தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது…
“அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.
வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.
அதனால், என்னையும் கைது செய்யுங்கள்.
கைதானவர்களை விடுவிக்கவில்லை என்றால் அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன்
கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு தொடர்பான இந்த எழுச்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
எனவே இதை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும்.
கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன?” என்று பல கேள்விகளை அவர் அடுக்கடுக்காக பேசினார்.