தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 1996 ஆண்டில் நடிகர் அஜித் தன் பெற்றோர் பயணம் செல்வதற்காக ரூ.6 லட்சம் தேவை என கேட்டு பெற்றதாகவும் இதுவரை திருப்பி தரவில்லை என செவன்த் சேனல் நிறுவன மாணிக்கம் நாராயணன் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் அந்த பணத்தை நான் வாங்கவில்லை என அஜித் ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த பணத்தை கொடுத்தற்கான வங்கி ஆதாரங்களையும் தற்போது வரை வைத்துள்ளதாக மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.
அதே போல பின்னர் மற்றொரு படத்திற்கு அட்வான்ஸாக ரூ. 12 லட்சம் கொடுத்து அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு படம் நடித்து தருகிறேன் என சொல்லி அந்த வாக்கை காப்பாற்றவில்லை எனவும் அத்தொகையை அஜித் திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆக மொத்தம் இந்த ரூ.18 லட்சத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தரவில்லை என தெரிவித்துள்ளார்.
அஜித் மீது வழக்குப் போடப் போவதில்லை எனவும் அவரே தன் நிலை உணர்ந்து பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அவர் முன்னணி் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
அஜித் சமையல் செய்வது மட்டுமே நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மனிதர்களை மதித்தால் மட்டுமே நல்லவராக போற்றப்படுவார்கள்.
அஜித் இன்று முன்னணி நடிகராக இருக்கலாம். ஆனால் காலம் முழுவதும் அப்படி இருக்கப் போவதில்லை என கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.
Seventh Channel producer blames Actor Ajith