சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan fans will have double treat on 17th Feb 2018ரெமோ படத்தை தொடர்ந்து வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்தார் சிவகார்த்திகேயன்.

இப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தன் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு தற்காலிகமாக எஸ்கே12 என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் சமந்தா நாயகியாக நடிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதன் 3வது கட்டப் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாகவும், இப்பட பர்ஸ்ட் லுக்கை 2018-ல் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களுக்கு இது டபுள் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan fans will have double treat on 17th Feb 2018

தனுஷைப் போல் விஜய்யும் செய்ய வேண்டும்… பிரபல ஆர்.ஜே.வின் ஆசை

தனுஷைப் போல் விஜய்யும் செய்ய வேண்டும்… பிரபல ஆர்.ஜே.வின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vj mani megalaiதமிழகத்தை தொடர்ந்து கேரளா மற்றும் ஆந்திராவில் விஜய்க்கு உள்ள ரசிகர்கள் வட்டம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அண்மையில் வெளியான விஜய்யின் மெர்சல் படம் ஒரு மாதத்தை கடந்த பின்னும் இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை என்பவர் தன்னுடைய பேட்டியில் விஜய்யை பற்றி பேசியுள்ளார். அதில்…

விஜய்யை சந்தித்தால் அவரை ஹாலிவுட்டில் நடிக்க சொல்லிக் கேட்பேன்,

ஹாலிவுட் ரசிகர்களுக்கும் விஜய் அவருடைய திறமையை காட்ட வேண்டும்.

ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து முடித்துவிட்டார். அவரைப் போல் விஜய்யும் ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்” என தன் வேண்டுகோளை வைத்துள்ளார்.

அரசாங்கமே திருடுகிறது: விழித்தெழுவோம் மக்களே… கமல் எச்சரிக்கை

அரசாங்கமே திருடுகிறது: விழித்தெழுவோம் மக்களே… கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanநடிகர் கமல்ஹாசன் முழு மூச்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது தன் ரசிகர்களையும் மக்களையும் இணைக்கும் வகையில் மையம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளார்.

மேலும், விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தற்போதுள்ள அரசை பற்றி விமர்சித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே.

ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது.

மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்

எனக்கு பிறகு சீமத்துரை டைரக்டர்தான் அப்படி செய்திருக்கிறார்.. மிஷ்கின்

எனக்கு பிறகு சீமத்துரை டைரக்டர்தான் அப்படி செய்திருக்கிறார்.. மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemathurai audio launch stillsபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கினார்கள்.

குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவராகிய நடிகை விஜி சந்திரசேகரும் வந்திருந்து விழாவை சிறப்பாக்கினார்.

இயக்குநர் மிஷ்கின், தனது வழக்கமான பேச்சு நடையால் விழாவை கலகலப்பாக்கினார். “பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம்.

விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன்.

இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது.

தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது.

இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதை செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார். ட்ரைலரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான்.

பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. இங்கே மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள், நேரம் கருதி அதை குறைத்திருக்கலாம்.

ஆனால் அத்தனை பாடல்களையும் நம்மை பார்க்க வைத்தது கூட அவர்களது நம்பிக்கையை பிரதிபலித்தது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியை காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.” என்று பேசி முடித்தார்.

விஜி சந்திரசேகர், “இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் நடிக்க சம்மத்தித்தேன்.

இதில் பணியாற்றியிருக்கும் இந்த இளைஞர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு துணையாக நிற்கிறேன்.

ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என்பதை நம்புகிறேன். நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவுவது நல்லது. சீமத்துரையில் ஓரளவிற்கு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, “கோயில் திருவிழாக்களில் எத்தனை கடைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும் யானையை எல்லோரும் வியப்பாக பார்ப்பார்கள்.

அப்படி இந்த சீமத்துரை படத்தில் இந்த இளைஞர் படைக்கு நடுவில் யானையாக விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவர் மதயானை கூட்டம் படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்தார், அப்போதே அவர் நடிப்பில் வியந்திருக்கிறேன்.

நிச்சயம் இந்த படத்திலும் மதயானை கூட்டம் படத்தில் வருவது போல வலுவான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருப்பார்.

கதாநாயகன் கீதன் மிக அழகாக இருக்கிறார், அவரது சிரிப்பு எல்லோரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கிறது. அவர் நிச்சயமாக சாதிப்பார்.

அதே போல் வர்ஷா பொல்லம்மாவும் அழகாக இருக்கிறார். இருவருக்கும் என் வாழ்த்துகள். பொதுவாக தென் மாவட்டங்களின் கலாச்சாரத்தை விட தஞ்சாவூரின் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. அப்படிப்பட்ட தஞ்சாவூர் மண் சார்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று பேசினார்.

Mysskin speech at Seemathurai audio launch

seemathurai stills

 

 

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இரண்டு பெரிய ஸ்டார்கள்

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இரண்டு பெரிய ஸ்டார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajamoulis next film to feature Ram Charan and Jr NTRபல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ராஜமௌலி கடந்த ஆண்டு பாகுபலி2 என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட படத்தை கொடுத்திருந்தார்.

எனவே அவரின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

யாருடைய படத்தை அடுத்து அவர் இயக்கப்போகிறார்? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அந்த போட்டோவில் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் ராஜமௌலியுடன் அமர்ந்துள்ளனர்.

எனவே ராஜமௌலியின் அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இப்படத்தை ராஜமௌலி தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

Rajamoulis next film to feature Ram Charan and Jr NTR

ramcharan rajamouli junior NTR

இணையத்தில் வைரலாகும் சீயானின் சிக்ஸ் பேக் போட்டோ

இணையத்தில் வைரலாகும் சீயானின் சிக்ஸ் பேக் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiyaan Vikrams Six pack photo goes viral on Social Mediasதான் நேசிக்கும் சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து வருபவர் நடிகர் சீயான் விக்ரம்.

ஒவ்வொரு படத்திற்கும் இவர் மேற்கொண்டு வரும் சிரமங்கள் தமிழ் சினிமாவையே பெருமைப்பட வைக்கிறது.

இந்நிலையில் இவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அதில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் ஒரு டவல் கட்டியுள்ளார்.

அந்த படம் ரசிகர்களை கவரவே, தற்போது அந்த படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

Chiyaan Vikrams Six pack photo goes viral on Social Medias

More Articles
Follows