தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபு ரகுமான் நடித்த திரைப்படம் ‘ஒருவர் வாழும் ஆலயம்’. அழகான காதல் கதையுடன் உருவாக்கப்பட்ட இந்த படம் 35 வருடங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தப் படத்தை இயக்கியவர் ஷண்முகப்பிரியன்.
தனது இளது பருவத்திலேயே சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதியவர் இவர்.
அவர் எழுதிய “விளிம்பு” எனும் நாடகமே அவர் கைவண்ணத்தில் “உறவாடும் நெஞ்சம்”என்ற திரைப்படமாக 1976ல் உருப்பெற்றது.
அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்காக மாநில விருது பெற்றார்.
அவரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முதலில் வெளிவந்த “ஒருவர் வாழும் ஆலயம்” எனும் திரைப்படம் 1980களில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக விளங்கியது.
வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா போன்ற 50க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஷண்முகப்ரியன்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் சண்முகப்பிரியன் இன்று பிப்ரவரி 2ஆம் தேதி காலமானார்.
Shanmugabriyan, the director of ‘Oruvar Vaazhum Aalayam’, has passed away