தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’, நாட்டாமை, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஈரோடு சௌந்தர்.
மேலும் சிம்மராசி, சீதனம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, படத்தின் கதைக்காகவும், ‘சிம்மராசி’ படத்தின் வசனத்துக்காகவும் தமிழக அரசு விருதை வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு 2019ல் தனது பேரன் கபிலேஷை நாயகனாகவும் தனது தம்பி மகன் பாலசபரீஸ்வரனை வில்லனாகவும் ‘உள்ளேன் அய்யா’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தி இயக்கியிருந்தார் ஈரோடு சவுந்தர்.
இவருக்கு தற்போது 62 வயதாகிறது.
இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருந்துள்ள நிலையில் நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
எனவே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி ஈரோடு சௌந்தர் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Simmarasi director Erode Soundar passed away