JUST IN கமல்ஹாசன் உடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்.; டைரக்டர் யார் தெரியுமா.?

JUST IN கமல்ஹாசன் உடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்.; டைரக்டர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் தனது தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

Sivakarthikeyan collaborates with Kamal Haasan

Kamalhassan Sivakarthikeyan Rajkumar Periyasamy

இளையராஜாவின் பொங்கல் பரிசாக வந்த ‘சிங்கார மதன மோகனா..’

இளையராஜாவின் பொங்கல் பரிசாக வந்த ‘சிங்கார மதன மோகனா..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்த படத்தில் இடம்பெறும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத்தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’.

இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘சிங்கார மதன மோகனா..’ என தொடங்கும் பாடலை பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் பாடியிருக்கிறார்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாசூரங்களைப் பாடி மக்கள் இறைவனை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தை திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ற வகையில் அனைவரின் இல்லத்திலும் ஒலிக்க கூடிய பாடலாக ‘சிங்கார மதன மோகனா.. பாடல் உருவாகியிருக்கிறது.

நாம சங்கீர்த்தனம் பாணியில் தயாராகியிருக்கும் இந்த கிருஷ்ண பகவானைப் பற்றிய பக்தி பாடலைக் கேட்கும் பொழுதே இணைந்து பாடவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் பொங்கல் திருநாளன்று இணையத்தில் வெளியாகிறது.

‘மாயோனே. மணிவண்ணா..’ எனத் தொடங்கும் பாடல் வெளியான குறுகிய காலத்திற்குள் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

அதேபோன்றதொரு சாதனையை இசைஞானி இசையில் பாடகி ஸ்ரீநிதி பிரகாஷின் இனிய குரலில் வெளியாகிவிருக்கும் ‘சிங்கார மதனமோகனா..’ என்ற பாடலும் படைக்கும்.

இளைய தலைமுறையினரிடத்தில் ‘லவ் ஆந்தம்’, ‘யூத் ஆந்தம்’, ‘ப்ரண்ட்ஸ் ஆந்தம்’, ‘பார்ட்டி ஆந்தம்’, ‘ராக் ஆந்தம்’ போன்ற பல ஆந்தம் பாடல்கள் பெற்ற வரவேற்பை, பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாசின் ஆன்மீக குரலில் வெளியாகியிருக்கும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத் தொடங்கும் ‘கிருஷ்ணர் ஆந்தம்’ பாடலும் பெறும் என திரையிசை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் திரையிசை உலகில் கிருஷ்ணரைப்பற்றிய பாடலாக ‘முகுந்தா..முகுந்தா..’ என்ற தசாவதார பட பாடல் இடம்பிடித்திருந்தது.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘சிங்கார மதன மோகனா.. ’என்ற பாடல் விரைவில் அனைவரின் மனதிலும், கிருஷ்ண பகவானைப் பற்றிய ஒப்பில்லா துதிப் பாடலாக இடம்பிடித்து புதிய சாதனையை படைக்கும்.

Maayon team’s Pongal Treat – Krishna Bhajan– A Musical Delight

ஒன் 2 ஒன்..: த்ரிஷாவை அடுத்து சுந்தரை இயக்கும் திருஞானம்

ஒன் 2 ஒன்..: த்ரிஷாவை அடுத்து சுந்தரை இயக்கும் திருஞானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் “ஒன் 2 ஒன்” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார்.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது.

விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார்.

விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – 24 HRS புரொடக்‌ஷன்ஸ்
எழுத்து இயக்கம் – K.திருஞானம்
ஒளிப்பதிவு – விக்ரம் மோகன்
இசை – சித்தார்த் விபின்
கலை – R.ஜெனார்த்தனன்
காஸ்டுயும் டிசைனர் – நிவேதிதா
புரொடக்ஷன் எக்ஸிகியுடிவ் – விஜய்
சண்டை பயிற்சி – “Rugger” ராம்
நடனம் – தீனா
ஸ்டில்ஸ் – பாக்யா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Sundar C starrer K. Thirugnanam directorial “One 2 One”

கருணாஸ் கையிலெடுத்த ‘ஆதார்’.; 3வது முறையாக இணைந்த ஹிட் கூட்டணி

கருணாஸ் கையிலெடுத்த ‘ஆதார்’.; 3வது முறையாக இணைந்த ஹிட் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’.

இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.

பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, ‘அசுரன்’ புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ‘ஆதார்’ உருவாகியிருக்கிறது,” என்றார்.

‘ஆதார்’ தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்ற நம்பிக்கையை பட குழுவினர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சான்றாக ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்னர், உலக அளவில் யதார்த்த சினிமா படைப்பாளியாக போற்றப்படும் இந்திய திரை சிற்பி சத்யஜித்ரேயின் உருவப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.

‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பொங்கல் திருநாளான இன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் – நடிகர் கருணாஸ் மீண்டும் ‘ஆதார்’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், ‘ஆதார்’ ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் திரை உலகில் ஏற்பட்டிருக்கிறது. .

Director Ramnath and Karunaas joins for Aadhaar

‘ஜெய்பீம்’ செங்கேணியை பக்கத்து வீட்டு பெண்ணாக மாற்றிய ஹலிதா சமீம்

‘ஜெய்பீம்’ செங்கேணியை பக்கத்து வீட்டு பெண்ணாக மாற்றிய ஹலிதா சமீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி சிறந்த படமாக தரவரிசையில் முதன்மையான இடத்தை பிடித்த படம் ‘ஜெய் பீம்’ . இப்படத்தைப் பார்வையிட்ட அனைவரின் இதயங்களையும் தன்னுடைய அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர் நடிகை லிஜோமோள் ஜோஸ்.

இப்படத்தில் ‘செங்கேணி’ என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியாகவும், வெகுஜன மக்களின் பாராட்டையும் பெற்றவர்.

இப்படத்திற்குப் பிறகு நடிகை லிஜோமோள் ஜோஸ் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகியிருக்கிறார்.

இவர் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற தொடரில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட ‘புத்தம் புது காலை விடியாதா’ தமிழ் தொகுப்பின் முன்னோட்டத்தை பார்வையிடும்போது, ஒரு நடிகையாக லிஜோமோள் ஜோஸ் தன்னுடைய திறமையை திறம்பட வெளிப்படுத்தி இருப்பது அனைவருக்கும் தெரியும்.

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவான ‘லோனர்ஸ்’ என்ற அத்தியாயத்தில் நடிகை லிஜோமோள் ஜோஸ் ‘நல்லா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொற்றுநோய் காலகட்டத்தில் பிரிந்து சென்ற தீரனை (அர்ஜுன் தாஸ்) மெய்நிகர் திருமண நிகழ்வு ஒன்றில் தற்செயலாக சந்திக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கிடையே ஆழமான- அர்த்தமுள்ள உரையாடல்கள் தொடர்கிறது. இதன்மூலம் அவர்களுக்கிடையே ஒரு பாசப்பிணைப்பை வளர்த்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு பற்றுடன் இருக்கவும் உதவுகின்றன.

நடிகை லிஜோமொள் ஜோஸ் பற்றி இயக்குநர் ஹலிதா சமீம் குறிப்பிடுகையில்….

,” சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகை லிஜோமோள் ஜோஸின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.

அப்படத்தின் இயக்குநர் சசி, ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன் ஆகிய மூவரும் லிஜோமொள் ஜோஸின் நடிப்பை வெகுவாக பாராட்டினர்.

அதிலும் குறிப்பாக நடிகர் மணிகண்டன் என்னிடம் பேசும்போது,…

‘ லிஜோமோள் ஜோஸ் மேடம் நடிப்புக்காக உண்மையாக உழைப்பவர். இதன் காரணமாகவே அவருடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.

நாங்கள் இருவரும் விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட போது, அவர் தன்னை வெளிப்படுத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் எளிமையானவர். மற்றவர்களிடம் இயல்பாகப் பழகக் கூடியவர்’ என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ‘நல்லா’ என்ற கதாபாத்திரத்திற்காக நான் அவரை அணுகியபோது, அவர் திரைக்கதையை முழுவதுமாக வாசித்துவிட்டு, சில காட்சிகளை இப்படி செய்யலாமா..! என செல்போனில் பதிவு செய்து வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார்.

அதை பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்தது. அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். ‘லோனர்ஸ்’ சிங்க் சவுண்ட் எனப்படும் ஒத்திசைவு ஒலி எனும் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டது.

அவருடைய உச்சரிப்பு மற்றும் வசனங்களிடையேயான ஏற்றத்தாழ்வு அனைத்தும் மிக துல்லியமாக இருந்தது. இதனால் நான் அதனை மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொண்டேன்.

‘ஜெய் பீம்’ படத்தை பார்த்த பிறகு அவருடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிக்காக அவரைப்பற்றி பெருமிதம் அடைந்தேன்.

‘ஜெய் பீம்’ படத்தில் ‘செங்கேணி’ என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ், ‘புத்தம் புது காலை விடியாதா’வில் ‘நல்லா’ என்ற பக்கத்து வீட்டு பெண்ணாக மாறி, அற்புதமாக நடித்துள்ளார்.

அவரின் இந்த மாற்றத்தை திரையில் காணும் பொழுது சுவராசியமாக இருக்கும்.” என்றார்.

மேலும் இவையனைத்தும் நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்து இரண்டாவது லாக் டவுனை மையப்படுத்தி அமைக்கப்பட்ட கதைகளாகும்.

ஐஸ்வர்ய லட்சுமி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோள் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் உள்ள கதைகளை இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

‘புத்தம் புது காலை’ என்ற முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘புத்தம் புது காலை விடியாதா’ துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.

ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொகுப்பு, 2022 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் முதல் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

Lijomol Jose to be seen in Amazon Original Series Putham Pudhu Kaalai Vidiyaadhaa

அரசியலில் அதிரடியாக அடுத்த கட்டத்திற்கு ரெடியான கமல்ஹாசன்

அரசியலில் அதிரடியாக அடுத்த கட்டத்திற்கு ரெடியான கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு தங்கள் வேட்பாளர்களுடன் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சியின் 47 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதிகள் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

kamal hasan announced first phase mnm candidate list for urban local body polls

More Articles
Follows