தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.
சாமியை தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
“எல்லாரும் கோயிலுக்கு வருவது போல நானும் கடவுளை தரிசிக்க கோவிலுக்கு வந்தேன். விஜய் படம் வாரிசு நல்ல ஓடணும் நீங்கள் எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இந்த படத்தில் கூறப்பட்டுள்ள குடும்ப செண்டிமெண்ட் குறித்து கேட்டபோது படம் பார்க்கவில்லை.
அடுத்த படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு இந்த படத்தை பற்றி தெரியல.. அடுத்த படத்தை பற்றி கேட்காதீங்க..” என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு.. “எனக்கு ஒண்ண்ணுமே தெரியாது” என்ற பதிலளித்தார்.