தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இரண்டு வாரத்திற்கு கட்-அவுட் வேண்டாம், பாலாபிஷேகம் வேண்டாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிம்பு.
அதன் பின்னர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள், பெற்றோருக்கு டிரெஸ் எடுத்துக் கொடுங்கள் என்றார்.
சிம்புவின் பேச்சை சிலர் வரவேற்றாலும் பலர் கிண்டல் செய்தனர். உங்களுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? என கேலி செய்தனர்.
இதனால் பெரிய பெரிய கட்-அவுட் வைங்க. பேனர் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டா அண்டாவா பால் ஊற்றுங்கள் என்று புது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இரண்டு செய்திகளும் நம் தளத்தில் வெளியானது.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிம்புவுக்கு கட்-அவுட் வைத்து, தவறி விழுந்து இறந்த மதன், என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல, அவரது இல்லத்திற்கு இன்று (ஜன.,28, 2019) சென்றார் நடிகர் சிம்பு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது…. எனது ரசிகர் இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்தேன். அவன் இறந்த சமயத்தில் அப்பாவையும், நண்பர் மகத்தையும் அனுப்பி வைத்தேன்.
அந்த ரசிகன் இறந்த பாதிப்பு எனக்குள் இருந்தது. அதனால் அப்போதே எழுமின் படத்தின் இசை வெளியீட்டிலேயே, பேனர், பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது சரியாக மக்களிடம் போய் சேரவில்லை.
அதனால் தான் மீண்டும் ஒரு முறை பஎன் படம் ரிலீஸின் போது சொல்ல முடிவெடுத்தேன். அதன்படி பாலாபிஷேகம் செய்யாதீர்கள், பெற்றோருக்கு, புடவை, வேஷ்டி எடுத்து கொடுங்கள் என்றேன். அதுவும் சரியாக சேரவில்லை.
ஒரு விஷயத்தை நெகட்டிவ்வாக கூறினால் தான் மக்களிடம் போய் சேரும் என்று நினைத்து, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, பெரிய பேனர் வையுங்கள், கட்-அவுட் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டாவில் பாலை ஊற்றுங்கள், வேற லெவலில் செய்யுங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டேன்.
தயவு செய்து அந்த வீடியோவை திருப்பி பாருங்கள். பாக்கெட்டில் உள்ள பாலை அண்டாவில் ஊற்றுங்கள் என்று தான் சொன்னேன். எனக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை.
நான் மாற்றி பேசும் ஆள் கிடையாது. எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று தான் பேசுகிறேன்.
இதுதான் உண்மை. ஒருவேளை எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
கட்-அவுட்டிற்கு ஊற்றுவதற்கு பதிலாக வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள். மனிதர்களுக்கு, கஷ்டப்படுகிற மக்களுக்கு கொடுங்கள்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் சொன்னதை, மறப்பவன் நான் கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்கு கவலையில்லை.
நல்லதை யார் சொன்னாலும் எடுத்து கொள்ளலாம். எது எப்படி என்றாலும் உண்மை ஜெயிக்கும். எனக்கு ரசிகர்களின் அன்பு போதும், வேறு எதுவும் வேண்டாம்.” என உருக்கமாக பேசினார் சிம்பு.
Simbu aka STR meet fans family and Apollogy on Paal Abhishegam