மங்காத்தா ஸ்டைலில் சிம்பு கேரக்டரை டிசைன் செய்த வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் டைரக்டர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு இணையும் படம் மாநாடு.

இந்த படம் முழுக்க முழுக்க அரசியல படம் என்பதை பர்ஸ்ட் லுக் மூலம் அறிவித்துவிட்டனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இதில், சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மங்காத்தா படத்தில் அஜித்தான் நாயகன் என்றாலும் அவர் கிட்டதட்ட நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார்.
சில ஆண்டுகளுக்கு முன் தேவயாணி, பிரகாஷ் ராஜ் நடித்த ‘சொர்ணமுகி’ படத்திலும் பார்த்திபன் முழுக்க நெகட்டிவ் கேரக்டர் செய்திருப்பார்.

அதுபோன்ற கேரக்டர் என கூறப்படுகிறது. எனவே நிச்சயம் இது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Simbu plays negative role in Venkat Prabus Maanadu

விஜய்யின் சர்கார் சாங் இணையத்தில் வைரல்; படக்குழு அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி ஓரிரு தினங்களுக்கு சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தொடங்கி, லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகிறது.

படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலை அங்கு படமாக்கி வருகின்றனர். நடன இயக்குநர் ஷோபி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் லீக்காகி, வைரலாகியுள்ளது.

அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த யாரோ ஒருவர் படப்பிடிப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

ஆனால் இதில் விஜய்யின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

குழந்தைகளை கவர்ந்த *சிண்ட்ரல்லா* படத்தலைப்பில் நடிக்கும் லட்சுமி ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா.

இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது.

லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது.

படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ்.

இவர்கள் திரையரங்கு, 100க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோகம் திரை அனுபவம் பெற்றவர்கள்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும் போது…

“இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும்.

படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார்.

நடிகை லட்சுமிராய்க்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார்.

நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம், குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார்.

மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார்.

இப்போது முழுமையாக ‘சிண்ட் ரல்லா’வுக்குள் புகுந்து விட்டார் ” என்று கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Raai Laxmis next fantasy horror thriller titled Cinderella

வாட்ஸ் அப் & பாலியல் தொல்லையால் தலைகுனிந்த தமிழகம். :- விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடலாசிரியரும் கவிஞருமான பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பா.விஜய் பேசியதாவது…

“இன்றைய சூழலில் படம் எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் மிகவும் சவாலானது. அந்த சவாலை ஏற்றுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களால் இன்று இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே அவர்களின் பிஆர்ஓ.க்களை அனுப்பி வைத்துள்ளனர்.

ஹாசினி வழக்கு முதல் ஆசிபா வழக்கு வரை நாட்டில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை அப்போதே உருவாக்க ஆரம்பித்து விட்டேன்.

குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பது அவரது பெற்றோர்களின் பொறுப்பு.

இந்தியாவிற்கு வரவே வெளிநாட்டினர் பயப்படுகிறார்கள். அந்தளவு சிறுமிகள் இங்கே பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பெற்றோர்கள், குழந்தைகளைப் பார்க்காமல் செல்போனைப் பார்த்தபடியே இருக்கிறார்கள்.

தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது. இவற்றிற்கு எல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆருத்ரா படத்தை சொல்லியுள்ளேன்.” என பேசினார்.

Lyricist Actor Pa Vijay speaks about Child abuse in Aaruthra audio launch

கடவுளின் தேசத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்த சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடவுளின் சொந்த தேசம் எனப்படும் கேரளாவில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் கேரளாவே வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது.

இதுவரை வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது.

கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.

எப்பொழுதும் சூர்யா கார்த்தி -க்கு கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்.” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Actors Suriya and Karthi donate 25Lacs to Kerala CM Relief Fund

கழுகு-2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் திரு. குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தீதும் நன்றும்’ படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘திரு.குரல்’.

அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, நடனம் – ஸ்ரீ க்ரிஷ்.

இந்த படத்தை விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

After Kazhugu 2 movie Krishnas next movie titled Thiru. Kural

More Articles
Follows