தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சென்ராயன்.
‘மூடர் கூடம்’ என்ற படத்தில் இவர் காமெடியனாக அறியப்பட்டாலும் ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் வில்லனாக அடையாளம் காணப்பட்டார்.
2019ல் கமல் நடத்திய ‘பிக்பாஸ் சீசன் 2’-ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் சென்ராயன்.
இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக புகழ் போட்டோகிராஃபர் ராமசந்திரன் நடத்திய போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றார் சென்ராயன்.
இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அதில் விளக்கியுள்ளார்.
கோமாளியாக இருந்துவிட்டால் கொரோனா நம்மை தொற்றிக் கொ(ல்)ள்ளும் எனவே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளனர்.
கொரோனா தொற்றை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்ற விழிப்புணர்வுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறினார் போட்டோகிராஃபர் எல். ராமச்சந்திரன்.
எல். ராமச்சந்திரன் பற்றிய சிறுகுறிப்பு..
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் அருகேயுள்ள வலங்கைமான் ஊரில் பிறந்தவர் எல். ராமசந்திரன்.
தனது படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளார். கடுமையாக உழைத்து தற்போது படிப்படியாக முன்னேறி வருகிறார்.
உலகளவில் பிரபலமான பிளே பாய், மேக்ஸிம் உள்ளிட்ட மேகஸின்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றி புகழ்பெற்றவர்.
யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகளை மிக அழகாக அவர்களே வியக்கும் வண்ணம் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.
2020ல் கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த ஒரு மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக விஜய்சேதுபதிக்கும் ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்
ராமச்சந்திரன்.
Sendrayan comali photoshoot by photographer L Ramachandran