covid 19

மநீம பிரச்சினை ஒரு பக்கம்.. ‘இந்தியன்-2’ பிரச்சினை ஒரு பக்கம்.; கவனத்தை வேறு பக்கம் திருப்பும் கமல்.!

மநீம பிரச்சினை ஒரு பக்கம்.. ‘இந்தியன்-2’ பிரச்சினை ஒரு பக்கம்.; கவனத்தை வேறு பக்கம் திருப்பும் கமல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் திமுக அதிமுக நாதக கட்சிகளுக்கு பிறகே மநீம இடம் பெற்றுள்ளது.

மேலும் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகள் விலகலால் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்தியன் 2 சூட்டிங் தாமதமாகி வருகிறது.

லைகா & ஷங்கர் இடையே தான் தலையிட்டும் சமாதானம் ஏற்படவில்லை என்பதால் கமல் வருத்தத்தில் இருக்கிறாராம்.

எனவே பிரச்சினையை அவர்கள் தரப்பில் முதலில் பேசித் தீர்க்கட்டும் என காத்திருக்கிறாராம் கமல்.

இரு பிரச்சினைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் எந்த சிக்கலுமில்லாத தன் சொந்த படமான ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

மே 24க்கு பிறகு கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சூட்டிங்குக்கு ஏதேனும் தளர்வுகள் கிடைத்தால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளாராம் கமல்ஹாசன்.

Kamal Haasan to kick start Vikram

JUST IN திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா காலமானார்.

JUST IN திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா காலமானார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nellai sivaபிரபல திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா (வயது 60) மாரடைப்பால் காலமானார்.

மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண்பாவம் ஆகும்.

இவர் முற்றிலும் நெல்லை வட்டார பாஷை பேசும் வழக்கம் உள்ளவர்.

இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது.

வடிவேலு & விவேக் உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை. திருநெல்வேலி மாவட்டம் அவரின் சொந்த ஊரான பணகுடியில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமானார்.

அவரின் அண்ணன் பிள்ளைகள் தான் இறுதி சடங்குகளை நாளை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandian Stores actor Nellai Siva passed away

More Articles
Follows