சிம்புவுடன் இணைந்த அனிருத்; இது ‘ரம்’ கூட்டணி

சிம்புவுடன் இணைந்த அனிருத்; இது ‘ரம்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu anirudhஇன்றைய இளைஞர்களின் ஹாட் நாயகர்களான சிம்பு மற்றும் அனிருத் முதன்முறையாக ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ரம்.

இப்படத்தில் உள்ள ‘பேயோ போபிலியா’ என்ற பாடலை சிம்பு பாட, பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

பேய்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை மையமாக கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பேய்களை விட நாம் வாழுகின்ற இந்த உலகம் அதி பயங்கரமானது என்கிற கருத்தை இந்த பாடல் வலியுறுத்தும் என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி இருக்கும் படம்தான் இது.

இதில் ஹ்ரி ஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நயன்தாரா கேரக்டரை இப்போ சொல்ல மாட்டாங்களாம்..!

நயன்தாரா கேரக்டரை இப்போ சொல்ல மாட்டாங்களாம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaஅருள்நிதி நடிப்பில் பெரும் ஹிட்டடித்த படம் டிமான்ட்டி காலனி.

இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து, அதர்வா மற்றும் நயன்தாரா இணையும் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கவிருக்கிறார்.

ஆனால் இவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதுகுறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது…

“போலீஸ் வேடத்தில் நயன்தாரா நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை. ஆனால் அவர் கேரக்டர் படு சஸ்பென்ஸ்” என தெரிவித்துள்ளார்.

‘இருமுகன்’ ரீலீஸ் ஆகாததால் வருந்தும் ரசிகர்கள்

‘இருமுகன்’ ரீலீஸ் ஆகாததால் வருந்தும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iru mugan love vikramவிக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இருமுகன் படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

விக்ரம் இரு வேடம் ஏற்றுள்ள நிலையில் ஒன்றில் திருநங்கையாக நடித்துள்ளார்.

இது சயின்ஸ் கலந்த மெடிக்கல் சப்ஜெக்ட் படம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 450 க்கும் மேற்பட்ட அரங்குகளில் இருமுகன் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 95 அரங்குகளிலும், பிரிட்டன், வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால், காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் இப்படம் வெளியாகவில்லை.

இந்த பிரச்சினை ஓய்ந்த பிறகு இருமுகனை கர்நாடகாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அங்குள்ள விக்ரம் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

‘பைரவா’ நிலைமை என்ன.? எங்கே இருக்கிறார்.?

‘பைரவா’ நிலைமை என்ன.? எங்கே இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijayபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் பைரவா.

தற்போது இதன் படப்பிடிப்புக்காக ஆந்திரா மாநிலத்திலுள்ள ராஜமுந்திரியில் முகாமிட்டுள்ளனர்.

அங்கு தயாராகவுள்ள செட்டில் தொடர்ந்து 3 வாரங்களுக்கு படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

அங்குதான் க்ளைமாக்ஸ் காட்சி மற்றும் ஆவேசமான வசன காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.

இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் ஒட்டு மொத்த சூட்டிங்கையும் முடித்துவிடுவார்கள் என கூறப்படுகிறது

‘நீங்கதான் உண்மையான நண்பன்; நலம் விரும்பி…’ – தனுஷ்

‘நீங்கதான் உண்மையான நண்பன்; நலம் விரும்பி…’ – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushஇதுநாள் வரை நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அறியப்பட்ட தனுஷ், ஓரிரு தினங்களாக இயக்குனாராகவும் அறியப்பட்டு வருகிறார்.

ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கும் பவர் பாண்டி என்ற படத்தை இயக்குகிறார்.

இதற்காக பலரும் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வாழ்த்தும்போது…

உங்கள் பெயரை எழுத்து இயக்கம் என்று பார்ப்பதில் சந்தோஷம் அடைகிறேன். கலக்குங்க சார். என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து தனுஷ் கூறியுள்ளதாவது….

“நன்றி பாலாஜி. நீங்கள்தான் என் உண்மையான நண்பன். நலம் விரும்பி.” என குறிப்பிட்டுள்ளார்.

இருமுகன் விமர்சனம்

இருமுகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumugan poster

நடிகர்கள் : விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, ரித்விகா, பாலா, கருணாகரன் மற்றும் பலர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : ஆர்டி. ராஜசேகர்
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீநிவாசன்
இயக்கம் : ஆனந்த் சங்கர்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : ஷிபுதமீன்ஸ்

கதைக்களம்…

ஒரு 75 வயது முதியவர் தனி ஆளாக இந்தியன் எம்பஸியின் அலுவலக ஊழியர்களை தாக்குகிறார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகிறது.

அவரால் எப்படி சாத்தியமானது? அவர் பயன்படுத்திய ஹின்ஹேலரில்  இவ்வளவு பெரிய சக்தி உருவானது எப்படி? என அறிய விக்ரமின் உதவியை நாடுகின்றனர்.

விக்ரமை நாட என்ன காரணம்? அவரின் பிளாஷ்பேக் என்ன? அந்த ஹின்ஹேலரி பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டர்களில் தன்னை மீண்டும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

உடல் அமைப்பில் மாற்றம் இல்லையென்றாலும் உடல் அசைவில் மாற்றம் செய்து ரசிக்க செய்திருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்கிறார். ஹின்ஹேலரை முகர்ந்த பின் வரும் சண்டைகளில் கூடுதல் பலம் தெரிகிறது.

லவ் கேரக்டரில் ஜொலிக்கிறார் விக்ரம். ஆனால் வளவளவென பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது.

Iru-Mugan-Vikram

வெறும் கிளாமர் மட்டுமில்லை தன்னாலும் ஆக்ஷனிலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நயன்தாரா.

இவரின் கேரக்டர் ஜஸ்ட் ஒரு பாடலில் முடிந்துவிடுகிறதே என் சோர்வடையும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் வந்து சூடேற்றுகிறார்.

திறமையான நடிகை நித்யா மேனனை இதில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவர் இறக்கும்போது கண்கலங்க வைக்கிறார்.

கபாலி ரித்விகாவின் நிலைமை அந்தோ பரிதாபம்.

நாங்களும் இருக்கிறோம் என நாசர், கருணாகரன், தம்பிராமையா வந்து செல்கின்றனர்.

nayan nithya irumugan

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் படம் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் ஒரு மெலோடி தேவையா?

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா சிறைச்சாலை முதல், ஹேலேனா பாடல்கள் வரை கண்களுக்கு விருந்து.

படத்தின் ப்ளஸ்…

  • விக்ரமின் இரு மாறுபட்ட நடிப்பு
  • வித்தியாசமான வில்லன் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள்
  • மெடிக்கல் துறை மற்றும் எக்ஸ்போர்ட் துறையில் நடக்கும் ஊழல்களை சுட்டி காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்….

  • லவ்வுல்ல சருக்கலாம். இந்த லவ்வையே சருக்க வச்சிட்ட போன்ற வசனங்கள் அடிக்கடி வருவது சலிப்பை தட்டுகிறது.
  • அகிலன் மற்றும் லவ் – இரு குரலிலும் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
  • இன்று செல்போன் உபயோகிப்பவர்கள் பாஸ்வேர்ட்டு போட்டு லாக் செய்துதான் வைக்கின்றனர். ஆனால் விக்ரம் ஈசியாக மற்றவரின் போனை எடுத்து பேசுவது எப்படி எனத் தெரியவில்லை.
  • முதல்பாதி விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இந்த இருமுகனுக்கு ஹின்ஹேலரை விட எக்ஸ்ட்ரா பவர் கிடைத்திருக்கும்.

irumugan love

இயக்குனர் பற்றி…

அரிமா நம்பியில் கவனம் ஈர்த்த ஆனந்த் சங்கர் இதில் வித்தியாசமான கதையை கையாண்டு இருக்கிறார்.

ஸ்பீடு ஹின்ஹேலர் என்ற புதிய டெக்னிக்கை சொல்லி, அதற்கு ஹிட்லரின் வரலாறையும் சொல்லியிருப்பது கவனிக்க வைக்கிறது.

ஒரு ஸ்டைலிஷ்ஷான கதையை சில லாஜிக் மீறல்களோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இருமுகன்… ஸ்பீடு மகன்

 

More Articles
Follows