அப்பாவுடன் வாழும் அதிர்ஷ்ட்டத்தை பெறாதவன் நான்.. சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை டூ வெள்ளித்திரை வந்த சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரது தந்தை காவல் துறை அதிகாரியாக பணி புரிந்தவர். அவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.

கடந்த 2003 – ம் ஆண்டு மறைந்த சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் பற்றி அவருடன் பணியாற்றிய உதவியாளர் சௌந்தரராஜன் என்பவர் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் சிவகார்த்தியின் அப்பா உயிரிழக்கும் கடைசி நிமிடத்தில் தான் மட்டுமே அவருடன் இருந்ததாகவும், அந்த நினைவுகளை மறக்க முடியாது என்றும் அவரது இறந்த நாளில் தெரிவித்துள்ளார்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த சிவகார்த்திகேயன்…

என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவருடன் பல வருடங்கள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டத்தை கிடைக்கப் பெறாதவன் எனவும் அவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி என்ற வசீகரம் வென்று விட்டது; காலா குறித்து விவேக் கமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் உருவான காலா திரைப்படம் கடந்த ஜீன் 7ஆம் தேதி வெளியானது.

இதில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டீல், அருந்ததி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளன்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விவேக், காலா படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், காலா பார்த்தேன். சூப்பர் ஸ்டாரை வித்தியாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும்,’ ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது ’ என தெரிவித்துள்ளார்.

காலா பார்த்தேன். Super starஐ வித்யாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது. @rajinikanth @dhanushkraja

— Vivekh actor (@Actor_Vivek)

பர்ஸ்ட் லுக்கும் வேண்டாம்; பர்த் டேவும் வேண்டாம்; விஜய் திடீர் முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் 44 வது பிறந்த நாள் வருகிற ஜூன் 22 – ம் தேதி வருகிறது.

விஜய் படங்கள் என்றாலே அவரது ரசிகர்கள் அமர்களம் செய்துவிடுவார்கள். அதுவும் அவரின் பிறந்தநாள் என்றால் கேட்கவா வேண்டும்..?

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட இப்போதே தயாராகி விட்டனர்.

அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாக சந்தித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார் விஜய்.

அதனால், இந்தாண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்த உள்ளாராம் விஜய்.

அன்று துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் அன்று வெளியிட வேண்டாம் என விஜய் வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

காலா படத்தை பார்ப்பேன்; ரஜினியை ரசிப்பேன்… – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் அவர்கள் ரஜினியை தாக்கி பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர்.

ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை இவர் கண்டிக்காத நாளில்லை.

இந்நிலையில் அண்மையில் வெளியான ரஜினியின் காலா திரைப்படம் பற்றி இவர் பேசியுள்ளார்.

அப்போது காலா திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. விரைவில் அந்த படத்தை பார்ப்பேன்.

ரஜினிக்கு இருக்கிற பெரிய ரசிகர்கள் வட்டத்தில் நானும் ஒருவன். காலா படம் பார்ப்பேன். அவரை ரசிப்பேன்.

ஆனால் தியேட்டரில் பார்ப்பேன் என சொல்ல முடியாது. அங்கே ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருக்கும்.” என்று பேசினார்.

I will watch Kaala movie and as a fan i will admire Rajini acting says Seeman

விஸ்வரூபம்-2 ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’ படம் மாபெரும் வெற்றியடைய அதன் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம்-2’ படத்தை உருவாக்கினார் கமல்ஹாசன்.

இதில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இன்று இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளின் டிரைலர் வெளியாகவுள்ளது.

ஹிந்தி பதிப்பை அமீர்கான் வெளியிடுகிறார். ஸ்ருதிஹாசன் தமிழ் பதிப்பை வெளியிட, தெலுங்கு பதிப்பை ஜூனியர் என்டிஆர் வெளியிடுகிறார்.

இன்று மாலை 5 மணிக்கு இது வெளியாகவுள்ளது.

இதுதொடர்பான போஸ்டரில் இதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற சுதந்திர தின விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Vishwaroopam 2 movie release on 10th August 2018 as Independence day special

மீண்டும் தேசப்பற்று கதையுடன் ஜிப்ஸி-யை எடுக்கும் ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோக்கர் படத்தை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜிப்ஸி’.

இதில் ஜீவா மற்றும் நடாஷா சிங் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜீன் 11ஆம் தேதி 12.01 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.

அதில் நாயகி இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறார்.

அப்படத்தின் போஸ்டரில் தேசப்பற்றை குறிப்பிடும் வகையில் இந்திய தேசிய கொடி இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் நம் நாட்டு நடப்புகளை அலசியிருந்தது. எனவே இந்த படமும் நம் நாட்டுக்கு தேவையான கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Jiivas next movie Gypsy First look released

More Articles
Follows