பாண்டிராஜ் படத்திற்காக இணையும் சிவகார்த்திகேயன்-சூரி-சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவியில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை தன் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் பாண்டிராஜ்.

அதன்பின்னர் சிவகார்த்திகேயன் தன் கேரியரில் படு வேகமாக முன்னேறி இன்று முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்காக மீண்டும் இணையவுள்ளார்.

இவருடன் சிவாவின் நெருங்கிய நண்பர்களான சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் இணையவுள்ளனர்.

ஒரு புதிய படத்தின் அறிவிப்பை இந்த மூவரும் வெளியிடவுள்ளனர்.

இன்று மாலை 5,30 மணிக்கு இந்த தகவல் வெளியாகவுள்ளது.

Sivakarthikeyan Soori Sathish joins hands with Director Pandiraj

அரசியல் சாக்கடை ரஜினி வருகையால் சுத்தமாகும்.: ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் மதுரை மாவட்ட ரசிகர்களை சந்திக்கும்போது.. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபம் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை.

எனவே விரைவில் கிடா விருந்தளிப்பேன் என பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் ரஜினி செய்வதற்கு முன்பே, அவரது மதுரை ரசிகர்கள் கிடா வெட்டி விருந்து வைத்துவிட்டனர்.

மதுரை அழகர் கோயில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு, பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி விருந்தளித்து விழாவை நடத்தியுள்ளனர்.

பொது இடத்தில் கிடாக்களை மொத்தமாக வெட்டுவதை தவிர்க்கவும் என்று பீட்டா அமைப்பு கேட்டுக் கொண்டதால், ஆட்டுக்கறி கடையில் இருந்து கறி வாங்கி சமைத்து விருந்து வைத்துள்ளனர்.

இந்த விழாவை தொடங்கி வைக்க வந்த ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது…

“கார் துடைத்துக் கொண்டிருந்த என்னை நடிகராக்கி அழகு பார்த்தவர் ரஜினிகாந்த்.

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அவர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால், எனது மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் குத்திக் கொண்டே இருக்கும் என்று ரஜினி சார் கூறியதைப் போல், என்னை வாழவைத்த ரஜினி அவர்களுக்கு, மக்களை பாதுகாக்க செல்லும் போது, அவருக்கு ஆதரவாக நான் நிற்கவில்லை என்றால், என் மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ விடாது”

ரஜினி அவர்களின் ஆன்மீக அரசியலில், நான் அவரின் காவலனாக இருப்பேன்.

கட்சி, சின்னம், கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருக்கும் போதே இவ்வளவு பரபரப்பு என்றால், அவற்றையெல்லாம் ரஜினி அறிவித்த பிறகு தான் உண்மையில் அரசியல்வாதிகளுக்கு தலை சுத்தப் போகிறது.

நடிகர்களை மக்கள் ஏற்கிறார்களா? இல்லையா? என்பதை தேர்தலுக்கு பின்பு தெரியும்.

தற்போது அரசியலை சாக்கடை என்கிறார்கள். ரஜினி வந்ததும் அரசியல் சுத்தமாகும். அவர் வந்தால் கோட்டையை பிடிப்பது உறுதி என்றார்.

Sure Rajinikanth will became Chief Minister of TN says Actor Lawrance

மஹாவீர் கர்ணா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் இந்த வாரம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இதனையடுத்து புதிய ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாராகும் என கூறப்படுகிறது.

ரூ. 300 கோடியில் தயாராகவுள்ள இப்படத்தை ஆர்.எஸ். விமல் என்பவர் இயக்குகிறார்.

இவர் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘எந்நு நின்டெ மொய்தீன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனைடெட் ஃபிலிம் கிங்டம் தயாரிக்கிறது.

Vikram signed Hindi film Mahavir Karna directed by RS Vimal

காதலர் தினத்தை குறிவைக்கும் ஜீவா-நிக்கி கல்ராணியின் கீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்துள்ள படம் ‘கீ’.

இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Jiiva and Nikki Galrani starring Kee movie release updates

அதிக விலைக்கு விற்பனையானது தானா சேர்ந்த கூட்டம் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி3 படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வருகிறது.

ரிலீசுக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை 86 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேங் என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியாகிறது.

Suriya Thaana Serndha Kootam trade updates

அமிதாப்பச்சனை தமிழ் சினிமாவுக்கு அழைக்கும் சூர்யா-கேவி.ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் அடுத்த வாரம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இதில் சாய் பல்லவி, ரகுல்பிரித்தி சிங் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கிறாராம்.

இவர் ஏற்கெனவே சூர்யா நடித்த ‘அயன், மாற்றான்’ படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இதுவரை நேரடி தமிழ் படங்களில் அமிதாப்பச்சன் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Amitabh Bachchan likely to join with Suriya and KV Anand project

More Articles
Follows