கதிருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருமி படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பாப்புலர் ஆனவர் கதிர்.

மேலும் சிகை என்ற படத்தில் பெண் வேடமிட்டு நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என அவரே தெரிவித்து இருந்தார்.

அண்மையில் வெளியான விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் SSN என்ற பெயரில் சில போஸ்டர்கள் இணையத்தில் உலா வந்துக் கொண்டிருந்தன.

தற்போது அதுபற்றிய தகவல்கள் வந்துள்ளது. ஆனால் முழுமையான தகவல்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதில் கதிருடன் சிவகார்த்திகேயன், சமந்தா, நிவின்பாலி ஆகியோர் கை கோர்க்கின்றனர் எனவும் விளம்பரங்களில் தெரிவித்துள்ளனர்.

ஜஸ்ட் 7 மணி நேரம் காத்திருப்போம். என்னவென்று அறிய..?

Sivakarthikeyan Samanth Nivin Pauly join hands for Kathir

மீசைய முறுக்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் இசை ஆல்பங்களால் யூடிப்பில் ஹிட் அடித்து பிரபலமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

அதன் பின்னர் ஆம்பள, தனி ஒருவன் படங்களில் இசைமைத்துத்தார்.

தற்போது அவரே நடிகர், இயக்குனர், பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என் முக்கிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டு மீசைய முறுக்கு படத்தை இயக்கினார்.

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் உற்சாகத்தில் இருக்கிறது ஆதி அண்ட் டீம்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மீசைய முறுக்கு படத்தை தயாரித்த சுந்தர்.சி நிறுவனமான ஆவ்னி மூவீஸே இந்தப் படத்தை தயாரிக்கிறதாம்.

Meesaya Murukku fame Hiphop Aadhis next movie updates

வரிவிலக்கு அளிக்க லஞ்சம்; வீட்டுக்கு லஞ்ச் கேட்கிறாங்க… – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளரும் நடிகருமான கே. ராஜன் பேசியதாவது…

“சினிமா மோசமான சூழ்நிலையை அடைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்களால் அவதிப்படுகிறார்கள்.

பெப்சி தொழிலாளர்கள் உழைக்கும் தோழர்கள்தான். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் நாங்களும் நன்றாக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது டிராவலிங் பேட்டா கேட்கிறார்கள். அதுவும் 24 மணி நேரம் டிராவல் செய்து சூட்டிங் வந்தால் டபுள் பேட்டா கேட்கிறார்கள்.

அதுவும் ஒரே ஒருவர் இப்படி செய்கிறார். அந்த மீட்டிங் போய்விட்டு வந்தேன். அதான் இங்கு வர நேரம் ஆகிவிட்டது.

இந்த விழாவுக்கு படத்தின் நாயகி இனியா வரவில்லை என்றார்கள். சில நடிகர்கள் நடிகைகள் இப்படிதான் செய்கிறார்கள். அவர்களுக்கு திமிரு.

அதான் தங்கள் படவிழாவுக்கு கூட வராமல் இருக்கிறார்கள். ஒரு நாள் கால்ஷீட் கூட கொடுக்க வேண்டாம். 3 மணி நேரம் வந்தால் போதும்.

எம்ஜிஆர். கலைஞர், ஜெயல்லிதா எல்லாரும் சினிமா துறையை சார்ந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் கேளிக்கை வரி கொடுக்க, ரூ. 5 லட்சம் லஞ்சமாக கேட்கிறார்கள். சரி அதையும் கொடுத்து தொலைக்கிறோம்.

படம் பார்க்க வந்தால், அவர்கள் வீட்டுக்கு கூட பார்சல் சாப்பாடு வாங்கி செல்கிறார்கள்.

எல்லா மாநிலத்திலும் கேளிக்கை வரியில்லை. அங்கே சினிமா நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி.

இங்கே அரசியல்வாதிகள் லஞ்சம் பேர்வழிகள்.

அம்மா ஆட்சி என்கிறார்கள். ஆனால் பணத்தாசை பிடித்து இருக்கிறார்கள்” என கடுமையாக பேசினார்.

Producer cum Actor K Rajan slams TN Govt Ministers and Officials

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஒன்லைன் இதுதான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஜோடி இணைந்து நடித்து வருகிறது.

இதில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க, ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் சிங்கிள் பாடலை மட்டும் நாளை ஜீலை 27ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் ஸ்டில்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் ஒன்லைன் பற்றிய தகவல் வந்துள்ளது.

நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிலர் ஒரே பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் ஒன்று கூடாமல் தனியாக புலம்பி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பதே இதன் கதைக்களம் என சொல்லப்படுகிறது.

தானாக சேரும் இந்த கூட்டத்தின் தலைவனாக சூர்யா நடிக்கிறார் என்பது தங்களுக்கு தெரிந்த செய்திதான்.

Thaana Serndha Kootam movie one line story revealed

 

 

தானா சேர்ந்த கூட்டத்தால் விஜய்யை முந்திய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தன் பிறந்தநாளை கடந்த ஜீலை 23ஆம் தேதி கொண்டாடினார்.

எனவே அவர் நடிப்பில் உருவாகிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்பட போஸ்டரை 62K அதிகமானோர் ரிட்வீட் செய்துள்ளனர்.

இதற்கு முன்பு விஜய் வெளியிட்ட அவரது மெர்சல் போஸ்டர்களை பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை 51k மற்றும் 42k பேர் மட்டுமே ரிட்வீட் செய்துள்ளனர்.

இதனால் விஜய்யை விட சூர்யா முந்திவிட்டார் என கூறப்படுகிறது.

ஆனால் சூர்யாவை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ட்விட்டர் பின் தொடர்கின்றனர்.

விஜய்யை 12 லட்சம் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TSK first look broke Mersal retweet records

பெப்சி இல்லாம சூட்டிங் நடத்துங்க; பாத்துப்போம்… விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமா சூட்டிங் என்றால் அதில் மிக முக்கியமானவர்கள் தொழிலாளர்கள்தான்.

இவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விதிமுறைகள் அமைத்து செயல்படும் அமைப்பே பெப்சி.

தயாரிப்பாளர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கும் (பெப்சி) இடையே, 3 ஆண்டுக்கு ஒரு முறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த முறை நியமித்த புதிய சம்பள விகிதம் குறித்து ’பெப்சி’யில் உள்ள சில சங்கங்களுக்குள் பிரச்னைகள் நிலவி வருகிறது.

எனவே அவ்வப்போது சில படங்களின் சூட்டிங்கின் போது படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்படும்.

பின்னர் சமாதானம் ஆகி சூட்டிங் நடைபெற்று வருவது வாடிக்கையானது.

ஆனால் இப்பிரச்சினை விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கவே தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்தபின்னர் விஷால் கூறியதாவது…

’ஊதிய பிரச்சினையை காரணம் காட்டி சூட்டிங்கை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை.

ஊழியர்கள் மீது எப்போதும் மரியாதை உள்ளது. ஆனால் தயாரிப்பாளர்களை அவமானப்பட அனுமதிக்க மாட்டோம்.

எனவே பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து இனி சூட்டிங்கை நடத்திக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Producer Council President Vishal decision on FEFSI

More Articles
Follows