சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கும் சிங்கப்பூர்..!

சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கும் சிங்கப்பூர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singapore is now in the Excitement Edge to welcome 'REMO'சிவகார்த்திகேயன் நடிப்பில் 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர் டி ராஜா தயாரித்துள்ள படம் ரெமோ.

அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ட்ராக் சமீபத்தில் வெளியானது.

‘ரெமோ நீ காதலன்’ என்ற பாடல் வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள SIIMA விருது வழங்கும் விழாவில் ‘ரெமோ’வின் மற்றொரு பாடலான செஞ்சிட்டாளே சிங்கிள் ட்ராக்கை வெளியிடவுள்ளனர்.

இப்பாடலும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

எனவே சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ரெமோ குழுவினரை வரவேற்க தற்போதே தயாராகி வருகிறதாம் சிங்கார சிங்கப்பூர்.

விஜய் வேடத்தில் நடிப்பவர் யார்…? ஷாரூக் Vs அக்ஷய்குமார்…!

விஜய் வேடத்தில் நடிப்பவர் யார்…? ஷாரூக் Vs அக்ஷய்குமார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who will get the Theri remake, SRK or Akshay Kumar?இவ்வருடத்தில் வெளியாகி ரூ. 100 கோடி கிளப்பில் ஒரு சில படங்களே இணைந்தன.

இதில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படமும் அடங்கும்.

எனவே இப்படத்தின் ரீமேக்குக்கு இந்தியில் பலத்த போட்டி எழுந்தது.

தற்போது இதில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது யார்? என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக்கான் மற்றும் அக்ஷய்குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

இவர்கள் இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இது நம்ம ஆளு கூட்டணியில் இணைந்த வாலு..!

இது நம்ம ஆளு கூட்டணியில் இணைந்த வாலு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Simbu Film Kuralarasan Music Compositionபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் ‘இது நம்ம ஆளு’.

இப்படத்தை போலவே பாடலுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் சிம்புவின் சகோதரர் குறளரசன்தான்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் மீண்டும் குறளரசனே இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.

கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் சிம்பு நடிப்பார் என சொல்லப்படுகிறது.

அதர்வா-சூரி-ரெஜினா நடிக்கும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’

அதர்வா-சூரி-ரெஜினா நடிக்கும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gemnini Ganesanum Suruli Rajanum Kick Started Todayசெம போதை ஆகாது என்ற படத்தை தொடர்ந்து அதர்வா நடிக்கவுள்ள படம் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.

அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.

இதில் ஜெமினி கணேசனாக அதர்வாவும், சுருளிராஜனாக சூரியும் நடிக்கின்றனர்.

முதலில் அதர்வா வேடத்தில் கலையரசன் நடிப்பார் என கூறப்பட்டது.

தெய்வ வாக்கு, ராசய்யா, சரோஜா உள்ளிட்ட படங்களை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இன்று இதன் படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியுள்ளனர்.

‘ஜெமினிகணேசன் மற்றும் சுருளிராஜன் என்றாலே நம் நினைவுக்கு வருவது காதலும் காமெடியும்தான். எனவே இவ்விரண்டையும் மையமாக கொண்டே இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.

‘ஷங்கர் படத்தை விட ‘கபாலி’க்குதான் ஐயம் வெயிட்டிங்…’ நானி

‘ஷங்கர் படத்தை விட ‘கபாலி’க்குதான் ஐயம் வெயிட்டிங்…’ நானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Nani Funny Speech at Rajinikanth Kabali Teluguவெப்பம், நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் நானி.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இவரின் ஜென்டில்மேன் என்ற படம் அண்மையில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் கபாலி படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நானி.

அப்போது அவர் பேசியதாவது…

“நான் இயக்குனர் ஷங்கரின் தீவிர ரசிகராக இருந்தாலும் 2.0 படத்தை விட கபாலியை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அதற்கு காரணம் பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினி இதில் டான் ஆக நடித்துள்ளார்.

ரஜினியால் மட்டுமே மீண்டும் அப்படி ஒரு பவர்வுல் கேரக்டரை நடிக்க முடிகிறது” என்று ரஜினி மீது தான் வைத்திருக்கும் அன்பை தெரிவித்தார் நானி.

‘சொன்னபடி செய்து காட்டியவர் ரஜினி’ – சத்யநாராயணா பேட்டி.

‘சொன்னபடி செய்து காட்டியவர் ரஜினி’ – சத்யநாராயணா பேட்டி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Already Deposited RS 1 Crore Rivers Nationalisationநதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரஜினிகாந்த் சொன்னடிபடி ரூ. 1 கோடி தரவேண்டும் என்பதை வலியுறுத்த போவதாக விவசாயிகள் சங்கம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்ய நாராயணா, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் தமிழகத்தில் பிரசிப்பெற்ற கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார்.

நேற்று கும்பகோணம் மற்றும் திருநாகேஸ்வரத்தில் தரிசனம் செய்ததை தொடர்ந்து இன்று காலை தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்துள்ளார்.

தரிசனம் முடித்தபின் பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்…

‘ரஜினி உடல் நலம் பெறவும், உலக மக்கள் அமைதிக்காக வேண்டியும் கோயில்களில் அர்ச்சனை செய்து வருகிறேன்.

தற்போது ரஜினி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்.

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ. 1 கோடி தருவதாக அறிவித்திருந்தார். அவர் சொன்னப்படியே ரூ. 1 கோடியை வங்கியில் டெபாசிட்டும் செய்துவிட்டார்.

நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த பணத்தை அவர் கொடுப்பார். அவர் சொன்னால் சொன்னதை செய்வார். அதுதான் ரஜினி’ என்றார்.

More Articles
Follows