பட்டைய கிளப்பும் செந்தில் குமரன்.; Go.. Go.. Govindha… Goes Viral

பட்டைய கிளப்பும் செந்தில் குமரன்.; Go.. Go.. Govindha… Goes Viral

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் இசை ஆல்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், பல இசை ஆல்பங்கள் வெளியாக தொடங்கியிருப்பதோடு, பெரிய பெரிய இசை நிறுவனங்களும் தமிழில் இசை ஆல்பங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், கனடா நாட்டில் வாழும் தமிழரான செந்தில் குமரன் ஒரு நல்ல பாடகர். தனது இசை ஆல்பங்கள் மூலம் உலக தமிழகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

கனடா நாட்டில் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆலோசககார பணியாற்றி வருகிறார். இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அவர் அங்குள்ள தமிழ் மற்றும் கனடா நாட்டு இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடல்களுக்கு கவர் பாடல்களை பாடி, சொந்தமாக பல இசை ஆல்பங்களையும் தயாரித்து வீடியோ பதிவு செய்து அப்பாடல்களை தனது Minnal Music YouTube சேனலில் வெளியிட்டு வருகிறார்.

செந்தில் குமரனின் குரலுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகி வருவதோடு, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல பாடகர்களும் அவரது பாடல்களை கேட்டு பாராட்டி வருகிறார்கள். பிரபல இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வெளியிட்டு வரும் செந்தில் குமரன், தற்போது நவீன் வரிகளில் “கோ…கோ…கோவிந்தா…” என்ற பாடலை வைஷாலி என்னும் பாடகியோடு பாடி தயாரித்து வெளியுட்டுள்ளார்.

மின்னல் மியூசில் YouTube சேனலில் வெளியாகியுள்ள “கோ…கோ…கோவிந்தா…” பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்பாடலை படமாக்கிய விதமும் பலரால் பாராட்டு பெற்று வருகிறது.

மக்களை உற்சாகப்படுத்தும் மற்றும் மகிழ்விக்கும் விதமாக உருவாகியுள்ள இப்பாடல், மிகப்பெரிய பழமையான பாய்மர கப்பலில் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் நடன கலைஞர்கள் என்று பெரிய Team ஐயே வைத்து செந்தில் குமரன், அப்பாடலை ஒரு பிரமாண்ட திரைப்படத்தின் பாடல் காட்சியைப்போல் படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

பிரம்மாண்டமான காட்சியமைப்பு, ஆட்டம் போட வைக்கும் மெட்டு! – செந்தில் குமரனின் தயாரிப்புகளுக்கு தனி முத்திரை உண்டு!

Song Link: https://youtu.be/LVbHU8GQqOY

Senthil Kumaran’s Go Govindha goes viral

கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொண்ட குடும்பம் எடுத்த விபரீத முடிவு

கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொண்ட குடும்பம் எடுத்த விபரீத முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜீவா சுந்தர் நடிக்கும் புதிய திரைப்படம் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”

கதைச்சுருக்கம்: ஒரு ஆண் என்ன காரணத்துக்காக பயப்படுவான், எப்படி இருந்தால் பயப்படுவான்,

கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம் எடுக்கும் விபரீத முடிவு தான் இப்படத்தின் கதை .

கதாநாயகனாக ஜீவா சுந்தர் மற்றும் கதாநாயகியாக நிரஞ்சனா அறிமுகமாகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரித்திகா ,லிசி ஆன்டனி , ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி ,பேபி ஷைனி , அம்பேத்கார், ராஜேஸ்வரன் ,நிவேஷ், அட்சயா ஆகியோர் அறிமுகமாகின்றனர் .

இத்திரைப்படம் திருச்சி ,பெரம்பலூர் ,கீரனூர், அரியலூர் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது .

இசையமைப்பாளர் வசந்த் கைவண்ணத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது.

மேலும் பல திருப்பங்கள் கொண்டு உருவாகும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது .

தொழிட்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஜெரோம் சேவியர்

இசை -வசந்த்

ஒளிப்பதிவு -பிரவீன்

பாடல்கள்- சுதாகர்

வசனம் -சுதாகர் ,ஜெரோம்

நடனம்- மணி

எடிட்டர்- வினோத்

கலை- நிவேஸ்

மக்கள் தொடர்பு- செல்வரகு

தயாரிப்பு- ஏ .ஜஸ்டின் ,கே ஆர் குணா

Its just a beginning story expalains how corporate company influence middle class family

‘ரைட்டர்’ படத்தை பார்த்த உடன் மக்களே பேசுவார்கள்.. – ‘தன்னம்பிக்கை’ தங்கராஜ்

‘ரைட்டர்’ படத்தை பார்த்த உடன் மக்களே பேசுவார்கள்.. – ‘தன்னம்பிக்கை’ தங்கராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .

இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது .

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின், சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பா .ரஞ்சித் பேசியவை ,

தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம்.

முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை.

அதிதி-க்கு சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஐந்து படங்கள் தயாரிக்கலாம் என பேசி முடிவெடுத்தோம்.

கதை தேர்வில் நான் பிடிவாதமாக இருந்தேன். கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும் .தவறான அரசியல் பேசக்கூடாது .

எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மக்களுக்கு செல்லும் படம் சரியான படமாக இருக்கவேண்டும் என நினைத்தேன்.

ரைட்டர் படத்தை தயாரிக்க நான் முன்வந்த காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும் , மனதுக்கு நெருக்கமாகவும் இருந்தது தான் . இப்படம் சிறப்பாக இருக்கும் என கதை படிக்கும்போதே எனக்கு தோன்றியது.

படப்பிடிப்பின்போது இப்படம் டெக்னிக்கலாகவும் படம் அருமையாக வரும் என நினைத்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது.

இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனை சந்திக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையை படித்துவிட்டு கதை சூப்பர். கண்டிப்பாக பண்ணலாம் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக தங்கராஜ் ஆக வாழ்ந்துள்ளார் என்று சொல்லவேண்டும். மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

நடிகர் சமுத்திரக்கனி பேசியவை

தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் , நடிகர் நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றி. உழைக்கும் ஆட்களைக் கண்டால் அப்படி ரசிப்பேன். காலையில் சூட்டிங் நேரமாகவே சென்றுவிடுவேன் .பிராங்கிளின் , கேமராமேன் பிரதீப் வேலைப்பாடுகளை கூர்ந்து கவனிப்பேன்.

ரைட்டர் படம் அருமையான ஒரு குழு சேர்ந்து உழைத்த படம். ஒரு கூட்டு முயற்சி ஒரு கூட்டு படைப்பை இந்த படத்தில் நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் தனது படமாக நினைத்து இந்த படத்தில் வேலை பார்த்தனர்.

உண்மையான உழைப்பை நாம் பேச தேவையில்லை. திரையில் பார்த்த உடன் மக்களே பேசுவார்கள். மிகப் பெரிய வெற்றி அடையும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் பிராங்க்ளின் பேசியவை,

இது எனக்கு முதல் மேடை .நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .முதல் நன்றி பா .ரஞ்சித் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அடிப்படை முறைகளையும் ரஞ்சித் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். சமுத்ரகணி அவர்களிடம் கதையை கூறியவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது .

கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என தெரிவித்தார். இப்படத்தில் தங்கராஜ் கதாபாத்திரம் உயிர் கொண்டு வர காரணம் சமுத்திரக்கனி அவர்கள்தான்.

இப்படத்திற்கு என் காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார். கோவிந்து எனது சிறந்த நண்பர். கேமராமேன் பிரதீப்பிற்கு தனியே நன்றி சொல்லத் தேவையில்லை .என் குடும்பத்தில் ஒருவர்.

இப்படத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் ஒரு நல்ல படத்தை உருவாக்க உதவி செய்துள்ளனர் . அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Actoro Samuthirakani talks about writer movie

திமுக.வின் வாரிசு அரசியலையும் சிம்புவையும் ‘மாநாடு’ மேடையிலேயே கண்டித்த விஜய் தந்தை

திமுக.வின் வாரிசு அரசியலையும் சிம்புவையும் ‘மாநாடு’ மேடையிலேயே கண்டித்த விஜய் தந்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் & எஸ்ஜே. சூர்யா நடித்து வெளியான படம் ‘மாநாடு’.

இதில் எஸ்.ஏ.சி, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

யுவன் இசையமைத்து இருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்பட நன்றி & வெற்றி விழா சென்னையில் இன்று (21.12.21) நடைபெற்றது.

இதில் எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜீ, யுவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் சிம்பு, கல்யாணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இதில் எஸ்ஏசி பேசியதாவது…

“இந்த படம் தமிழ் மக்களுக்கும் ஏற்ற வகையில் இருந்தது.

முதல்வர் கொல்லப்பட்டால் இஸ்லாமியருக்கு அவப்பெயர் ஏற்படும் என சொல்லப்பட்டது.

அதுபோல் வாரிசு அரசியல் பற்றி பேசப்பட்டது. (திமுகவை மறைமுகமாக கலாய்த்தார்)

மேலும் அவர் பேசியதாவது…

இது ஒரு உண்மையான வெற்றி. ஆனால், இப்பட நாயகன் இங்கு இல்லாதது ஏன் என எனக்குப் புரியல.

என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் கொண்டாடியிருக்கனும். மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செஞ்சிருக்கார். அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட இந்த ஹீரோ இங்கே இருக்கவேண்டும்.

சூட்டிங்கில் எப்படி இருந்தோமோ படத்தின் வெற்றிக்குப் பிறகும் அப்படியே இருக்கனும்.”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்

Director SAC speech at Maanaadu success meet

கார்த்தியை அடுத்து சிம்புவுடன் டூயட் பாடப் போகும் டைரக்டர் ஷங்கர் மகள்

கார்த்தியை அடுத்து சிம்புவுடன் டூயட் பாடப் போகும் டைரக்டர் ஷங்கர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

இதில் மதுரை பாஷையில் பேசி தேன்மொழி கேரக்டரில் நடித்து வருகிறார்.

வழக்கம்போல மதுரையை கதைக்களமாகக் கொண்டு இந்த படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.

இந்த நிலையில் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க அதிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்த படம் தவிர சிம்பு கைவசம் ‘வெந்து தணிந்தது காடு’, பத்து தல ஆகிய படங்கள் உள்ளன.

Aditi Shankar joins STR for new film

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜரானார்

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜரானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அறிந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2016ல் ‛பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அந்த நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின.

இதில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்த பிரபலங்கள் விவரங்கள் தெரியவந்தது.

நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அந்த நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இரண்டு முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனால் இன்று அவர் ஆஜர் ஆவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களின் பெயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rai was summoned by ED in connection with the Panama Papers case.

More Articles
Follows