மீண்டும் *மன்மதன்*; இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முடிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற மாபெரும் தோல்வி படத்திற்கு சிம்பு துவண்டு விடுவார் என பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால் எவரும் எதிர்பாராத வகையில் மீண்டும் உடம்பை பிட்டாக்கி கை நிறைய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

அண்மையில் ஒப்புக் கொண்ட மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தையும் முடித்துக் கொடுத்து விட்டார்.

விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவிட்டு அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தன் திரையுலக வாழ்வில் முக்கிய திருப்பத்தை கொடுத்த மன்மதன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் சிம்பு.

இப்படத்தை அவரே இயக்கி தயாரித்து நடித்து உருவாக்கவுள்ளாராம்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என சொல்லப்படுகிறது.

Simbu aka STR plans to direct Manmadhan sequel

த்ரிஷா இல்லன்னா ஐஸ்வர்யா ராஜேஷ்; *சாமி2* படத்தில் மாமியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாமி படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் (சாமி2) என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படத்தையும் ஹரி இயக்க, விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார்.

ஆனால் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா இத்தில் நடிக்க மாட்டேன் என விலகிவிட்டார்.

இந்நிலையில் த்ரிஷா இல்லேன்னா என்ன? அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைப்பேன் என ஹரி முடிவு எடுத்துவிட்டார்.

அவரை மடிசார் மாமியாக்கி படக்காட்சிகளை சூட் செய்து விட்டார். தற்போது அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பிரபு, சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பாக சிபு தயாரித்து வருகிறார்.

Aishwarya Rajesh replaces Trisha in Saamy Square

அஜித்-சிம்பு பட இயக்குனருடன் இணையும் சுந்தர்.சி-யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்த பிறகு, இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது வி.இசட்.துரையின் இயக்கத்தில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அஜித்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது படங்களில் விவேக், வடிவேலு, சந்தானம், காமெடி நடிகர்களுடன் களம் இறங்கும் சுந்தர்.சி இந்தப் படத்தில் யோகிபாபுவை இணைத்துக் கொண்டுள்ளாராம்.

அருள்நிதி படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகும் அரவிந்த் சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி.

அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் இணையவிருப்பதாக நம் தளத்தில் செய்தி பதிவிட்டு இருந்தோம்.

எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இவர் டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவிய கல்லூரி காதலைப் பற்றிய படம் *பார்த்திபன் காதல்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “

இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து..

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் “ பார்த்திபன் காதல் “ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.

கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது என்றார் இயக்குனர் வள்ளிமுத்து.

ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி. DF Tech

இசை – பில்லா

பாடல்கள் – யுகபாரதி

எடிட்டிங் – ஸ்ரீகாந்த் NB

கலை – S.M.சரவணன்

ஸ்டன்ட் – மகேஷ்

நடனம் – விஜிசதீஷ்

புகைப்பட கலை – ஜோஷ்வா

தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

திரைக்கதை, வசனம் – S.குமரேசன் – ஜோ ஜார்ஜ்

கதை, இயக்கம் – வள்ளிமுத்து ( இவர் ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரித்த என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய P.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் )

அச்சமின்றி பட இயக்குனருடன் இணையும் அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த் சாமி நடிப்பில் `சதுரங்க வேட்டை-2′, `நரகாசூரன்’ மற்றும் `செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

தற்போது செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ படத்திலும், மாமங்கம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதன்பின்னர் இமயவர்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.

`என்னமோ நடக்குது’, `அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அரவிந்த்சாமி.

இவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

More Articles
Follows