வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayalaan first look“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது. தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய கனவு. ஹாலிவுட்டின் வெற்றி சரித்தரமாக விளங்கும் இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயாலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன், அவர்களுக்கு அடுத்ததொரு இன்ப அதிர்ச்சியாக, “அயலான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் படக்குழு. ஏற்கனவே A. R. ரஹ்மான் இசைத்துணுக்குடன் வெளியிடப்பட்ட டைட்டில், பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் வேற்றுகிரக வாசியுடன் வெளிவந்திருக்கும் “அயாலான்” ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

“அயலான்” படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மொத்த படப்பிடிப்பும் முடிய இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் படப்பிடிப்புடன் இணையாக நடைபெற்று வருகிறது.தமிழின் பிரமாண்டமான அறிவியல் புனைகதை ( சயின்ஸ் ஃபிக்‌ஷன் ) படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுதும் முன்னணி நாயகியாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். காமெடி ராஜாக்களாக வலம் வரும் கருணாகரன், யோகிபாபு ஆகிய இருவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள். பாலிவுட்டில் மிக சிறந்த நடிகராக விளங்கும் சரத் கேல்கர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்” அகாடமி அவார்ட் வின்னர் A. R. ரஹ்மான் சிவகார்த்திகேயனின் அறிமுகப்பாடலை பாடியுள்ளார். மாயஜால விஷ்வல்களை திரையில் கொண்டு வரும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Doctor First look posterசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று காலை “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறுகுறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும் இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ள செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2020 ஆம் வருடத்தின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, கோவாவில் 15 நாட்கள் திட்டமிடப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கோவாவில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன், படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து பெரும் மர்மம் நிலவும் நிலையில், ஃபர்ஸ் லுக்கில் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் ‘மெடிகல் சர்ஜிகல் கத்திகள்’ படத்தின் கதை என்னாவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

இப்படத்தில் தென்னிந்திய சினிமாக்களில் சமீபத்திய பரபரப்பான நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். ஸ்டைலீஷ் நாயகன் வினய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

KJR Studios உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இப்படத்தினை இயக்குகிறார்.

33 நாட்களில் படமாக்கப்பட்ட மாஃபியா

33 நாட்களில் படமாக்கப்பட்ட மாஃபியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay in Mafiaஇந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”.
துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா – பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.

இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் படக்குழு மாஃபியா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது.

பாடலாசிரியர் விவேக் பேசியது…

முதன் முதலில் துருவங்கள் பதினாறு படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்த்திக்கின் திறமை பளிச்சிட்டது. இப்படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களுடன் வந்துள்ளார். அவர் பெரிய அளவில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்தப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் தாங்கும் அளவு பாடல்கள் எழுத வேண்டி இருந்தது. அது சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் ஜாக்ஸ் பெஜாய் பேசியது…

லைகாவுக்கும், கார்த்திக்கிக்கும் நன்றி. கார்த்தியை முன்னதாகவே தெரியும்.மிகவும் திறமை வாய்ந்த நபர். அவரது திட்டமிடல் அனைவரையும் அசரடிக்கும். இந்தப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் ரசிப்பீர்கள். இந்தப்படத்தில் இசையில் சிம்பொனியை பயன்படுத்தியுள்ளோம். வெளிநாட்டில் வைத்து ரெக்கார்டிங் செய்தோம். படம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் கார்த்திக் நரேன் பேசியது….

“மாஃபியா” உருவாக காரணமாயிருந்த இருவர் லைகாவும், அருண்விஜய்யும் தான் இருவருக்கும் நன்றி. கதை விவாதத்தின் போதே அருண் விஜய், பிரசன்னா தான் மனதில் இருந்தார்கள். அவர்களே இந்தப்படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி. தடம் சமயத்தில் தான் அருண்விஜய்யிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. வெகு இயல்பாக இருந்தார். வெகு அற்புதமாக நடித்துள்ளார். பிரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரது நடிப்பில் இந்தப்படத்தின் வில்லன் வேடம் மிகச்சிறப்பாக பேசப்படும். ப்ரியா பவானி சங்கர் இதுவரை செய்யாத வேடம், செய்துள்ளார் இந்தக்கதாப்பாத்திரம் பற்றி கேட்டபோதே என்னை வித்தியாசமாக யோசித்ததற்கு நன்றி என்றார். ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள். பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நான் ரசிகன். இதில் அருமையாக எழுதியுள்ளார். ஜேக்ஸ் அண்ணா துருவங்கள் பதினாறு படத்தில் இருந்தே தெரியும். இந்தபடத்தில் உலகத்தரமான இசையை தந்துள்ளார். 33 நாட்களில் இந்தப்படத்தை எடுத்துள்ளோம் படக்குழுவின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. படக்குழு அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 21 படம் வருகிறது இது ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

நடிகை ப்ரியா பவானி சங்கர் பேசியது….

“மாஃபியா” எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நிறைய நல்ல நண்பர்களை வாழ்வில் தந்த படம். ஜேக்ஸ் இசை எனக்கு பிடிக்கும். அருண், பிரசன்னா திரையில் வந்தாலே அவர்களது திறமை மிளிரும். கார்த்திக் தனக்கு என்ன தேவை என தெரிந்து வேலை செய்யும் மனிதர். இத்தனை சீக்கிரத்தில் இப்படியொரு படம் செய்ய, அவர் திறமையே காரணம். அருண் பலருக்கு முன்மாதிரியாக திகழ்பவர். என் வாழ்விலும் நிறைய பாதிப்பை தந்துள்ளார். ஒரு தோல்வியிலிருந்து மீண்டு எப்படி வெற்றி பெறுவது என கற்றுக்கொள்ள அவரிடம் நிறைய இருக்கிறது. தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். “மாஃபியா” இனி உங்கள் கைகளில் இருக்கிறது. மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி.

நடிகர் பிரசன்னா பேசியது….

இந்த மேடை நன்றி அறிவிப்பு கூட்டம் மாதிரி ஆகிவிட்டது. இந்தப்படம் வெற்றிப்படம் என அனைவர் மனதிலும் பதிந்ததால், எல்லோரும் நன்றி கூறுகிறார்கள். படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் லைகாவுக்கு நன்றி. தமிழில் சொன்ன நேரத்தில், சொன்ன பட்ஜெட்டில், முடிக்க கூடிய இயக்குநர்கள் வெகு சிலரே. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி போன்றோர் வரிசையில் கார்த்தி இடம்பிடித்து விட்டார். அவர் வெகு நீண்ட காலம் சினிமாவில் மிளிர்வார். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இயக்குநர் அவர். மிகச்சிறந்த திட்டமிடல் அவரிடம் இருக்கிறது. அருண் பற்றி ப்ரியா அழகாக சொல்லிவிட்டார். தோல்வியில் இருந்து மீண்டெழுவதில், பலருக்கு சினிமாவில் முன் மாதிரியாக இருக்கிறார். உங்களிடம் கற்றுக்கொள்கிறேன். தமிழை கூச்சமின்றி அழகாக பேசும் நாயகி ப்ரியா, அவர் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். விவேக்கின் பாடல் வரிகள் அனைத்தும் அருமை. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். படம் எங்களுக்கு நிறைவாக இருக்கிறது. உங்களையும் கவரும் நன்றி.

நடிகர் அருண் விஜய் பேசியது…

25 வருடம் சினிமாவில், இது என் குடும்பம் போல். பத்திரிக்கையாளர்களின் எழுத்து தான் என்னை வடிவமைத்தது. உங்களுக்கு நன்றி. 25 வருடம் எனக்கு நிறைய பேர் ஆதரவாக இருந்தார்கள், எனது குடும்பம், ரசிகர்கள் எல்லோரும் பெரிதும் ஆதரவாக உள்ளார்கள். 25 வது வருடத்தில் எனது முதல் படம் “மாஃபியா”. இயக்குநர் கார்த்திக் பார்வையில் என்னை எப்படி காட்டப்போகிறார் என ஆர்வமாக இருந்தேன். கார்த்திக்கை பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் எனபதில் படு தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும் படக்குழு அனைவருமே பெரும் பலமாக இப்படத்திற்கு உழைத்துள்ளனர். இவ்வளவு சீக்கிரத்தில் படமெடுக்க பின்னணியில் பெரும் உழைப்பு இருக்கிறது. லைகா மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம். விவேக்கின் வரிகள் அற்புதமாக இருந்தது. பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய சந்தோஷம். மிக அர்ப்பணிப்பு மிக்க நடிகர். இந்தப்படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன். ப்ரியா என்னை பற்றி நல்லவிதமாக சொன்னதற்கு நன்றி. தமிழ் பேசும் அழகான ஹீரோயின் ஷங்கர் சார் படம் செய்கிறார். மிக ஜாலியானவர். திறமை மிக்க ஒரு நடிகை. அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு புது அனுபவத்தை இந்தப்படம் தரும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து இயக்கம் – கார்த்திக் நரேன்

இசை – ஜாக்ஸ் பெஜாய்

ஒளிப்பதிவு – கோகுல் பெனாய்

படத்தொகுப்பு – ஶ்ரீஜித் சாரங்

சண்டைப்பயிற்சி – டான் அசோக்

கலை இயக்கம்- சிவ சங்கர்

உடை வடிவமைப்பு – அசோக் குமார்

விஷிவல் எஃபெக்ட்ஸ் – Knack Studios

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one

நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜன்

தயாரிப்பு – சுபாஸ்கரன்

தயாரிப்பு நிறுவனம் – Lyca Productions

மனிதர்கள் மீதான அன்பும் , செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது நடிகர் மன்சூரலிகான்

மனிதர்கள் மீதான அன்பும் , செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது நடிகர் மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mansoor ali khanநடிகர் மன்சூர் அலிகான் தான் கதாநாயகனாக நடிக்க இருந்த கைதி பட வாய்ப்பு பறிபோனதிலிருந்து, கிடைக்கும் அதிரி, புதிரி நகைச்சுவை வேடங்களில் பட்டையைக்கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
சமீப காலமாக போராட்டம் வழக்கு ஜெயில், தேர்தல் பிரச்சாரம் என்று சென்று கொண்டிருந்த அவர் தற்போது படப்பிடிப்புத் தளம் வீடு என தன் கவனம் முழுதுவதையும் நடிப்பிலே செலுத்தத் துவங்கி இருக்கிறார். பெரும்பாலும் அலைபேசியில் கூட அவரை பிடிக்க முடியவில்லை.அவருக்கு அழைத்தால் அவரது மேனஜர் தான் போனை எடுக்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு மன்சூர் அலிகானைத் தொடர்பு “ஏன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குறீர்கள்?” என்று கேட்டபோது,

“என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பின் போதே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இப்போது நிறைய படங்களிலும் நடித்து வருகிறேன். கெளதம் மேனன் இயக்கும் படம், இயக்குநர் சற்குணத்தின் படம், தங்கர் பச்சான் இயக்கும் படம், ரெஜினா கசன்ட்ராவோடு ஒரு படம், விமல், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறேன். மனிதர்கள் மீதான அன்பும் செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது. சினிமா வாழ்விலும் என் வீட்டிலும் இன்னும் பல நல்ல செய்திகள் வரும்” என்றார்
Thanks & Regards

ஹீரோக்கள் சொந்தமாக கேரவன் வைத்துக் கொள்ளனும்..; மரிஜுவானா இசை விழாவில் கே. ராஜன் பேச்சு

ஹீரோக்கள் சொந்தமாக கேரவன் வைத்துக் கொள்ளனும்..; மரிஜுவானா இசை விழாவில் கே. ராஜன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Heros must have own caravan says K Rajan at Marijuana audio launch3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது:

தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது,

‘மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:.

கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம்.

இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார் என்றார்.

நாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,

இப்படத்தின் கதையைக் கேட்டதும் சமுதாயத்திற்கு சிறந்த கருத்தைக் கூறும் படமாக இருந்தது. ஆகையால், எனக்கு சம்பளம் வேண்டாம் நான் நடிக்கிறேன் என்று கூறினேன் என்றார்.

தமிழ்த்தாய் கலைக்கூடம் ராஜலிங்கம் பேசும்போது,

இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இச்சமுதாயத்தில் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை கூறும் படம் இது. 40 வயதில் இருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

இசையமைப்பாளர் கார்த்திக் குரு பேசும்போது,

இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் சினிமா துறைக்கே வந்தேன். ஆனால், போதிய வாய்ப்பு கிடைக்காததால், இசையை விட்டு வேறு துறைக்கு செல்லலாம் என்ற முடிவில் இருந்தேன். எம்.டி.விஜய் மற்றும் எம்.டி.ஆனந்த் இருவரும் மீண்டும் இசை துறைக்கு அழைத்து வந்து விட்டார்கள்.

இப்படத்தில் எம்.டி.விஜயும் எம்.டி.ஆனந்தும் முழு சுதந்திரம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆகையால் தான் என்னால் சிறப்பாக இசையமைக்க முடிந்தது என்றார்.

இப்படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடிக் கொடுத்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வருவதற்கு பின்னணி பாடகர்கள் தான் காரணம் என்றார்.

கதாநாயகி ஆஷா பேசும்போது,

இயக்குநர் மிகவும் வித்தியாசமானவர். எங்களை எங்கள் போக்குக்கு நடிக்க விட்டுவிட்டு, தவறு இருக்குமிடத்தில் மட்டும் சரி செய்வார். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் ரிஷி பயப்படாதீர்கள் என்று கூறிக் கொண்டிருப்பார் என்றார்.

சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசும்போது,

நல்ல கருத்தைக் கூறும் படம் ‘மரிஜுவானா’. இப்படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

மம்முட்டி போல் அனைவரும் அவரவர் செலவில் கேரவன் வைத்துக்கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர்களும் 10% வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், மாநில அரசு வைத்திருக்கும் 8% வரியை நீக்க சொல்லி கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசு சினிமா துறையை நசுக்குகிறது. இது தொடர்ந்தால், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம்.

ரிஷி ரித்விக்கைப் பார்க்கும் போது தமிழ் படத்திற்கு அர்னால்டு கிடைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அதைப் பார்த்து போதை பொருட்களுக்கு பாதிக்கபட்டவர்கள் திருந்த வேண்டும் என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

வரி கட்டுவதற்காக போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முறையான விளக்கத்தோடு அரசாங்கத்தை அணுகினாலே போதுமானது என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதற்கு இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பதிலளித்தார்.

மேலும், பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது,

ஆர்.கே.செல்வமணியும் பாக்யராஜும் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தவர்கள். அதேபோல், நீங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருக்கிறீர்கள் என்று எம்.டி.ஆனந்த் கூறினார். ஆகையால் தான் இந்த விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்தேன். இந்த விழாவைப் பார்க்கும் போது வெற்றி விழாவாகத் தோன்றுகிறது.

மேலும், இது போன்ற நல்ல கருத்தை கூறும் குறைந்த பொருட்செலவில் எடுக்கும் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

இந்த படத்தின் பெயருக்கு அர்த்தம் கேட்ட போது, கஞ்சா என்று கூறினார்கள். 45 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா அடித்திருக்கிறேன். ஒரு முறை போதையில் என் நண்பன் தன்னிலையறியாமல் இருப்பதைப் பார்த்தேன். இப்படி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்று அன்று முதல் கஞ்சா அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன். இப்படம் கஞ்சா உபயோகிப்பதன் பாதிப்பை கூறுவதால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக அமையும் என்றார்.

சாய் தீனா பேசும்போது,

வடசென்னையில் இருக்கும் ஜிம் பாய் பசங்களுக்கு நீண்ட நாள் போராடியும் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதைப் பெற்று கொடுத்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை கூறியிருக்கும் இப்படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும் என்றார்.

‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது,

இப்படம் மூலம் இயக்குனரும், தயாரிப்பாளரும் சமுதாயத்திற்கு நல்ல கருத்தை கூறி இருக்கிறார்கள். நாயகன் ரிஷி ரித்விக் தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். நாயகி ஆஷா தமிழ் பெண் என்பதில் பெருமகிழ்ச்சி. இவர் போல துணிச்சலான தமிழ் பெண்கள் சினிமா துறைக்கு வரவேண்டும். இப்படத்தை வாழ்த்த இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. இந்த அரங்கமே வெற்றி விழா போல காட்சி அளிக்கிறது என்றார்.

இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசும்போது,

இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா.

அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன்.

மேலும், தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே.

கார்த்திக் குரு இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது.

‘அட்டு’ படத்தைப் பார்த்து இது மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என் தம்பியிடம் கூறினேன். ஆனால், ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக்கை வைத்து படம் இயக்கியத்தில் மகிழ்ச்சி.

நாயகி ஆஷா எல்லா விதமான காட்சிகளிலும் தைரியமாக நடிக்க கூடியவர் என்றார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,

என்னை இந்த விழாவிற்கு அழைத்து போது இவ்வளவு பெரிய அரங்கத்தில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு என்ன கூட்டம் வந்து விட போகிறது என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்துவிட்டது. திரைப்படம் மூலம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘மரிஜுவானா’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது

Production : “Third Eye Creation”
Producer : M.D. Vijay
Movie Name : MARIJUANA
Director : M.D. Anand
Hero : “Attu” Rishi Rithvik
Heroine : Asha Parthalom
Artist : Power Star , Gana Harish , Madurai Joseph , Janani
Music Director : Karthik Guru
Choreography : “5th Element” Pravin
Dop : Bala Rosiah
Singers : “Thenisai Thendral” Deva, Ananthu , Manu Vardhan , Shobika Murugesan , Smurthi Sridher .
Stunt : Saran
PRO : Priya
Editor : M.D.Vijay
Production Executive : Eazlumala

Heros must have own caravan says K Rajan at Marijuana audio launch

Marijuana audio launch

பிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” !

பிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhagheeraஇயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுதேவாவை நாயகனாக கொண்டு இயக்கியுள்ள படத்திற்கு “பஹிரா” என தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பே நம்மை உள்ளிழுக்கும் அம்சமாக இருக்கும் அதே நேரம், பல கேள்விகளையும் எழுப்புகிறது. படம் எதைப்பற்றியது என ஆவலைத் தூண்டும்படி தலைப்பு அமைந்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தலைப்பு பற்றி கூறும்போது…

இத்தலைப்பு பிரபல காமிக் கதையில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஆகும். “தி ஜங்கிள் புக்” காமிக் கதையில் வரும் ஒரு கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. அந்தக்கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா சாரின் கதாப்பாத்திரம் இந்த குணநலன்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கதாப்பாத்திரம் அவருடையது, அதனால் தான் இந்தப்பெயரை வைத்தோம். இத்தருணத்தில் நடிகர் தனுஷுற்கு எங்கள் படத்தின் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டதற்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். “பஹிரா” படம் சைக்கோ திரில்லர் கலந்த மர்ம வகை படமாகும். அதனுள் பல ஆச்சர்யங்களும் பல திருப்பங்களும் கொண்டிருக்கும்.

இப்படம் சைக்கோ திரில்லர் வகை என்றால் தொடர் கொலைகள் படத்தின் கதையில் இடம்பெறுமா என வினவியபோது…

இப்போதைக்கு எதைப்பற்றியுமே சொல்ல முடியாது. ஆனால் இந்த வகை படங்களிலிருந்து முழுக்க மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தை இந்தப்படம் உங்களுக்கு தரும். இதுவரையில் இல்லாத பல புதுமைகளை இப்படத்தில் கையாள உள்ளோம். படத்தை பற்றி சொல்லி அதன் சுவராஸ்யங்களை குறைக்க விரும்பவில்லை அதை நீங்களே படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று மட்டும் உறுதி இப்படத்தில் பிரபுதேவா சாரை நீங்கள் இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில், புத்தம் புது கோணத்தில் காண்பீர்கள் என்றார்.

R.V. பரதன் B.A,B.L மற்றும் S.V.R.ரவி சங்கர் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். அனேகன் படப்புகழ் அமீரா தஸ்தர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகைகள் பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம்- ஆதிக் ரவிச்சந்திரன்

இசை – கணேசன் சேகர்

ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமனுஜம்

படத்தொகுப்பு – ரூபன்

கலை இயக்கம் – ஷிவ யாதவ்

சண்டைப்பயிற்சி – ராஜசேகர், அன்பறிவு

நடனம் – “பாபா” பாஸ்கர்

பாடல்கள் – பா.விஜய்

உடை வடிவமைப்பு – NJ.சத்யா

மேக்கப் – குப்புசாமி

புகைப்படம் – சாரதி

விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஹரிஹர சுதன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு – P.பாண்டியன்

டிசைன்ஸ் – D stage

டைட்டில் டிசைன் – சிவக்குமார்

தயாரிப்பு – R.V. பரதன் B.A,B.L மற்றும் S.V.R.ரவி சங்கர்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D one

More Articles
Follows