ஓங்கி அடிச்சா 100 கோடி… கர்ஜிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

ஓங்கி அடிச்சா 100 கோடி… கர்ஜிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam 3 stillsதமிழ் நாட்டு ரசிகர்களைப் போலவே சூர்யாவிற்கு ஆந்திராவிலும் நல்ல மாஸ் உருவாகியுள்ளது.

எனவே இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் இரு மாநிலத்தை மையப்படுத்தியே உருவாகி வருகிறது.

சிங்கம் 3 படத்தின் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மல்காபுரம் சிவகுமார் என்பவர் ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் கேரளாவிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் கூடி வருவதால், அங்கும் சிங்கம் 3 படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தின் கேரள உரிமையை சொப்னம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ரூ. 5.3 கோடி கொடுத்து பெற்றுள்ளதாம்.

மேலும் தற்போதே தென்னிந்தியா மற்றும் ஓவர்சீஸ் வியாபாரம் ரூ. 100 கோடி அளவுக்கு பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன.

இதுவரை பார்க்காத கார்த்தியை காட்டும் மணிரத்னம்

இதுவரை பார்க்காத கார்த்தியை காட்டும் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaatru veliyidaiஎந்தவொரு ஹீரோ என்றாலும் தன் முதல் படத்தில் மிகவும் அழகாக அறிமுகம் ஆக வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே படத்தின் கேரக்டர் எப்படியோ அப்படியான அறிமுகத்தை விரும்புவார்கள்.

பருத்திவீரன் படத்தில் அழுக்கான மனிதராக அறிமுகமானார் கார்த்தி.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் மீசையுடனே வலம் வந்தார்.

ஆனால் மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் க்ளீன் ஷேவ் அதாவது மீசை, தாடியே இல்லாத ஒரு முகமாக தோன்றுகிறார்.

கார்த்தியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மீண்டும் ஜி.வி.பிரகாஷ்-ஆதிக்; தலைப்பு-வெர்ஜின் மாப்பிள்ளை.?

மீண்டும் ஜி.வி.பிரகாஷ்-ஆதிக்; தலைப்பு-வெர்ஜின் மாப்பிள்ளை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and adhik ravichandranத்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்திற்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) என்று பெயரிட்டுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, முக்கிய வேடத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தை அடுத்து, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் ஆதிக்.

இப்படத்தை ஸ்டீபன் என்பவர் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு வெர்ஜின் மாப்பிள்ளை என்று பெயரிடப்படலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

 

அஜித் ரசிகர்களை குழப்பிய புதிய செய்தி

அஜித் ரசிகர்களை குழப்பிய புதிய செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stillsவேதாளம் இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், அஜித் அடுத்த படத்தின் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாய் வந்த வண்ணம் உள்ளன.

அஜித்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என்று செய்திகள் வந்துள்ளதை நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்போ செய்தியோ இதுவரை எதுவும் அஜித் தரப்பில் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அஜித் ரசிகர்கள்தான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

‘என் காதலுக்கு வில்லனே கிடையாது..’ மனம் திறந்த கீர்த்தி

‘என் காதலுக்கு வில்லனே கிடையாது..’ மனம் திறந்த கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh stillsஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் கிட்டதட்ட அரை டஜன் படங்களில் கமிட்டானவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது தமிழில் உள்ள டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் இவரது திருமணம் பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது…

‘நான் யாரையும் காதலிக்கவில்லை. ஒருவேளை நான் காதலித்தாலும் எனக்கு வில்லன் கிடையாது.

எங்கள் வீட்டில் எதிர்க்க மாட்டார்கள். நிச்சயம் என் பெற்றோர்கள் சம்மதிப்பார்கள்’ என கூறியுள்ளார்.

விஜய் முகத்தையே பார்க்க விரும்பாத அமலா பால்

விஜய் முகத்தையே பார்க்க விரும்பாத அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paulநடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் ஆகிய இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் இருவரும் முழுமையாக ஒரு வருடம் கூட இணைந்து வாழவில்லையாம்.

வெளிவுலகுக்கு இணைந்து காணப்பட்டாலும் இவர்களிடையே கருத்து வேறுபாடு முன்பே ஏற்பட்டுவிட்டதாம்.

தற்போது இவர்களின் விவகாரம் விவாகரத்து வரை வந்துள்ள நிலையில் இருவரும் மனுதாக்கல் செய்ய நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

கிட்டதட்ட சுமார் 20 நிமிடங்கள் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லையாம்.

More Articles
Follows