கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்; பிரபலங்கள் ஆதரவு

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்; பிரபலங்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer Chinmayi accuses lyricist Vairamuthu of sexual harassment‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமானவர் சின்மயி.

இதனைத் தொடர்ந்து ‘சரசர சாரக்காற்று’ ‘கிளிமஞ்சரோ’ பாடல்களும் அவருக்கு புகழை தேடித்தந்தன.

ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்களை பாடி இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

அவரது சமீபத்திய பேட்டியில்…

சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது வைரமுத்து அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு பயம் வந்தது.

அவரது அலுவலகத்திலும் இரண்டு பெண்களை முத்தமிட முயற்சித்தார்.

என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேலாவது பேசுவார்கள் என நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். அரசியல் ரீதியாகவும் அழுத்தம் வரலாம்.

விளம்பரத்துக்காக நான் இதை சொல்லவில்லை. எனக்கு இனிமேல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று கூட தெரியவில்லை. ஆனாலும் இதை யாராவது பேசத்தான் வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா உள்ளிட்டவர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

சின்மயி புகாருக்கு வைரமுத்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அதில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சில நிமிடங்களிலேயே, வைரமுத்து ஒரு பொய்யர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பாடகி சின்மயி.

Siddharth ✔ @Actor_Siddharth
Multiple women are speaking out against Kavignar #Vairamuthu. Without judging anyone, they must be heard. When somebody of @Chinmayi’s stature who has so much to lose, stands by the accusers, that’s huge! There will be investigation. First step #ListenToTheAccuser #MeToo #Timesup

Singer Chinmayi accuses lyricist Vairamuthu of sexual harassment

Samantha Akkineni‏Verified account @Samanthaprabhu2
Dear @23_rahulr and @Chinmayi I know the both of you for ten years now . I don’t know two more brutally honest people .It is this attribute of yours that I value most in our friendship . I love you with all my heart and what you say is the TRUTH !! #istandwithchinmayi

சர்கார் அப்டேட்ஸ்: தமிழக உரிமை 65 கோடி; சென்னை உரிமை 7 கோடி!

சர்கார் அப்டேட்ஸ்: தமிழக உரிமை 65 கோடி; சென்னை உரிமை 7 கோடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தை போலவே கேரளா மற்றும் ஆந்திராவில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.

கேரளாவில் தமிழிலேயே திரையிடப்படுகிறது.

தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சர்கார்’ பட தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு மெர்சல் பட நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

மேலும் இந்த நிறுவனம் அதை ஏரியாவாரியாக பிரித்து விற்று வருகிறது.

அதன்படி, சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை ரூ. 7 கோடிக்கு அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார்.

விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களின் சென்னை நகர உரிமையை பெற்றவர் அபிராமி ராமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் மஹத்-யோகிபாபு

சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் மஹத்-யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahat and Yogibabu teams up with Simbu in Sundar C directionதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ என்ற படத்தை தமிழில் லைகா நிறுவனம் ரீமேக் செய்து வருகிறது.

இப்படத்தை சுந்தர். சி இயக்க நாயகனாக நடிக்கிறார் சிம்பு.

தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணீதா வேடத்தில் கேத்தரீன் தெரசா நடிக்கிறார். நதியா நடித்த ஹீரோவின் மாமியார் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வரும் வேளையில் முக்கிய கேரக்டரில் மஹத்தும் யோகி பாபுவும் இணைந்து இருக்கிறார்களாம்.

Mahat and Yogibabu teams up with Simbu in Sundar C direction

*கொம்பன்* பட வில்லன் தயாரிப்பில் புட் பால் ப்ளேயராக நிவின் பாலி

*கொம்பன்* பட வில்லன் தயாரிப்பில் புட் பால் ப்ளேயராக நிவின் பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly plays lead Arun Gopi to direct biopic on football icon IM Vijayanகேரளாவை சேர்ந்த ஐ.எம். விஜயன் அவர்கள் ‘கொம்பன்’, திமிரு, ‘கெத்து’ ஆகிய படங்களில் வில்லனாக ரசிகர்களை மிரட்டியவர்.

இவர் வில்லனாக நடித்தாலும் அடிப்படையில் இவர் ஒரு புட்பால் பிளேயர் ஆவார். “அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று புட்பால் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் இவர்.

இந்நிலையில் தன்னுடைய விளையாட்டு வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இதற்காக ‘பிக் டாடி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது நண்பர்களுடன் இணைந்து துவங்கியுள்ளார் ஐ.எம்.விஜயன்.

இந்த படத்தில் புட்பால் ப்ளேயராக நிவின்பாலி நடிக்க, ‘ராம்லீலா’ பட இயக்குனர் அருண்கோபி இயக்குவார் என சொல்லப்படுகிறது.

Nivin Pauly plays lead Arun Gopi to direct biopic on football icon IM Vijayan

வடசென்னை-யை முடித்து விட்டு மீண்டும் வெற்றி மாறனுடன் இணையும் தனுஷ்

வடசென்னை-யை முடித்து விட்டு மீண்டும் வெற்றி மாறனுடன் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை :

வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியவை…

படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு ஜடை. அசத்தியுள்ளார். கலை இயக்குனர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும் வடசென்னை சட்டை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன் , சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள்,. மேலும் அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குனர்களாக எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள்.. படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியவை..

இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி மேடையை பார்க்கும்போது காக்கா முட்டை படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த படத்தில் ஒரு இனிமையான கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ் . படத்தில் அனைவருமே நன்றாக. நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அருமையாக வந்துள்ளது.. படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை ஆண்ட்ரியா பேசியவை.
படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார் பேசினார்.

இந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குனரான அமீர் பேசியவை…

வடசென்னை படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷ் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார்.ஆண்ட்ரியா தரமணி போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர் இந்த படத்தின். சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் மீண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியவை

இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி படங்கள் வெற்றிமாறனால் மட்டுமே இயக்க முடியும் .படத்தில் தனுஷ் அவர்கள் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, திறமையான நடிகர். வெற்றிமாறன் அவர்களுடன் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ் .என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகை ஆண்ட்ரியா பேசியவை:
‘படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ் மீட்டில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்’ இவ்வாறு ஆண்ட்ரியா பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பவன் பேசியவை…
படத்திற்கு A சென்சார் சர்டிபிகேட் வந்துள்ளதாக இயக்குனர் கூறினார் .எந்த காட்சியுமே கட், ஆகாமல் வந்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் டேனியல் பாலாஜி பேசியவை:

பொல்லாதவன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளேன் .வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு தந்துள்ளார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

Breaking : சிம்புவுடன் இணையும் அளவுக்கு பெருந்தன்மை இல்லாத தனுஷ்

Breaking : சிம்புவுடன் இணையும் அளவுக்கு பெருந்தன்மை இல்லாத தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and simbuதனுஷ் தயாரித்து நடித்துள்ள வட சென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா வெளியிடுகிறது.

இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது தனுஷ் பேசியதாவது…

வட சென்னை படத்தின் கதையை 10 வருடங்களுக்கு முன்பே என்னிடம் வெற்றிமாறன் சொன்னார்.

அப்போது அது உருவாகும் சூழ்நிலை இல்லை.

சில வருடங்களுக்கு பிறகு அதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறினார் வெற்றிமாறன்.

நானும் சரி என்றேன். பின்பு அமீர் இப்போது நடிக்கும் கேரக்டரில் என்னை நடிக்க கேட்டார் வெற்றி.

நான் பெருந்தன்மையானவன் தான். ஆனால் அந்தளவுக்கு பெருந்தன்மையாக அந்த ரோலில் நடிக்க என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பின்பு சில காரணங்களால் பட நாயகன் கேரக்டர் என்னிடமே வந்தது. அன்பு கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

ராஜா என்ற கேரக்டரில் அமீர் நடித்துள்ளார். அதுதான் ஆணி வேர் கேரக்டர்.” என்று பேசினார் தனுஷ்.

More Articles
Follows