சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜுரம்.? ரசிகர்கள் அதிர்ச்சி… பிஆர்ஓ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜுரம்.? ரசிகர்கள் அதிர்ச்சி… பிஆர்ஓ விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth with pro riazகொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையால் அண்ணாத்த சூட்டிங்கில் கலந்துக் கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

மேலும் தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சி பணிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.

அண்மையில் கூட தீபாவளியன்று தன் போயஸ் தோட்ட வீட்டில் இருந்த படியே ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்.

கொரோனா பிரச்னையால் தனது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கூறியதாவது… “யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

அவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Shocking rumour about Rajinikanth’s health clarified

ஒருவழியாக ‘ஈஸ்வரன்’ பட பாம்பு காட்சியை ஏற்றுக் கொண்ட வனத்துறை

ஒருவழியாக ‘ஈஸ்வரன்’ பட பாம்பு காட்சியை ஏற்றுக் கொண்ட வனத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eswaran snake shootingசுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வரன்’ பட வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது.

இதில் பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சியை பார்த்து, அதில் ஒர்ஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழ, வன இலாகா அதிகாரிகள் படக் குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இயக்குநர் சுசீந்திரன், வனதுறை அதிகாரி கிளமண்ட் எடிசன் அவர்களிடம் நேரில் சென்று, சிலம்பரசன் நடிக்கும் “ஈஸ்வரன்” படத்தில் ரப்பர் பாம்புவை வைத்து, எவ்வளவு நுணுக்கமாக தத்ரூபமாக படமாக்கினோம் என்பதை, கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளுடன் வன அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் அவர்களிடம் கேட்டபோது…

“பொதுவாக விலங்கினங்களை வைத்து படமாக்குவதற்கு வன துறையினரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

‘ஈஸ்வரன்’ படக்குழுவினர், ரப்பர் பாம்பை வைத்து கம்பியூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் ( CG ) எப்படியெல்லாம் சினிமாடிக் டிரிக் செய்தோம் என்று விளக்கினார்கள்.

அதை பார்த்த பின்பு தான் அந்த காட்சியில் இடம் பெற்றது நிஜ பாம்பு இல்லை என்று புரிந்தது… உறுதியானது.

இந்த காட்சி எடுத்தது குறித்து எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று கருத்து தெரிவித்தார் அதிகாரி.

இப்படத்தை, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ‘D’ கம்பெனி சார்பில் K.V.துரை தயாரித்துக் கொடுக்கிறார்.

Animal welfare board accepts Eeswaran team CGI explanations

ஜெயலலிதா தோழி சசிகலா பயோபிக்..; தேர்தலுக்கு முன்பு சர்ச்சையை உருவாக்கும் ராம் கோபால் வர்மா

ஜெயலலிதா தோழி சசிகலா பயோபிக்..; தேர்தலுக்கு முன்பு சர்ச்சையை உருவாக்கும் ராம் கோபால் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பம்பாய் நிழலுலகத்தை பற்றிய, தாவூத் இப்ராஹிமைப் பற்றிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா.

அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசி வருகிறார்.

வருடத்துக்குக் குறைந்தது இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

கடுமையான மோசமான விமர்சனங்கள் வந்தாலும் அதையே தனக்கு சாதகமாக்கி வருகிறார்.

சமீபத்தில் ‘க்ளைமேக்ஸ்’, ‘நேக்கட்’, ‘த்ரில்லர்’ என தொடர்ந்து ஆபாசம் நிறைந்த படங்களை இயக்கினார்.

இதற்காக ஒரு ஓடிடி தளத்தையும் உருவாக்கினார்.

தற்போது ‘சசிகலா’ என்கிற பெயரில் திரைபப்டம் எடுக்கபோவதாக அறிவித்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில்…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

“சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது.

தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும். அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

லக்‌ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி தான் சசிகலாவை தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படம் ஜே, எஸ் மற்றும் ஈ பி எஸ் ஆகியோருக்கு இடையே இருந்த உறவைப் பற்றியக் கதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ram Gopal Varma announces biopic on Sasikala

sasikala biopic

தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்

தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹர ஹர மஹாதேவகி பட மூலம் தமிழ் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி ஜெயக்குமார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி பலான பட இயக்குனர் என பெயர் பெற்றார்.

இந்த படத்தில் ஆபாச காட்சி வசனங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனால் அப படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருந்தார் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்.

‘இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது.

இந்த படமும் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த பட தலைப்பை அறிவித்துள்ளார்.

Mr VIRGIN என்று பெயரிட்டுள்ளார்.

இதிலும் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்.

அடுத்து என்ன கொடுமையோ..??

Irandam Kuthu director’s next film is titled Mr Virgin

‘பிக்பாஸ்’ பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..; ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

‘பிக்பாஸ்’ பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..; ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Balajiவிஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4.

இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான நடிகரும் & மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர் மீது (M/s. Razzmatazz Group & Miss Tamil Nadu and Miss South India) ஜோ மைக்கேல் பிரவின் என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு.

பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார்.

பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவிப்பு.

Bigg Boss fame Balaji Murugadoss in trouble as pageant owner demands apology

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்!

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Editor Selva marriageதமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா RK.

பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்
பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

சினிமாவில் எதையாவாது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காத்திருந்திருக்கிறார்கள்.

பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக செல்வா ஒரு இடத்தை எட்டிய பிறகு திருமணம் செய்வது குறித்து இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

லட்சியத்திற்காக பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருந்து கரம்பிடித்துக்கொண்ட தம்பதிகளை வாழ்த்தினார்கள்.

Popular tamil film editor Selva gets married

More Articles
Follows