புத்தாண்டில் ரசிகர்களை மரண மட்டையாக்க சிம்பு-ஓவியா கூட்டணி

புத்தாண்டில் ரசிகர்களை மரண மட்டையாக்க சிம்பு-ஓவியா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Oviya teamsup for Marana Mattai album as Newyear Treatநடிகர் சிம்பு இசையில் சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் இவரது இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து 2018 புத்தாண்டை முன்னிட்டு புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் சிம்பு.

‘மரண மட்டை’ என்று பெயர் வைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் பாடலை நடிகை ஓவியா பாடியிருக்கிறார்.

இந்த பாடலை நாளை 2018 புத்தாண்டு தினத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Simbu and Oviya teamsup for Marana Mattai album as Newyear Treat

தனிக்கட்சி தொடங்குவது உறுதி…: ரஜினிகாந்த் பேச்சின் முழுவிவரம்

தனிக்கட்சி தொடங்குவது உறுதி…: ரஜினிகாந்த் பேச்சின் முழுவிவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Finally Rajinikanth announced his Political entry todayகடந்த 25 வருடங்களாக பேசப்பட்டு வந்த ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இன்று டிசம்பர் 31ஆம் தேதி விடை கிடைத்துள்ளது.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை தன் ரசிகர்கள் முன் அறிவித்தார்.

விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

” கடமையை செய் பலனை நான் பார்த்துகொள்கிறேன் என்று மஹாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சொல்கிறார்.

யுத்தம் செய் ஜெயித்தால் நாடாளுவாய், தோற்றால் வீர சொர்க்கம். யுத்தம் செய்யாமல் சென்றால் உன்னை கோழை என்று சொல்வார்கள்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்.

நான் பில்ட்அப் கொடுக்கவில்லை. அது தானாக ஆகிவிட்டது. எனக்கு அரசியல் கூட பயமில்லை, மீடியாவைப் பார்த்தால்தான் பயம்.
பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை.சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார்.

இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும். சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான காலம் குறைவாக இருப்பதால், அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து நிற்பேன்.

அதுக்கு முன்னால் வருகிற பாரளுமன்ற தேர்தல் சமயத்தில் நான் முடிவெடுப்பேன்.

நான் அரசியலுக்கு பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வரவில்லை. அதெல்லாம் நான் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில் ஆயிரம் மடங்கு தமிழக மக்களாகிய நீங்கள் எனக்கு தந்துள்ளீர்கள்.

பதவியின் மேலும் ஆசை இல்லை, அப்படியிருந்திருந்தால் 1996 களிலேயே அந்த நாற்காலி என்னை தேடி வந்தது ஆனால் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன்.

45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை 68 வயதில் எனக்கு பதவி ஆசை வருமா ? நான் ஆன்மிகவாதியன்று சொல்ல தகுதியற்றவனா ? அப்படியெனில் நான் அரசியலுக்கு வரக் காரணம் என்ன ?

நாட்டில் அரசியல் மிகவும் கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர் கெட்டுவிட்டது.

கடந்த ஒர் ஆண்டில் தமிழ் நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலை குனிய வைத்தது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுக்கவில்லையெனில் என்னை வாழவைத்த தமிழ் தெய்வங்களுக்கு ஜனநாயக முறையில் நல்லது செய்ய ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகும் வரை துரத்தும்.

அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது. சிஸ்டம் மாற்றப் பட வேண்டும். உண்மையான, வெளிப்படையான சாதி, மதச் சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரவேண்டும் என்பதே என் நோக்கம் விருப்பம்.

அது என் போன்ற தனி ஒருவனால் முடியாது. மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை. தேர்தலில் ஜெயிப்பது எளிதான விஷயமல்ல, நடுக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது.

ஆண்டவனாகிய அவன் அருளும், மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே அது சாத்தியம். இது இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

பழைய காலத்தில் ராஜாக்கள் அன்னிய நாட்டினரை கொள்ளை அடிப்பார்கள் ஆனால் இங்கு சொந்த நாட்டில் சொந்த மக்களையே கொள்ளை அடிக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும், கட்சியின் அடிப்படையிலேயே இம்மாற்றத்தை கொண்டு வரவேண்டும். கட்சியில் ஆனி வேர் தொண்டர்கள் தான். அவர்கள் இல்லாமல் முதலமைச்சரே இல்லை. எனக்கு தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும்.

பொது நலத்திற்கு பாடுபடும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள தப்பு செய்தால் தட்டிக் கேட்கும் காவலர்கள் தான் எனக்கு வேண்டும். தகுந்த வேலைக்கு தகுதியுள்ள ஆட்களை நியமித்து வேலை சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வையிடும் சாதரண பிரஜை, மக்களின் பிரதிநிதி தான் நான்.” என்று அவர் கூறினார்.

Finally Rajinikanth announced his Political entry today

rajini stills at fans meet

ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த ஹாலிவுட் படங்களை தயாரித்தவர் காலமானார்

ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த ஹாலிவுட் படங்களை தயாரித்தவர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Hollywood movie Producer Sunanda Murali Manohar expired

பல தமிழ், இந்தி, ஆங்கில படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார்.

தென்னிந்திய திரையுலகில் இருந்து சென்று Indian Summer, Blood Stone, Tropical heat, Inferno, Jungle boy, Provoked போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர்.

இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான Blood Stone, ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான Provoked ஆகிய வெற்றிப் படங்ளை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம், ஆகிய திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்தவர். இந்தியில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே படத்தின் தயாரிப்பாளர்.

Rajinis Hollywood movie Producer Sunanda Murali Manohar expired

விஜய் இல்லையென்றால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது..: இமான்

விஜய் இல்லையென்றால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது..: இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Imman says thanks to Actor Vijayதன் இனிமையான மெலோடி பாடல்களால் தமிழக இசைப் பிரியர்களை கட்டி போட்டுள்ளவர் இமான்.

இவர் இசையமைத்துள்ள ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் என்ற படம் இவரது 100வது படமாகும்.

இமானின் இந்த சாதனையை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில்…

விஜய் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர் தமிழன் படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் டிக் டிக் டிக் வரை என்னுடைய பயணம் அமைந்திருக்காது என பதிவிட்டுள்ளார்.

Music composer Imman says thanks to Actor Vijay

D.IMMAN‏Verified account @immancomposer

Indeed speechless! Glory to God! Thanks to all the music lovers,musicians,singers,sound technicians,directors and producers! Who had been an integral part in reaching my musical 100 with #TikTikTik Deeply Humbled by your continuous support over years! #DImman100

On this eve I exhibit my gratitude towards our Thalapathy @actorvijay ! Without him n the whole team of #Thamizhan My musical journey to #TikTikTik wouldn’t have been possible! Not only as a music composer but also to croon a song in #Thamizhan for #MaattuMaattu #DImman100

ரசிகர்களை கவர்ந்த ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்

ரசிகர்களை கவர்ந்த ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya in jimikki kammal song danceமோகன்லால் நடித்த வெளிப்பாண்டிடே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற பாடல் ஜிமிக்கி கம்மல்.

இப்பாடலுக்கு நீங்கள் நடனம் ஆடி யூடிப்பில் வெளியிடலாம் என படக்குழுவினர் அறிவித்தனர்.

அப்போது கேரளாவில் உள்ள கல்லூரி பேராசிரியை ஷெரில் என்ற பெண் தன் தோழி மற்றும் மாணவிகளுடன் ஆடிய பாடலை இணையத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து இந்த பாடல் இந்தியளவில் டிரெண்ட் ஆனது.

தற்போது இப்பாடலை கொஞ்சம் மாற்றி ஓவியா அழகாக ஆடியுள்ளார்.

அது சரவணா ஸ்டோஸ் தங்க நகை கடையின் விளம்பர பாடலாகும்.

இந்த பாடல் ரசிகர்கள் மிகவும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

என் ராசியால்தான் விஷால்-தனுஷ்-விமல் தயாரிப்பாளரானார்கள்.. : பூபதிபாண்டியன்

என் ராசியால்தான் விஷால்-தனுஷ்-விமல் தயாரிப்பாளரானார்கள்.. : பூபதிபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director boopathy pandianதனுஷ் நடித்த தேவதையை கண்டேன், திருவிளையாடல், விஷால் நடித்த பட்டத்து யானை, மலைக்கோட்டை படங்களை இயக்கியவர் பூபதி பாண்டியன்.

இவர் தற்போது இயக்கியுள்ள மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார் விமல்.

இப்படம் வருகிற 2018 ஜனவரி 12 வெளியாகவுள்ள நிலையில் இன்று பட பாடல்கள் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அப்போது இயக்குனர் பூபதி பாண்டியன் பேசியதாவது…

“எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார் போல தெரிகிறது.

அதன்பின் தான் விமல் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது.. என் டைரக்சனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.

அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு படத்தயாரிப்பில் உறுதுணையாக நின்ற சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம்.

ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம்.. ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தோம்.

இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது உதவியாளராக சேர்த்துவிட்டேன்.. இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா-நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார்.

More Articles
Follows