RC15 UPDATE கதை திருடியதாக ஷங்கர் – கார்த்திக் சுப்புராஜுக்கு எழுத்தாளர் சங்கம் நோட்டீஸ்

RC15 UPDATE கதை திருடியதாக ஷங்கர் – கார்த்திக் சுப்புராஜுக்கு எழுத்தாளர் சங்கம் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்க தில்ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இவர்களுடன் ஜெயராம், பகத் பாசில் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் திரில்லர் கதையாக இப்படம் உருவாகிறதாம்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை முடித்து 2023ஆம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த செல்லமுத்து எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்… “ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் கதை தன்னுடையது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே இயக்குநர் ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எழுத்தாளர் சங்கம்.

Shankar and Karthik Subbaraj face allegations of story theft over RC 15

சூர்யா வழியில் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கும் யுவன் சங்கர் ராஜா

சூர்யா வழியில் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன் பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனையொட்டி நடந்த விழாவில் சிம்பு தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முன்னணி (ஆ.வி) ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது…

திறமையான ஏழை மாணவர்களை படிக்க வைக்க யுவன் கல்வி அறக்கட்டளை தொடங்க உள்ளேன்.

அதுபோல ஆதரவற்றோர் இல்லத்தையும் முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்துல இணைக்கும் அறக்கட்டளையாக இது இருக்கும்.” என்றார்.

‘அகரம் பவுண்டேசன்’ என்ற அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஏற்கெனவே உதவி வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Music Director Yuvan Shankar Raja’s good initiative

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்..? விஜயபிரபாகரன் சொன்ன விசேஷ தகவல்.; பிரேமலதா செல்லாதது ஏன்.?

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்..? விஜயபிரபாகரன் சொன்ன விசேஷ தகவல்.; பிரேமலதா செல்லாதது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் தன் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரின் உடல் நலம் குறித்த தகவல் இதோ…

தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…,

“திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய 6 மாதங்களாவது முடிந்திருக்க வேண்டும். இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன.

தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம்.

பள்ளிகள், கல்லூரிகள் திறந்தநிலையில் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் விஜயகாந்த் சென்னை வந்தவுடன் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

கூடுதல் தகவல்…

விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதா செல்லவில்லை. அது ஏன்? பலரும் கேள்வி கேட்ட நிலையில் அதன் தகவல்கள் இதோ…

பிரேமலதா தனது பாஸ்போர்டை புதுபிக்கும் போது, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கடந்த 2017ஆம் ஆண்டு தொடர்ந்த குற்ற வழக்கை மறைத்ததாக கூறி அவரின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவிட்டார்.

அதன்படி பாஸ்போர்ட் சரண்டர் செய்யப்பட்டது.எனவே பிரேமலதாவால் விஜயகாந்துடன் வெளிநாடு செல்ல முடியவில்லை.

இந்த நிலையில், பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரேமலதா சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நெல்லையில் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக கீழ் நீதிமன்றதில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை.

பிரேமலதா வழக்கு தொடர்பாக எந்த தகவலையும், மறைக்கவில்லை.

வெளிநாட்டில் சிகிச்சை பெறும் அவரது கணவருக்கு உடனிருந்து மனுதாரர் உதவ வேண்டியுள்ளது.

எனவே பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பிரேமலதா எங்கும் தப்பி செல்லமாட்டார் என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், “பிரேமலதாவின் பாஸ்போர்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

Vijaya Prabakaran about Vijayakanth health

இனிமே OMG-ன்னா ‘OH MY GHOST’… அதிர்ச்சி தர ரெடியாகும் சன்னி லியோன்

இனிமே OMG-ன்னா ‘OH MY GHOST’… அதிர்ச்சி தர ரெடியாகும் சன்னி லியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS சார்பில் D. வீரா சக்தி & K. சசிகுமார் வழங்க, வரலாற்று பின்னணியில், நடிகை சன்னி லியோன் நடிக்கும், ஹாரர் காமெடி திரைப்படம், “OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட்”.

நடிகை சன்னி லியோன் தமிழ் திரையுலகில், வரலாற்று பின்னணியில், உருவாகும் ஹாரர் காமெடி படம் மூலம், தன் திரைப்பயனத்தை துவங்குகிறார்.

இப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் பரபரப்பை கிளப்பி வரும் இப்படத்திற்கு “OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட் ” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

VAU Media Entertainment, சார்பில் D. வீரா சக்தி படத்தலைப்பு குறித்து கூறியதாவது..

“பொதுவாக, OMG (OH MY GOD) என்பது இன்று அனைவரிடமும் வழக்கத்தில் புழங்ககூடிய ஒரு முக்கியமான வார்த்தை பிரயோகம் ஆகும்.

மேலும் உரையாடலின் போது ஆச்சரியமான எந்த ஒன்றையும் தெரிவிக்கும் போது OMG (OH MY GOD) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

எங்கள் திரைப்படமும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தரும் பல விசயங்களை கொண்டிருப்பதால், OMG – OH MY GHOST, தலைப்பு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம்.
ரசிகர்கள் ஒரு மாறுபட்ட பேயை இப்படத்தில் பார்ப்பார்கள்.

இப்படம் இதுவரையிலும் நாம் திரையில் கண்டிராத ஒரு வித்தியாமான ஹாரர் அனுபவத்தை தரும் என்றார்.

சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்க துரை மற்றும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘சிந்தனை செய்’ படத்தை இயக்கி, புகழ் பெற்ற இயக்குநர் R.யுவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS சார்பில், D. வீரா சக்தி & K. சசிகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

“OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட் ” படத்தின் படப்பிடிப்பு மிக கோலகலமாக நடந்து வருகிறது. விரைவில் நடிகை சன்னி லியோன் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

SUNNY LEONE STARRER HORROR-COMEDY WITH HISTORICAL BACKDROP TITLED ‘OH MY GHOST’ (OMG)

இஷான் வரலட்சுமி நடிக்க இரத்த தடங்களுடன் ‘தத்வமசி’ கான்செப்ட் போஸ்டர் வெளியீடு

இஷான் வரலட்சுமி நடிக்க இரத்த தடங்களுடன் ‘தத்வமசி’ கான்செப்ட் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோக் திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஒன்றின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

“நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும்.

பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் தத்வமசி ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது.

தலைப்பு குறிப்பிடுவது போல, தத்வமசி ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரமாண்ட படமாக இருக்கும். தலைப்பைப் போலவே கான்செப்ட் போஸ்டரும் சுவாரசியமாக உள்ளது. குண்டலி (ஜாதகம்) போன்று லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது.

“மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன.

மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

தத்வமசி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் அகில இந்திய படமாகும்.

விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள தத்வமசி, அதன் புதிய கதை களத்தால் மக்களை பரவசப்படுத்தும்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ராதாகிருஷ்ணா தெலு தனது RES என்டர்டெயின்மென்ட் LLP நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

சாம் சிஎஸ் இசையமைக்கிறார், ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய. மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் படத்தில் பணிபுரிகிறார், சந்திரபோஸ் பாடல் வரிகளை இயற்றுகிறார்.

மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.

நடிப்பு: இஷான், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஹரிஷ் உத்தமன்

தொழில்நுட்ப குழு:

எழுத்து & இயக்கம்: ரமணா கோபிசெட்டி
தயாரிப்பாளர்: ராதாகிருஷ்ணா தெலு
பேனர்: RES என்டர்டெயின்மென்ட் LLP.
இசை: சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு: ஷ்யாம் கே நாயுடு
படத்தொகுப்பு: மார்த்தாண்ட் கே வெங்கடேஷ்
பாடல்கள்: சந்திரபோஸ்
ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Actress Varalaxmi’s next film is titled Thathvamasi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாகும் விஜய்சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாகும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை பிரபல இயக்குனர்கள் பலர் இணைந்து தொடங்கியுள்ளனர் என்பதை பார்த்தோம்.

மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இந்த புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இதில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாக முன்னனி இயக்குனர் ஒருவர் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பான அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கலாம்.

கமல்ஹாசன் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

முன்னணி நாயகனாக இருந்த போதும் ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ படங்களில் விஜய்சேதுபதியை வில்லனாக்கி பார்த்தார் லோகேஷ்.

எனவே தற்போது முதன்முறையாக விஜய்சேதுபதியை ஹீரோவாக்கவுள்ளார் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi plays lead role in Lokesh next film

More Articles
Follows