தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மார்ச் 18 தற்போது சென்னை நேரு ஸ்டேடியம் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவினை விஜய் டிவி புகழ் பாலா மற்றும் விஜே ரம்யா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
அரங்கத்திற்குள் நுழைந்த சிம்புவை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பத்து தல.. கெத்து தல.. என்பது போல மாஸாக வந்து இறங்கி ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
அதன் பின்னர் இசை நாயகன் ஏ ஆர் ரகுமான் அரங்கத்திற்குள் நுழைந்தார்.
அப்போது ரஹ்மானை கண்டதும் அவரை வரவேற்று படத்தின் நாயகர்கள் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் ரஹ்மானின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இவர்கள் அருகில் நின்ற நாயகி பிரியா பவானி சங்கர், ஏ ஆர் ரகுமானை வரவேற்று கை குலுக்கினார்.
Simbu and gautham karthik got blessings from AR Rahman