‘அயோத்தி’ அற்புதம்.. இதுதான் உண்மையான வெற்றி – சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் நடிகர் சாந்தனு பேசியதாவது…*

இந்த விழாவிற்கு அப்பா சார்பில் வந்துள்ளேன். அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அப்பா இந்தப்படம் வந்தபோதே என்னை இந்தப்படத்தை பார் என்று சொன்னார். படம் பற்றி புகழ்ந்து வாழ்த்தினார்.

நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அத்தனை அற்புதமான படைப்பு. வெளியாகி மூன்று நாட்களில் வெற்றி விழா கொண்டாடும் காலத்தில் இது உண்மையான வெற்றி.

சசிகுமார் அண்ணா உண்மையில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி விட்டார். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாத்துகள்.

shanthanu speech in ayothi 50 days celebration

‘அயோத்தி’ படத்தில் நான் நடிக்க ஆசைப்பட்டு கேட்டேன்… – அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது…*

நான் செம்பி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்தப்படமும் ஆரம்பித்தது. கதை கேட்டு நான் நடிக்கவா என்று ரவி சாரிடம் கேட்டேன். ஆனால் சசி சார் நடிக்க போகிறார், அவர் தான் இந்தக்கதைக்கு சரியாக இருப்பார் என்றார்.

இந்தக் கதைக்கு சசி சாரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. சசி சார் நிஜத்தில் அத்தனை சாந்தமானவர், எல்லோரையும் சமமாக நடத்துபவர். இந்தப் படத்தில் இறுதிக்காட்சியில் அழ வைத்து விட்டார். சசி சாருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்திக்கும் வாழ்த்துகள். மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.

ashwin kumar speech in ayothi 50 days celebration

அன்பு செய்வதை ‘அயோத்தி’ நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது – ரோகிணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம்.

Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது.

இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.

இவ்விழாவினில்

*நடிகை ரோகிணி பேசியதாவது…*

படம் பார்த்தேன்…
இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு, இப்போதைய நேரத்திற்கு மிகமிக அவசியமான ஒரு படம். இயற்கை போல் அன்பு செய்வதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது இந்தப்படம்.

இதில் உழைத்த அத்தனை பேரையும் மேடையேற்றி வாழ்த்தும் இந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. இப்படி ஒரு கதையை நம்பி தயாரித்த தயாரிப்பாளர், உடன் நின்ற நடிகர் சசிகுமார் இருவருக்கும் என் நன்றிகள், வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

Rohini speech in ayothi 50 days celebration

இசைராஜா-வுடன் 3வது முறை சந்திப்பு.; அல்போன்ஸ் புத்திரன் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் வெற்றிப் படங்களால் பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன்.

தமிழில் அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.

அல்போன்ஸ் புத்திரன் தமிழில் தனது அடுத்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

மேலும் பல தமிழ் நட்சத்திரங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து. அதில், “சில நாட்களுக்கு முன் “தமிழ் இசை ராஜா” மேஸ்ட்ரோ இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோபிக்சர்ஸுடன் நான் நடிக்கும் படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்.” என பதிவிட்டுள்ளார்.

Alphonse Puthuren met Ilaiyaraaja for the third time

தசரா OTT ரிலீஸ்.; மைனரு வேட்டி கட்டி.. பாட்டை இனிமே ஓடிடியில் பாருங்க மக்களே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான படம் ‘தசரா’.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், தீக்‌ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருகிறது.

மேலும் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘தசரா’ படத்தை ஏப்ரல் 27-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘Dasara’ to stream on OTT from April 27th

குற்றாலத்தில் ‘ரகு தாத்தா’ உடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த டிசம்பர் 2022 இல், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹோம்பலே பிலிம்ஸின் ‘ரகு தாத்தா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கி வருகிறார். இதன் மூலம் ஹொம்பலே பிலிம்ஸ் தனது முதல் தமிழ்த் திரைப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் குற்றாலத்தில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

Keerthy Suresh resumes shooting for ‘Raghu Thatha’ in Courtallam

More Articles
Follows