தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகியது.
மேலும் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும் கடும் சேதத்தை சந்தித்து உள்ளன.
இவற்றை மீட்டெடுக்க தமிழக அரசு நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இருந்தபோதிலும் அரசு பொறுமையாக செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
நான்கு நாட்களாகியும் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.
குடிக்க தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகுமார் குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சத்தை நிதியாக அளித்துள்ளனர்.
இது குறித்து சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனமான 2டி என்டெர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக விளங்கிய மரங்கள் பேரழிவுக்கு ஆளாகியுருக்கின்றன.
புயல் மற்றும் கனமழை காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக வரும் புகைப்படங்கள் யாவுமே நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.
“தமிழ்நாட்டின் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வழங்குவது காவிரிப் படுகை” என்று நெல் ஜெயராமன் தெரிவித்திருப்பது நூறு சதவீதம் உண்மை. அந்தப் பகுதிகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் வழங்கியுள்ளனர். திரு.சிவகுமார், திரு.சூர்யா, திரு.கார்த்தி, திருமதி.ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தமாக 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுத்திருக்கிறார்கள்.
இதனை அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் என்ன உதவிகள் தேவை என்பதை தெரிந்து செய்யவுள்ளார்கள்.