தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் திறந்து வைப்பார்கள் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…
சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைப்பது ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்றும் அவர் உயிருடன் இருந்திருந்தால், திறப்பு விழாவிற்கு நேரில் வந்து திறந்து வைத்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
மணி மண்டபம் கட்டியது மகிழ்ச்சி அளித்தாலும், அதனை முதலமைச்சரோ அல்லது துணை முதலமைச்சரோ திறக்க முன்வராதது, தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.
தனது திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்காக சிவாஜி பாடுபட்டிருக்கிறார் என தெரிவித்துள்ள பிரபு, முதலமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் வரும் என தனது குடும்பத்தினரும், சிவாஜி கணேசனின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றும் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை குஷ்புவும் தன் கருத்தை கூறியுள்ளார்.
அதில்… ‘சிவாஜி கணேசனை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது.
முதல்வர், துணை முதல்வர், தமிழக அரசுக்கு மேதைகளை மதிக்கத் தெரியவில்லை. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பதால் சிவாஜியை அவமரியாதை செய்ய வேண்டாம்’ என்றார்.
Sivaji Manimandapam should be opened by CM Edappadi says Prabu Kushboo