50% சீட்.. 25 நாட்கள்.. 100 கோடி வசூல்..; ‘டாக்டர்’ உங்க ஆப்ரேஷன் சக்ஸஸ்

50% சீட்.. 25 நாட்கள்.. 100 கோடி வசூல்..; ‘டாக்டர்’ உங்க ஆப்ரேஷன் சக்ஸஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, அர்ச்சனா, வினய், இளவரசு, கிங்ஸ்லீ உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் டாக்டர்.

கேஜேஆர் ஸ்டூடியோ உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தார் சிவா. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

கொரோனா சமயத்தில் கூட ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் காத்திருந்து கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சனிக்கிழமை தியேட்டர்களில் வெளியிட்டனர்.

காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

கடந்த மாதம் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்து இருந்த நிலையிலும் இப்படம் வெளியான 25 நாட்களில் ரூ.100 கோடி வசூலை அள்ளியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அப்படியென்றால் டாக்டர் சிவகார்த்திகேயன் செய்த ஆப்ரேசன் சக்ஸ்ஸ் தானே..

Sivakarthikeyan’s Doctor film collected Rs 100 crore at the box office

இன்ஞ்ச் கேப்ல ப்ரியா இடையில் கைவைத்த ஹரிஷ் கல்யாண்..; தாராளபிரபுவே இது தகுமா.?

இன்ஞ்ச் கேப்ல ப்ரியா இடையில் கைவைத்த ஹரிஷ் கல்யாண்..; தாராளபிரபுவே இது தகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி (இளம்) ஹீரோக்கள் 30 மற்றும் 35 வயதை கடந்தவர்களே. இதில் சிம்பு, விஷால், அதர்வா தவிர பலரும் திருமணம் ஆனவர்களே.

எனவே இவர்கள் தண்டச்சோறு கேரக்டர்கள்.. லவ்வர் பாஸ், காலேஜ் பாய்ஸ் கேரக்டர்களில் பெரிதாக நடிப்பதில்லை.

எனவே இளம் ஹீரோ… சாக்லேட் பாய்… கேரக்டர்கள் ரோல்கள் ஹரிஷ் கல்யானுக்கு கிடைத்து வருகிறது. அவரும் இதுதான் சமயம் என புகுந்து விளையாடி வருகிறார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின் தமிழக ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.

இதனையடுத்து வெளியான ப்யார் ப்ரேமா காதல் படம் இவருக்கு ரொமான்டிக் ஹீரோ என்ற பெயரையும் பெற்று தந்தது.

எனவே சினிமாவை தாண்டியும் இவரின் ரொமான்ஸ் எல்லை சமீபகாலமாக விரிவடைந்து வருகிறது.

அண்மையில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஓ மணப்பெண்ணே’ என்ற படம் அக்டோபர் மாதம் ஓடிடியில் ரிலீசானது. இந்த படத்திற்கு நம் FILMI STREET தளத்தில் நல்ல மதிப்பெண் கொடுத்திருந்தோம்.

(இது விஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்கு சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்புலு என்ற படத்தின் ரீமேக் ஆகும்.)

ஓ மணப்பெண்ணே’ படக்குழுவினர் பட ரிலீசுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்வும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஹீரோ மற்றும் ஹீரோயின் தனியாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போதே நாயகி பிரியா பவானி சங்கரின் இடுப்பில் கை வைத்தப்படி போஸ் கொடுத்தார் ஹரிஷ்.

மேலும் மேடையில் படக்குழுவினருடன் போஸ் கொடுத்த போதும் பிரியா இடையில் தான் இவரின் கை இருந்தது. (கிடைத்த கேப்ல எல்லாம் சிக்ஸ்ர் அடிப்பது இதுதானோ..?)

படத்தில் தான் ரொமான்டிக் ஹீரோ என்று நினைத்தால் நிஜத்திலும் அதுவும் பொதுவெளியிலும் ரொமான்டிக் ஹீரோ என்று நினைக்கிறோரோ.? என்னவோ.?

பிரியா பவானி சங்கருக்கு தற்போது தான் பட வாய்ப்புகள் அதிகளவில் வந்துக் கொண்டு இருக்கின்றன. மேலும் பிரியாவுக்கு ஆல்ரெடி பாய் ப்ரெண்ட் இருப்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

எனவே பிரியா-க்களே கொஞ்சம் உஷாராவே இருங்க….

Harish Kalyan and Priya Bhavani shankar’s off screen chemistry creates controversy

விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் மஹிமா

விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் மஹிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொல்லிமலை, வரலாற்றில் வல்வில் ஓரி என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர்களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது.

பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் என்ற சக்திமிகு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளதாய் நம்பிக்கை. கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாயகங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.

சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி.

இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில், பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது.

ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார், தேவதர்ஷினி, தினா, அர்ஜே உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.

உணவு தயாரித்து தரும் தொழிலாளி முதல் உதவி இயக்குநர்கள் வரை அத்தனை பேரும் மிகுந்த ஒத்துழைப்போடு வலிகளையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக வேலை செய்து கொடுத்தது படத்தினுடைய தனி சிறப்பாகும் என்று தயாரிப்பாளர் கே முருகன் சிலாகித்துக் கூறினார்.

பிரமாண்ட பொருட்செலவில் எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில் பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகாயகங்கை அருவிக்கரையில் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில.

நடிகர்கள் :

பிரபுதேவா
மஹிமா நம்பியார்
கலையரசன்
நாசர்
அர்ஜெய்
தீனா
தேவதர்ஷினி
இயக்குநர் நட்டு தேவ்
ஜெய்சன் ஜோஸ்
சந்தோஷ்
முரளி
விஜய்
ரேவதி தரண்
குஹாசினி
தீபிகா
சுபாஷ்
சரவணன்
ஸ்ரீராம்
அகத்தியர்
ஸ்ரீதேவி

படக்குழு:

தயாரிப்பாளர்: கே முருகன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ் சரவண ரவிக்குமார் (எஸ்பிபி காலனி – ஈரோடு) இயக்குநர்: பா விஜய்
ஒளிப்பதிவு தீபக் குமார் பதி
கலை: சரவணன்
இசை: கணேஷ்
எடிட்டர் : சான் லோகேஷ்
ஸ்டண்ட் : கணேஷ்
உடைகள் : சாய்
ஆடை வடிவமைப்பாளர்: டோரதி
ஒப்பனை: குப்புசாமி
ஸ்டில்ஸ்: அன்பு
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Prabhudeva-starrer film produced by K Murugan of M S Movies and directed by Pa Vijay shot in Aagaya Gangai for first time

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நலனுக்காக முதல்வரிடம் ஜோதிகா சூர்யா நன்கொடை

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நலனுக்காக முதல்வரிடம் ஜோதிகா சூர்யா நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெய் பீம்’. தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகியிருக்கிறது.

இதனை ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் தேதி அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது.

இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.

திரைப்படம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ஊடகம் என்பது ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் இருளர் பழங்குடி இன மக்களும், அவ்வின மாணவர்களும் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகளை பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்களின் கல்வி நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா வழங்கினார்.

இதன் போது நடிகர் சூர்யா, ஜோதிகா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Surya and Jyotika donate Rs 1 crore to Irular Educational Trust

சமந்தாவை பாலிவுட்டில் நாயகியாக்கும் தயாரிப்பாளர் டாப்சி

சமந்தாவை பாலிவுட்டில் நாயகியாக்கும் தயாரிப்பாளர் டாப்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் உடன் ‘ஆடுகளம்’, அஜித்துடன் ‘ஆரம்பம்’, லாரன்ஸ் உடன் ‘காஞ்சனா-2’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டாப்சி.

இவரே கதையின் நாயகியாக நடித்த கேம் ஓவர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் அனபெல் சேதுபதி படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் நெகட்டிவ் விமர்சனங்கால் படு தோல்வியை சந்தித்தது.

தற்போது தமிழில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிசியான நடிகையாக மாறிவிட்டார் டாப்சி.

இவர் அண்மையில் அவுட்சைடர் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த படத்தில் சமந்தாவை நாயகியாக்கி நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர் டாப்சி.

இதன் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாவார்.

ஏற்கெனவே ‘பேமிலி மேன்’ வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்றவர் சமந்தா என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Taapsee turns producer in this film?

கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் தரும் டைரக்டர்

கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் தரும் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, மலையாள நடிகர்கள் பகத் பாசில், நரேன், காளிதாஸ், மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிரூத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று அவரது ரசிகர்களுக்கு மெகா விருந்து வைக்க படக்குழு தயாராகி வருகிறதாம்.

அதாவது விக்ரம் படத்தின் டீசர் அல்லது போஸ்டர் அல்லது க்ளிம்ஸ் இதில் ஏதாவது ஒன்று வெளியாகலாம் என தெரிய வந்துள்ளது.

Kamal Haasan’s birthday treat to his fans

More Articles
Follows