தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக விவசாயிகள் பிரச்சினைக்காக நடிகர்கள் ஜிவி. பிரகாஷ், ஆரி, அபி சரவணன் ஆகியோர் தங்களால் இயன்ற வரை போராடி வருகின்றனர்.
அண்மையில் விவசாயிகள் சம்பந்தமாக ஒரு விழாவினை நடிகர் ஆரி நடத்தினார்.
அதில் கலந்துக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது…
“இங்கே விவசாயம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
எனவே எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழை போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன்.
வருங்காலத்தில் விவசாயம் செய்ய முற்படுவேன்.” என்று பேசினார்.
வேலைக்காரன் படத்தின் போது இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என பகிரங்கமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை வாங்கி கொடுக்காதீர்கள் எனவும் கூறியிருந்தார்.
அதனை தன் வீட்டிலும் கடைப்பிடித்து வருகிறார்.
இதுவரை தனது மகள் ஆராதனாவுக்கு சிக்கன் பர்கர், பீட்சா போன்ற உணவுகளை அவர் வாங்கி கொடுத்தது இல்லையாம்.
Sivakarthikeyan wont buy Pizza for his daughter Aaradhana