All Indians are my brothers and Sisters; உறுதிமொழியை காப்பாற்றிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோரும் நடிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பிம்பிலிக்கி பிலாப்பி மற்றும் ஜெஸ்ஸிகா ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

அக்டோபர் 24ல் தீபாவளியன்று படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அதற்கு முன்பே அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 9-ம் தேதி ட்ரைலர் & இசை வெளியீட்டு விழாவை இன்று ரசிகர்கள் முன்னிலையில் நடத்தி வருகிறது படக்குழு.

சற்றுமுன் இந்த படத்தில் பிரின்ஸ் படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியானது.

இதற்கு முன்பு வெளியான ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் மாணவனாக நடித்திருந்தார். ஆனால் பிரின்ஸ் படத்தில் ஆசிரியராக நடித்துள்ளார்.

இதே பள்ளியில் வெளிநாட்டைச் சேர்ந்த மரியா பணிபுரிவதாக காட்சிகள் உள்ளது.

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனும் மரியாவும் காதலிக்க ஊரில் எதிர்ப்பு உருவாகிறது.

இதன்படி All Indians are my brothers and Sisters என்ற உறுதிமொழியை நான் நினைவில் வைத்து தான் “வெளிநாட்டு பெண்ணை காதலித்தேன்…” என சிவகார்த்திகேயன் கூறுவதாக ட்ரைலரில் காட்சி இடம் பெற்றுள்ளது.

Sivakarthikeyans Prince movie trailer out now

இதோ அந்த ட்ரெய்லர்….

BREAKING நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ட்வின்ஸ்.; 4 மாசத்துக்குள்ள எப்படி தெரியுமா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ்சிவன் இருவரும் சமீபத்தில் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் 2022 மார்ச் மாதமே ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் நயன்தாரா நெற்றி வடிகில் குங்குமம் வைத்திருந்தார்.

இவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது ஏன் நெற்றியில் போட்டு வைத்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

திருமணத்திற்கு பிறகும் நிறைய படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளதால் அவர் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தாராம்.

மேலும் ஏற்கனவே நயன்தாராவுக்கு 38 வயதாகி விட்டதால் இனிமேல் கருவுற்று குழந்தை பெறுவது கடினமான செயல் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் (4 மாத கணக்குப்படி) இன்று அக்டோபர் 9 ஆம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நாங்கள் அம்மா & அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

(ஏற்கெனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி நயன்தாரா வாடகை தாய் மூலம் தற்போது குழந்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது)

ஏற்கனவே பாலிவுட் பிரபலம் நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Nayanthara and Vignesh Shivan welcoming a Twin babies through surrogacy.

‘சூர்யா 42’ குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இவரது மேடை நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும். இதற்கு காரணம் இவர் மேடையில் பாடிக் கொண்டே ஆடுவார் ஆடிக்கொண்டே பாடுவார்.

அங்கு கூடி இருக்கும் மக்களை எப்போதும் உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைப்பார். அந்த அளவு எனர்ஜியாக இவரது நிகழ்ச்சிகளும் பாடல்களும் எப்போதும் அமைந்திருக்கும்.

இவரது இசையில் கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 42வது படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இதனிடையில் இன்று அக்டோபர் 9ஆம் தேதி கமல்ஹாசன் முன்னிலையில் ‘ஓ பெண்ணே…’ என்ற இசை ஆல்பம் இன்று வெளியானது.

இதற்கான விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் தேவிஸ்ரீ பிரசாத் பேசும்போது..

“நான் சூர்யா 42 படத்திற்கு இசையமைத்து வருகிறேன் சிறுத்தை சிவா இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக வித்தியாசமான முறையில் 10 மொழிகளில் படமாக்கி வருகிறார்.

இந்த படத்தின் பாடல்கள் வேற லெவலில் இருக்கும். படமும் மிகப் பிரம்மாண்டமாக மாஸாகக உருவாகி வருகிறது,” என தெரிவித்தார் DSP.

Devi Sri Prasad talks about Suriya 42

மீண்டும் எழுந்த ‘நானே வருவேன்’.; தியேட்டர்கள் அதிகரிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிக பிரம்மாண்டமாக உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் 5 மொழிகளில் வெளியானது.

இதற்கு முந்தைய நாள் செப்டம்பர் 29-ம் தேதி ‘நானே வருவேன்’ படம் வெளியானது.

தனுஷ் இரு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கி நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

ஹீரோ வில்லன் என இரு வேடங்களில் நடித்து வித்தியாசமாக நடிப்பு கொடுத்திருந்த தனுஷ் ஒரு நடிப்பு அசுரன் தான் என ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

முதல் நாளிலேயே இந்த படம் நல்ல வசூலை அள்ளியது. அதன் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ அலை அதிக அளவில் காணப்பட்டதால் ‘நானே வருவேன்’ படம் பின்னடைவு சந்தித்ததாக வதந்திகள் கிளம்பியது.

ஆனாலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.

குறைந்த செலவில் இந்த படம் உருவானதாலும் தற்போது நல்ல வசூல் கிடைத்திருப்பதாலும் தயாரிப்பு தரப்பும் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் தியேட்டர்களும் அதிகரித்து வருவதால் பட குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

அக்டோபர் 7ஆம் தேதி பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ‘நானே வருவேன்’ படத்திற்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

Naane Varuven movie pick up recent updates

சத்யஜோதி – ஹிப்ஹாப் ஆதி 3வது முறையாக கூட்டணி.; இப்போவாச்சும் வெற்றி கிட்டுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘சிவகுமாரின் சபதம்’ & ‘அன்பறிவு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார் ஹிப்ஹாப் ஆதி.

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. விமர்சன ரீதியாகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இருந்தபோதிலும் தற்போது மூன்றாவது முறையாக ஹிப் ஹாப் ஆதி மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு..

சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா நாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக ‘வீரன்’ அமைந்துள்ளது. இதில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: ஹிப்ஹாப் தமிழா,
ஒளிப்பதிவு: தீபக் D மேனன்,
எடிட்டிங்: GK பிரசன்னா,
கலை: NK ராகுல்,
ஸ்டண்ட்ஸ்: மகேஷ் மாத்யூ,
விளம்பர வடிவமைப்பு: டனே ஜான் (Tuney John),
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One),
படங்கள்: அமீர்,
ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்

படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நிறைவடையும் தருவாயில் படத்தின் இசை, டீசர், ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்.

‘வீரன்’ படத்தைத் சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரித்து இருக்கின்றனர்.

Hip hop Aadhi Veeran shooting wrapped up

திருப்பூர் சப்-கலெக்டராக காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் நியமனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் நடைபெற்ற குடிமைப்பணி (UPSC) தேர்வு முடிவுகள் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியானது.

இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை (Lal Bahadur Shastri National Academy of Administration) பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் பயிற்சி காலம் முடிந்த பிறகு வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர்.

அதன்பின்னர் பல்வேறு அரசுத் துறைகளிலும் இவர்கள் பணியாற்றி வந்தனர்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.

அதன்படி மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்தவர் ஸ்ருதன்ஜெய் நாராயணன். இவர் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார்.

இந்த நிலையில் அவர் திருப்பூர் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ருதன்ஜெய் நாராயணன்.

இவர் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ல் வெளியான தேர்வு முடிவுகளில் 75-வது ரேங்க் பெற்றவராவார் ஸ்ருதன்ஜெய்.

Actor Chinni Jayanth son Sruthan Jai appointed as tirupur district sub collector

More Articles
Follows