தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலியில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடலை எழுதி பாடி, ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதித்தவர் அருண்ராஜா காமராஜ்.
இந்நிலையில் மதுரை சூப்பர் ஜெயண்ட் கிரிக்கெட் அணிக்காக ஒரு பாடலை இவர் பாடியுள்ளார்.
இப்பாடலை சிம்புவுடன் இவர் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.
‘ஆட்டைக்கு ரெடியா’ என்று தொடங்கிற இப்பாடல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்பாடல் தமிழ்நாடு பிரிமியம் கிரிக்கெட் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு அணிகள் விளையாடவுள்ள இப்போட்டியானது விரைவில் தொடங்கவுள்ளது.
இப்பாடலுடன் இந்த அணியின் லோகோ மற்றும் வீரர்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.