தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை பாடி, ஆடி நடித்திருக்கிறார்.
தற்போது முன்னணி நாயகர்களின் வரிசையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தாலும் இவரது சமீப கால படங்கள் வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் இவருக்கான ரசிகர் கூட்டம் எப்போதும் குறையாமல் கூடிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் சிம்புவின் ரசிகர் மதன் என்பவர் மரணமடைந்து விட்டார்.
முதன்முறையாக எந்த நடிகரும் செய்யாத ஒரு காரியத்தை தன் ரசிகருக்காக சிம்பு செய்துள்ளார்.
அந்த ரசிகரின் 16ஆம் நாள் நினைவு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவரே தெருக்களில் ஒட்டியுள்ளார்.
தற்போது அது தொடர்பான படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
